|
|||||
பிரபல தமிழ்த்திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்! |
|||||
பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 1939-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி இயக்குனர் மகேந்திரன் பிறந்தார். பத்திரிகையாளர் மட்டுமின்றி சிறந்த கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என பன்முக திறன் கொண்டவர். முள்ளும் மலரும், ஜானி, உதரிப்பூக்கள், கை கொடுக்கும் கை, மெட்டி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். அதற்கு முன்னரே சிவாஜி கணேசனின் தங்கப்பதக்கம், ஆடுபுலி ஆட்டம், ரிஷி மூலம் காளி போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார். 26 படங்களுக்கு கதையும், 14 படங்களுக்கு திரைக்கதையும், 27 படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். திரைப்படங்களில் வசனங்களின் அளவைக் குறைத்து காட்சிகளின் மூலம் பேச வைத்தவர் என்கிற பெருமைக்கு உரியவர். கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் நடித்த தெறி, நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தும் உள்ளார். இயக்குநர் மகேந்திரன் கடந்த 27-ம் தேதி மதியம் 12 மணியளவில் உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில்,அவர் தீவிர சிகிச்சை பிரிவில் முழு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இயக்குநர் மகேந்திரனை காண நெருக்கமான நண்பர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் . இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயக்குநர் மகேந்திரன் தனது 79 வயதில் காலமானார். தமிழ்த்திரையுலகின் பெயரை உலகறியச் செய்த இயக்குனர் மகேந்திரன் மறைவிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது. |
|||||
by Mani Bharathi on 03 Apr 2019 2 Comments | |||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|