LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

பிடல் காஸ்ட்ரோ

வேலை செய்ய கற்பதைப் போல

ஓய்வெடுக்க கற்பதும் முக்கியமானது.


இன்றைய உலகின் புகழ்மிக்க , செல்வாக்கு மிக்க பெருந்தலைவர் பிடல் காஸ்ட்ரோ ( Fidel Castro ) ஆவார் . பொதுவுடமைப் புரட்சியாளர் மற்றும் பொதுவுடைமை அரசியல்வாதி பிடல் காஸ்ட்ரோ . கியூபா நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியதோடு , அந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றவர் . அவரை கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர் என்றும் புகழ்கின்றனர் . இவர் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று பிரான் என்னும் ஊரில் பிறந்தார் .1945 இல் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் . இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட்வாதியாக மாறினார் . போராட்டங்களின் மூலமும் , பேச்சுத் திறமையாலும் மக்களைக் கவர்ந்தார் . அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி புரட்சிக்கு மக்களை திரட்டினார் .

கியூபாவின் விடுதலைப் போராட்டத்தில் சேகுவேராவும் இணைந்து கொண்டார் . விவசாயிகளையும் , இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்படுத்தினார் . புரட்சி 1958 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது . காஸ்ட்ரோ 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008 வரை அதிபராகவும் பதவிவகித்தார் . கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலராக 1965 இல் பதவி ஏற்றார் . கியூபா நாட்டின் ஆட்சிப் பதவியில் 49 ஆண்டுகள் இருந்த பிறகு தாமே முன்வந்து பதவியைத் துறந்தார் . அமெரிக்கா தனது சி . ஐ . ஏ அமைப்பின் மூலம் பிடல் காஸ்ட்ரோவை 638 முறை கொல்லத் திட்டம் தீட்டியும் அதன் முயற்சிகள் பலிக்கவில்லை .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.