LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- சுந்தர ராமசாமி

நவீன எழுத்தாளனின் தலைவிதி

 

கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டை ஒட்டி நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் தொடக்கவுரையை நிகழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நானும் இதில் பங்கு பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த என் நண்பர் டாக்டர். பத்மனாபன் அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல தலைப்புக்களில் பல்வேறு அறிஞர்கள் இங்கு கட்டுரைகள் படிக்க இருக்கிறார்கள். கல்வி, வரலாறு, திருக்கோயில்கள், பண்டைய இலக்கியம், தற்கால இலக்கியம், கலைகள், நாட்டார் கலைகள், இதழியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற புலவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்து இந்தக் கருத்தரங்கிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். எழுத்தாளர் மாநாட்டைச் சார்ந்து நடக்கும் கருத்தரங்கம் என்பதால் இன்றைய தமிழ்ப் பின்னணியில் நவீன எழுத்தாளனின் தலைவிதி பற்றி ஒருசில வார்த்தைகள் கூறுவது தவறாக இருக்காது என்று நம்புகிறேன்.
தமிழ் மொழி உலக மொழிகளில் மிக மேலானது என்பது நமக்குத் தெரியும். மேலான மொழி என்றால் என்ன ? எந்த மொழியிலும் ஒருவர் பேச அந்த மொழி அறிந்த மற்றொருவருக்குப் புரிகிறது. ஒருவர் எழுத மற்றொருவர் படித்துத் தெரிந்து கொள்கிறார். ஓசையில் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளும் இருக்கின்றன. ஓசையிலும் எழுத்து வடிவிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளும் இருக்கின்றன. கருத்துப் பரிவர்த்தனை எல்லா மொழிகளிலுமே நிகழ்ந்து கொண்டிருக்கும் போது தமிழின் தனிச் சிறப்பு என்ன ? ஏன் அதை வளர்ச்சியடைந்த மொழி என்கிறோம் ? அதன் தொன்மையைச் சொல்லி ஏன் பெருமிதம் கொள்கிறோம் ?
மொழி மேலானது என்றால் அந்த மொழியில் மேலான இலக்கியங்கள் இருக்கின்றன என்று அர்த்தம். சங்கக் கவிஞர்களும் தொல்காப்பியனும், வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும், பாரதியும் மேலானவற்றை, உலக இலக்கியங்களோடு ஒப்பிடத் தகுந்தவற்றை எழுதியிருக்கிறார்கள். இவை போன்ற படைப்புக்களைக் கழித்துவிட்டால் பரிமாற்றத்திற்கு மட்டுமே உபயோகப்பட்டு நிற்கும் ஒரு சாதனமாகத் தமிழ் சுருங்கிவிடும்.
நேற்று வாழ்ந்த தரமான படைப்பாளிகள் நம் மொழியையும் கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் வழியில் தோன்றியிருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் தங்களால் இயன்ற அளவு தரத்தைக் கூட்டி நம் மொழியையும் கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்தி வருகிறார்கள். உலக இலக்கியங்களுடன் ஒப்பிடத்தகுந்த படைப்புகள் தமிழில் குறைவாகவும் இந்திய இலக்கியங்களுடன் ஒப்பிடத்தகுந்த படைப்புக்கள் தமிழில் நிறைவாகவும் வந்துகொண்டிருக்கின்றன.
ஆக, இந்த எழுத்தாளர்கள்தாம் நம் மொழியின் வளத்தை, கலாச்சாரத்தின் செழுமையை, சிந்தனைகளின் கூர்மைகளைத் தமிழில் உருவாக்கி வருகிறார்கள். இவர்களை மட்டுமே நான் எழுத்தாளர்கள் என்று அழைக்கிறேன். இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். சோரம் போகாமல், சமரசங்களில் சரியாமல், இழிவுகளை ஏற்க மறுத்து, புறக்கணிப்புகளால் மனம் குன்றாமல் உயர்வானவற்றையும் உன்னதமானவற்றையும் இயன்ற வரையிலும் இவர்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பார்வை சார்ந்து, ஏற்று நிற்கும் தத்துவங்கள் சார்ந்து, தங்கள் நம்பிக்கைகள் சார்ந்து, இவர்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு வகையினர் மொழியைத் தங்கள் சுய லாபங்களுக்காக, பணம், புகழ், பரிசு ஆகிய மூன்று சுய லாபங்களுக்காக, பயன்படுத்தி சந்தைக்கு ஏற்ப சரக்குகளைத் தயாரித்து அவற்றை விற்றுத் தங்கள் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள். லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட பிரபல இதழ்கள் மூலம் இவர்களின் தயாரிப்புகள் பொழுதுபோக்கு வாசகனை எட்டுகின்றன. எந்த மேலான விதிகள் சார்ந்தும் இவர்கள் ஒழுகவில்லை. இதழின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இவ்விதழ் ஆசிரியர்கள் என்னும் வர்த்தகர்கள் எந்த விதமான சரக்கைக் கொள்முதல் செய்ய விரும்புகிறார்களோ அதற்கேற்ப சரக்கைத் தயாரித்துக் கொடுக்கக்கூடிய வணிக உற்பத்தியாளர்கள் இவர்கள். மறைமுகமான அல்லது நேரடியான ஆபாசம், பாலுணர்வைத் தூண்டும் தந்திரங்கள், தமிழ் வாழ்க்கையில் பார்க்கக் கிடைக்காத காதல் காட்சிகள், நிஜமான வாழ்க்கைக்கு எதிராகப் பொய்யான வாழ்க்கை, உண்மையான பிரச்சனைகளுக்கு எதிராகப் போலியான பிரச்சனைகள், மெய்யான தீர்வுகளுக்கு எதிராக கற்பனையான தீர்வுகள் இவையே அவர்களுடைய வழிமுறைகள். இவர்களுக்கு வருமானம் உண்டு. புகழ் உண்டு, அரசியல் செல்வாக்கு உண்டு. வானொலியிலும் டி.வியிலும் சந்தர்ப்பங்கள் உண்டு. பல்கலைக் கழகங்கள் ஆதரிக்கின்றன. ஆராய்ச்சி மாணவர்கள் இவர்களுடைய ஜோடனைகளை ஆராய்ச்சி செய்து பட்டம் பெறுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்களைத் தேடி பரிசுகள் வருவதற்காக நெடுங்காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வணிக எழுத்தாளர்கள் பரிசுகளுக்குக் கொடுக்க வேண்டிய அரசியல் விலை தந்து உடனுக்குடன் அவற்றைப் பெற்று முந்தியில் சொருகிக் கொண்டு போகிறார்கள். அத்துடன் மூன்றாம் தர வணிகத் தயாரிப்புகள்தான் இன்று நூல் நிலையங்களையும் பெரிதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன.
மேலானவற்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளன் ஐந்நூறு அல்லது ஆயிரம் பிரதிகள் விற்கும் சிறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறான். தமிழ் மக்களின் எண்ணிக்கை 5 கோடிக்கு மேல் என்கிறார்கள். மேடையில் முழங்குகிறவர்கள் இன்னும் அதிகமாகக் கூடச் சொல்கிறார்கள். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. தமிழ் எழுத்தாளன் ஒருவன் அவன் மேலானவற்றைப் படைக்க வேண்டும் என்று எண்ணிவிட்டான் என்றால், ஐம்பது வருடம் விடாப்பிடியாக எழுதிய பின்பும் அவனால் இரண்டாயிரம் வாசகர்களைச் சென்றடைய முடியாது. அவன் தனியாக சிற்றிதழ்களுக்கு வெளியே நின்று ஒரு புத்தகம் எழுதினால், அதுவும் தரமான புத்தகம் என்றால் ஆயிரம் பிரதிகள் விற்க ஐந்து வருடங்கள் வரையிலும் ஆகும். ஐம்பது வருடங்கள் தொடர்ந்து எழுதிய பின்பும் அவன் ஒரு சமூக சக்தியாக உருவாவது இல்லை. திட்டமிட்ட புறக்கணிப்புகள் மூலம் அவன் குரல்வளை நெரிகிறது. இருப்பினும் அவன் எழுதிக் கொண்டிருக்கிறான். தரத்தைக் காப்பாற்ற முன்னும் தமிழ் எழுத்தாளனின் சோதனைகள் மிகக் கொடுமையானவை. எனக்குத் தெரிந்து உலக மொழிகள் எவற்றிலும் மதிப்பீடுகளையும் தரங்களையும் போற்றும் எழுத்தாளன் இந்த ஒரே காரணத்திற்காக இவ்வளவு மோசமான சோதனைகளை எதிர்கொள்வதில்லை.
ஆனால், காலம் அவ்வளவு கொடுமையாக இல்லை. எழுத்தாளனின் படைப்புக்கள் காலத்தை எதிர்த்து வெல்லும் போது, பொழுதுபோக்கு ஜோடனைகள் காலத்தால் சாகடிக்கப்படுகின்றன. ஆனால் காலத்தின் நடவடிக்கைகள் சாவகாசமானவை. எழுத்தாளனின் ஆயுளோ அதிகமாகவும் இல்லை. பாரதியைப் புறக்கணித்த புலவர்கள் இருந்த இடம் இன்று தெரியவில்லை. பாரதி நின்று கொண்டிருக்கிறார். கல்கி தேய்ந்து கொண்டிருக்கிறார். புதுமைப்பித்தன் வளர்ந்து கொண்டிருக்கிறார். தாம் வாழ்ந்த காலத்தில் மிக மோசமான புறக்கணிப்புகளுக்கும் வசவுகளுக்கும் ஆளான வையாபுரிப் பிள்ளை மறு அவதாரம் எடுத்திருக்கிறார். அவரைத் தூற்றிய புலவர்களின் வாரிசுகள் வையாபுரிப் பிள்ளைக்கு உரிய மதிப்புத் தந்து அவரை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று இப்போது வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். டி.கே.சியின் தமிழ் பற்று, கவிதைப் பற்று, தமிழ் இசைப் பற்று ஆகியவை இன்று தமிழ் வாழ்வின் ஒரு பகுதியாக மலர்ந்து விட்டன. இக் கருத்துக்களை அவர் கூறிவந்த காலங்களில் அவர் மிக மோசமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டி இருந்தது
ஆனால் தன் ஆயுளுக்குப் பின் நிதி வழங்கப்படும் காலத்தை மட்டுமே நம்பி ஒரு எழுத்தாளன் வாழ நிர்ப்பந்திக்கப்படுவது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் இருப்பைக் காட்டவில்லை. அரசியல், கல்வித்துறைகள், இலக்கிய அமைப்புகள், திரைப்படங்கள், சமய நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் வணிக மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டு குறுகிய வழிகளில் செயல்படுவதைப் போற்றும் ஒரு சமூகம் நோயுற்ற ஒரு சமூகம் என்பதில் தவறில்லை. இந்த நோயின் காரணமாக மேலான மதிப்பீடுகள் இன்று முற்றாகச் சரிந்து விட்டன. மட்டுமல்ல தாழ்ந்து கிடக்கும் மதிப்பீடுகள்தான் நடைமுறை சாத்தியமானவை என்ற நியாயமும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. வணிக சினிமாவின் சீரழிந்த மதிப்பீடுகள்தான், தமிழ் அறிவுவாதிகள் என்று கூறிக் கொண்டு நெளியும் அநேகரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அடிப்படையில் இது நிலவுடைமை சமூகத்தின் மதிப்பீடுகள் ஆகும். யார் உண்மையில் அறிவுவாதிகளோ, யார் தரத்திற்காகவும் மேன்மைக்காகவும் நிற்கிறார்களோ அவர்களை மக்களுக்குத் தெரியாது. யார் யாரை மக்களுக்குத் தெரியுமோ அவர்கள் மக்களின் அடிப்படை நாகரிகத்தையே சிதைத்து அந்தச் சிதைவிலேயே தங்கள் குறுகிய நோக்கங்களின் வெற்றிகளில் திளைப்பவர்கள். இப்படிப் பார்க்கும் போது தமிழ் எழுத்தாளனின் தலைவிதியும் தமிழ் சமூகத்தின் தலைவிதியும் ஒன்றுதான். இதுதான் இன்றைய தமிழின் தலையாய பிரச்சனை. இந்தப் பிரச்சனைகளை விரிவாக, மிக ஆழமாக ஆராய்வதுதான் இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் முதல்பட்ச வேலை.

கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டை ஒட்டி நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் தொடக்கவுரையை நிகழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நானும் இதில் பங்கு பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த என் நண்பர் டாக்டர். பத்மனாபன் அவர்கட்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பல தலைப்புக்களில் பல்வேறு அறிஞர்கள் இங்கு கட்டுரைகள் படிக்க இருக்கிறார்கள். கல்வி, வரலாறு, திருக்கோயில்கள், பண்டைய இலக்கியம், தற்கால இலக்கியம், கலைகள், நாட்டார் கலைகள், இதழியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற புலவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்து இந்தக் கருத்தரங்கிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். எழுத்தாளர் மாநாட்டைச் சார்ந்து நடக்கும் கருத்தரங்கம் என்பதால் இன்றைய தமிழ்ப் பின்னணியில் நவீன எழுத்தாளனின் தலைவிதி பற்றி ஒருசில வார்த்தைகள் கூறுவது தவறாக இருக்காது என்று நம்புகிறேன்.


தமிழ் மொழி உலக மொழிகளில் மிக மேலானது என்பது நமக்குத் தெரியும். மேலான மொழி என்றால் என்ன ? எந்த மொழியிலும் ஒருவர் பேச அந்த மொழி அறிந்த மற்றொருவருக்குப் புரிகிறது. ஒருவர் எழுத மற்றொருவர் படித்துத் தெரிந்து கொள்கிறார். ஓசையில் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளும் இருக்கின்றன. ஓசையிலும் எழுத்து வடிவிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளும் இருக்கின்றன. கருத்துப் பரிவர்த்தனை எல்லா மொழிகளிலுமே நிகழ்ந்து கொண்டிருக்கும் போது தமிழின் தனிச் சிறப்பு என்ன ? ஏன் அதை வளர்ச்சியடைந்த மொழி என்கிறோம் ? அதன் தொன்மையைச் சொல்லி ஏன் பெருமிதம் கொள்கிறோம் ?


மொழி மேலானது என்றால் அந்த மொழியில் மேலான இலக்கியங்கள் இருக்கின்றன என்று அர்த்தம். சங்கக் கவிஞர்களும் தொல்காப்பியனும், வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும், பாரதியும் மேலானவற்றை, உலக இலக்கியங்களோடு ஒப்பிடத் தகுந்தவற்றை எழுதியிருக்கிறார்கள். இவை போன்ற படைப்புக்களைக் கழித்துவிட்டால் பரிமாற்றத்திற்கு மட்டுமே உபயோகப்பட்டு நிற்கும் ஒரு சாதனமாகத் தமிழ் சுருங்கிவிடும்.


நேற்று வாழ்ந்த தரமான படைப்பாளிகள் நம் மொழியையும் கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் வழியில் தோன்றியிருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் தங்களால் இயன்ற அளவு தரத்தைக் கூட்டி நம் மொழியையும் கலாச்சாரத்தையும் செழுமைப்படுத்தி வருகிறார்கள். உலக இலக்கியங்களுடன் ஒப்பிடத்தகுந்த படைப்புகள் தமிழில் குறைவாகவும் இந்திய இலக்கியங்களுடன் ஒப்பிடத்தகுந்த படைப்புக்கள் தமிழில் நிறைவாகவும் வந்துகொண்டிருக்கின்றன.


ஆக, இந்த எழுத்தாளர்கள்தாம் நம் மொழியின் வளத்தை, கலாச்சாரத்தின் செழுமையை, சிந்தனைகளின் கூர்மைகளைத் தமிழில் உருவாக்கி வருகிறார்கள். இவர்களை மட்டுமே நான் எழுத்தாளர்கள் என்று அழைக்கிறேன். இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். சோரம் போகாமல், சமரசங்களில் சரியாமல், இழிவுகளை ஏற்க மறுத்து, புறக்கணிப்புகளால் மனம் குன்றாமல் உயர்வானவற்றையும் உன்னதமானவற்றையும் இயன்ற வரையிலும் இவர்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பார்வை சார்ந்து, ஏற்று நிற்கும் தத்துவங்கள் சார்ந்து, தங்கள் நம்பிக்கைகள் சார்ந்து, இவர்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


மற்றொரு வகையினர் மொழியைத் தங்கள் சுய லாபங்களுக்காக, பணம், புகழ், பரிசு ஆகிய மூன்று சுய லாபங்களுக்காக, பயன்படுத்தி சந்தைக்கு ஏற்ப சரக்குகளைத் தயாரித்து அவற்றை விற்றுத் தங்கள் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள். லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட பிரபல இதழ்கள் மூலம் இவர்களின் தயாரிப்புகள் பொழுதுபோக்கு வாசகனை எட்டுகின்றன. எந்த மேலான விதிகள் சார்ந்தும் இவர்கள் ஒழுகவில்லை. இதழின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இவ்விதழ் ஆசிரியர்கள் என்னும் வர்த்தகர்கள் எந்த விதமான சரக்கைக் கொள்முதல் செய்ய விரும்புகிறார்களோ அதற்கேற்ப சரக்கைத் தயாரித்துக் கொடுக்கக்கூடிய வணிக உற்பத்தியாளர்கள் இவர்கள். மறைமுகமான அல்லது நேரடியான ஆபாசம், பாலுணர்வைத் தூண்டும் தந்திரங்கள், தமிழ் வாழ்க்கையில் பார்க்கக் கிடைக்காத காதல் காட்சிகள், நிஜமான வாழ்க்கைக்கு எதிராகப் பொய்யான வாழ்க்கை, உண்மையான பிரச்சனைகளுக்கு எதிராகப் போலியான பிரச்சனைகள், மெய்யான தீர்வுகளுக்கு எதிராக கற்பனையான தீர்வுகள் இவையே அவர்களுடைய வழிமுறைகள். இவர்களுக்கு வருமானம் உண்டு. புகழ் உண்டு, அரசியல் செல்வாக்கு உண்டு. வானொலியிலும் டி.வியிலும் சந்தர்ப்பங்கள் உண்டு. பல்கலைக் கழகங்கள் ஆதரிக்கின்றன. ஆராய்ச்சி மாணவர்கள் இவர்களுடைய ஜோடனைகளை ஆராய்ச்சி செய்து பட்டம் பெறுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்களைத் தேடி பரிசுகள் வருவதற்காக நெடுங்காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வணிக எழுத்தாளர்கள் பரிசுகளுக்குக் கொடுக்க வேண்டிய அரசியல் விலை தந்து உடனுக்குடன் அவற்றைப் பெற்று முந்தியில் சொருகிக் கொண்டு போகிறார்கள். அத்துடன் மூன்றாம் தர வணிகத் தயாரிப்புகள்தான் இன்று நூல் நிலையங்களையும் பெரிதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன.


மேலானவற்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளன் ஐந்நூறு அல்லது ஆயிரம் பிரதிகள் விற்கும் சிறு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறான். தமிழ் மக்களின் எண்ணிக்கை 5 கோடிக்கு மேல் என்கிறார்கள். மேடையில் முழங்குகிறவர்கள் இன்னும் அதிகமாகக் கூடச் சொல்கிறார்கள். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. தமிழ் எழுத்தாளன் ஒருவன் அவன் மேலானவற்றைப் படைக்க வேண்டும் என்று எண்ணிவிட்டான் என்றால், ஐம்பது வருடம் விடாப்பிடியாக எழுதிய பின்பும் அவனால் இரண்டாயிரம் வாசகர்களைச் சென்றடைய முடியாது. அவன் தனியாக சிற்றிதழ்களுக்கு வெளியே நின்று ஒரு புத்தகம் எழுதினால், அதுவும் தரமான புத்தகம் என்றால் ஆயிரம் பிரதிகள் விற்க ஐந்து வருடங்கள் வரையிலும் ஆகும். ஐம்பது வருடங்கள் தொடர்ந்து எழுதிய பின்பும் அவன் ஒரு சமூக சக்தியாக உருவாவது இல்லை. திட்டமிட்ட புறக்கணிப்புகள் மூலம் அவன் குரல்வளை நெரிகிறது. இருப்பினும் அவன் எழுதிக் கொண்டிருக்கிறான். தரத்தைக் காப்பாற்ற முன்னும் தமிழ் எழுத்தாளனின் சோதனைகள் மிகக் கொடுமையானவை. எனக்குத் தெரிந்து உலக மொழிகள் எவற்றிலும் மதிப்பீடுகளையும் தரங்களையும் போற்றும் எழுத்தாளன் இந்த ஒரே காரணத்திற்காக இவ்வளவு மோசமான சோதனைகளை எதிர்கொள்வதில்லை.


ஆனால், காலம் அவ்வளவு கொடுமையாக இல்லை. எழுத்தாளனின் படைப்புக்கள் காலத்தை எதிர்த்து வெல்லும் போது, பொழுதுபோக்கு ஜோடனைகள் காலத்தால் சாகடிக்கப்படுகின்றன. ஆனால் காலத்தின் நடவடிக்கைகள் சாவகாசமானவை. எழுத்தாளனின் ஆயுளோ அதிகமாகவும் இல்லை. பாரதியைப் புறக்கணித்த புலவர்கள் இருந்த இடம் இன்று தெரியவில்லை. பாரதி நின்று கொண்டிருக்கிறார். கல்கி தேய்ந்து கொண்டிருக்கிறார். புதுமைப்பித்தன் வளர்ந்து கொண்டிருக்கிறார். தாம் வாழ்ந்த காலத்தில் மிக மோசமான புறக்கணிப்புகளுக்கும் வசவுகளுக்கும் ஆளான வையாபுரிப் பிள்ளை மறு அவதாரம் எடுத்திருக்கிறார். அவரைத் தூற்றிய புலவர்களின் வாரிசுகள் வையாபுரிப் பிள்ளைக்கு உரிய மதிப்புத் தந்து அவரை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று இப்போது வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். டி.கே.சியின் தமிழ் பற்று, கவிதைப் பற்று, தமிழ் இசைப் பற்று ஆகியவை இன்று தமிழ் வாழ்வின் ஒரு பகுதியாக மலர்ந்து விட்டன. இக் கருத்துக்களை அவர் கூறிவந்த காலங்களில் அவர் மிக மோசமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டி இருந்தது


ஆனால் தன் ஆயுளுக்குப் பின் நிதி வழங்கப்படும் காலத்தை மட்டுமே நம்பி ஒரு எழுத்தாளன் வாழ நிர்ப்பந்திக்கப்படுவது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தின் இருப்பைக் காட்டவில்லை. அரசியல், கல்வித்துறைகள், இலக்கிய அமைப்புகள், திரைப்படங்கள், சமய நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் வணிக மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டு குறுகிய வழிகளில் செயல்படுவதைப் போற்றும் ஒரு சமூகம் நோயுற்ற ஒரு சமூகம் என்பதில் தவறில்லை. இந்த நோயின் காரணமாக மேலான மதிப்பீடுகள் இன்று முற்றாகச் சரிந்து விட்டன. மட்டுமல்ல தாழ்ந்து கிடக்கும் மதிப்பீடுகள்தான் நடைமுறை சாத்தியமானவை என்ற நியாயமும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. வணிக சினிமாவின் சீரழிந்த மதிப்பீடுகள்தான், தமிழ் அறிவுவாதிகள் என்று கூறிக் கொண்டு நெளியும் அநேகரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அடிப்படையில் இது நிலவுடைமை சமூகத்தின் மதிப்பீடுகள் ஆகும். யார் உண்மையில் அறிவுவாதிகளோ, யார் தரத்திற்காகவும் மேன்மைக்காகவும் நிற்கிறார்களோ அவர்களை மக்களுக்குத் தெரியாது. யார் யாரை மக்களுக்குத் தெரியுமோ அவர்கள் மக்களின் அடிப்படை நாகரிகத்தையே சிதைத்து அந்தச் சிதைவிலேயே தங்கள் குறுகிய நோக்கங்களின் வெற்றிகளில் திளைப்பவர்கள். இப்படிப் பார்க்கும் போது தமிழ் எழுத்தாளனின் தலைவிதியும் தமிழ் சமூகத்தின் தலைவிதியும் ஒன்றுதான். இதுதான் இன்றைய தமிழின் தலையாய பிரச்சனை. இந்தப் பிரச்சனைகளை விரிவாக, மிக ஆழமாக ஆராய்வதுதான் இன்றைய தமிழ் எழுத்தாளர்களின் முதல்பட்ச வேலை.

 

by Swathi   on 30 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.