LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தும் 2013 தமிழிசை விழா மற்றும் மாவீரன் தீரன் சின்னமலை நாட்டிய நாடகம் !!

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை”, தமிழகத்தில் இயங்கும் ‘இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை”யுடன் இணைந்து முதன்முறையாக சென்னையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29ம் தேதி) மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ‘2013 தமிழிசை விழா” என்ற நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது.

 

இந்த ‘2013” தமிழிசை விழாவில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணிவரை பாடகி சுசித்ரா பாலசுப்ரமனியம் அவர்கள் புறநானூற்றுப் பாடல்களையும், பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழிசைப் பாடல்களையும் பாட இருக்கிறார்கள். 

 

அதன்பிறகு, மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைச் சேர்ந்த முனைவர் சுந்தரவடிவேல் வரவேற்புரை நிகழ்த்த, மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் N.சேதுராமன் அவர்கள் தலைமையேற்க இருக்கிறார்கள். 

 

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. K.P.K செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்கள். GEM தொழிற்குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் திரு R.வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்க, வேலூர் VIT பல்கலைக்கழகதின் நிறுவனர் கல்வியாளர் G.விஸ்வநாதன், கோ-ஆப்டெக்ஸ் மேலான் இயக்குநர் திரு.சகாயம் IAS மற்றும் VGP தொழில் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் திரு.V.G. சந்தோசம் ஆகியோர் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.

 

பிறகு, தமிழிசை விழாவின் முக்கிய நிகழ்வாக ”நடராஜ் நாட்டிய வித்யாலயா” வழங்கும் ‘மாவீரன் தீரன் சின்னமை நாட்டிய நாடகம்’ அரங்கேற இருகிறது.  

 

நிறைவு நிகழ்ச்சியாக இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த ”இன்னிசை ஏந்தல்” திருபுவனம் ஆத்மநாதன் நன்றியுரை நிகழ்த்துவார்கள். 

 

தமிழிசை விழாவைக் கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் நடத்திவரும் ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை”, முதன்முதலாக அமெரிக்க்காவிற்கு வெளியே தாய்த்தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தமிழர்கள் வாழ்கின்ற உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற வேண்டும் என வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விரும்புவதாக, அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  .

by Swathi   on 25 Dec 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.