|
|||||
சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்! |
|||||
சவுதி அரேபியாவில், வீம் அல் தஹீல் என்ற பெண்மணி முதல் முறையாக செய்தி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, "விஷன் 2030" என்ற பெயரில் சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில், பெண்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி, திரையரங்குகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. அங்குள்ள அல் சவுதியா என்னும் தொலைகாட்சியில், பெண் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாலை நேர செய்திகளை, ஆண் வாசிப்பாளருடன் இணைந்து வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. தினசரி இடம்பெறும் துணைச் செய்திகள், காலை செய்திகள், சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் வானிலை அறிக்கைகளை வழங்கும், வீம் அல் தஹீல், முதல் பெண் செய்தியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனை அங்குள்ள அனைவருமே வரவேற்றுள்ளனர். |
|||||
by Mani Bharathi on 25 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|