LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…

நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ

வெளியேறிய போது, முன்பு நானும் 

இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு

என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்

கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி

ஞாபகத்தில் எழுகிறது!


முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து

நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட

அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி

எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க

நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான

மாதத் தொகையை மறக்காமல்

அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்

உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்

படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன்

எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை

என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே

செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும்

ஒரு சிறு வேறுபாடு நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…

வாழ்க்கை இதுதானென்று!


நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…


உறவுகள் இதுதானென்று!


இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது.. 

எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில்

அடங்கியுள்ளது..

கவிஞரைப் பாராட்டுவோம்..


by Swathi   on 15 Mar 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
29-Oct-2014 00:41:19 சுப்ரபாரதிமணியன் said : Report Abuse
ஃநல்ல தகவல்கள் சுப்ரபாரதி maNiyan
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.