|
||||||||
ஐந்தாம் திருமுறை-3 |
||||||||
5.003.திருவரத்துறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1092 கடவு ளைக்கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை யரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.1
நாம் தொழுவது கடவுளும், பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த, அருட்டிருமேனியுடையவனும், ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே.
1093 கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை
விரும்பொப் பானைவிண் ணோரும் அறிகிலா
அரும்பொப் பானை யரத்துறை மேவிய
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.2
நாம் தொழுவது, கரும்பும், கரும்பினிற் கட்டியும் ஒப்பானும், விரும்பிய பொருளை ஒப்பானும், தேவரும் அறியா அரும்பு ஒப்பானவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய வண்டு போல்வானும் ஆகிய பெருமானையே.
1094 ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை
வேறொப் பானைவிண் ணோரும் அறிகிலா
ஆறொப் பானை யரத்துறை மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.3
நாம்தொழுவது ஏறு ஒப்பானும், எல்லா உயிர்க்கும் இறைவனாகச் சிறந்து நிற்பானும், தேவரும் அறியாநெறி ஒப்பானும், அரத்துறைத் தலத்தை மேவிய உறுபொருளாவானுமாகிய பெருமானையே.
1095 பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை யிளமதி சூடிய
அரப்பொப் பானை யரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.4
நாம் தொழுவது திருவரத்துறையை விரும்பி எழுந்தருளியவனும் பிறை சூடியவனுமாகிய பகல் ஒளியின் பரப்பையும், இருளில் நன்மைபுரியும் வளர்மதியின் வளர்ச்சியினையும், குறும்பையும், அன்புகாரணமாக உண்டாகும் பாலின் சுரத்தலையும் ஒக்கும் முதல்வனையே, பிறரை அன்று.
1096 நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொப் பானை யரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.5
நாம் தொழுவது நெய்யும், நெய்யிற் சுடர் போல் விளங்கும் மெய்யும், பெருவியப்பும் போல்வானும், தேவரும் அறியாதவனும் அரத்துறை யென்னுந் தலத்தை விரும்பிய ஒழுக்க மாவானுமாகிய பெருமானையே.
1097 நெதியொப் பானை நெதியிற் கிழவனை
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொப் பானை யரத்துறை மேவிய
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.6
நாம் தொழுவது நியதி ஆவானும், நியதியின் தலைவனும், விதியாவானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும், விச்சுவாதிகளும் ஆகிய அரத்துறையென்னுந் தலத்தை மேவி உயிர்களுக்குக் கதியாயிருப்பானையே.
1098 புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொப் பானை யரத்துறை மேவிய
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.7
நாம் தொழுவது புனலும், பொருந்தாதார்க்கு மின்னலும். அனலும் போல்வானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும் அரத்துறைத் தலத்துக் கனல் போன்றவனுமாகிய பெருமானையே.
1099 பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொப் பானை யரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.8
நாம் தொழுவது, பொன்னும், பொன்னின் சுடர் போன்ற மின்னலும், அன்னையும் ஒப்பானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும், அரத்துறைத் தலத்து எழுந்தருளியிருந்து தனக்குத் தானே ஒப்பானவனுமாகிய பெருமானையே.
1100 காழி யானைக் கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும ரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.9
நாம்தொழுவது, காழித்தலத்துக் கடவுளும், பெருமையை உடைய விடையூரும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் வல்லோரும் என்று கூறப்படுவோராகிய திருமால் பிரமனுக்கும், ஒடுங்கும் தானமாக உள்ளவருமாகிய திரு அரத்துறை அடிகளையே.
1101 கலையொப் பானைக் கற்றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை யரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.10
நாம் தொழுவது கலையும், கற்றார்க்கமுதும், மலையும் போல்வானும், மலையெடுக்கலுற்ற இராவணனை மணி முடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும், அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே.
திருச்சிற்றம்பலம்
5.003.திருவரத்துறை திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
1092 கடவு ளைக்கடலுள்ளெழு நஞ்சுண்ட உடலு ளானையொப் பாரியி லாதவெம் அடலு ளானை யரத்துறை மேவிய சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.1
நாம் தொழுவது கடவுளும், பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த, அருட்டிருமேனியுடையவனும், ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே.
1093 கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை விரும்பொப் பானைவிண் ணோரும் அறிகிலா அரும்பொப் பானை யரத்துறை மேவிய சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.2
நாம் தொழுவது, கரும்பும், கரும்பினிற் கட்டியும் ஒப்பானும், விரும்பிய பொருளை ஒப்பானும், தேவரும் அறியா அரும்பு ஒப்பானவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய வண்டு போல்வானும் ஆகிய பெருமானையே.
1094 ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை வேறொப் பானைவிண் ணோரும் அறிகிலா ஆறொப் பானை யரத்துறை மேவிய ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.3
நாம்தொழுவது ஏறு ஒப்பானும், எல்லா உயிர்க்கும் இறைவனாகச் சிறந்து நிற்பானும், தேவரும் அறியாநெறி ஒப்பானும், அரத்துறைத் தலத்தை மேவிய உறுபொருளாவானுமாகிய பெருமானையே.
1095 பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா இரப்பொப் பானை யிளமதி சூடிய அரப்பொப் பானை யரத்துறை மேவிய சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.4
நாம் தொழுவது திருவரத்துறையை விரும்பி எழுந்தருளியவனும் பிறை சூடியவனுமாகிய பகல் ஒளியின் பரப்பையும், இருளில் நன்மைபுரியும் வளர்மதியின் வளர்ச்சியினையும், குறும்பையும், அன்புகாரணமாக உண்டாகும் பாலின் சுரத்தலையும் ஒக்கும் முதல்வனையே, பிறரை அன்று.
1096 நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர் மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார் ஐயொப் பானை யரத்துறை மேவிய கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.5
நாம் தொழுவது நெய்யும், நெய்யிற் சுடர் போல் விளங்கும் மெய்யும், பெருவியப்பும் போல்வானும், தேவரும் அறியாதவனும் அரத்துறை யென்னுந் தலத்தை விரும்பிய ஒழுக்க மாவானுமாகிய பெருமானையே.
1097 நெதியொப் பானை நெதியிற் கிழவனை விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார் அதியொப் பானை யரத்துறை மேவிய கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.6
நாம் தொழுவது நியதி ஆவானும், நியதியின் தலைவனும், விதியாவானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும், விச்சுவாதிகளும் ஆகிய அரத்துறையென்னுந் தலத்தை மேவி உயிர்களுக்குக் கதியாயிருப்பானையே.
1098 புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார் அனலொப் பானை யரத்துறை மேவிய கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.7
நாம் தொழுவது புனலும், பொருந்தாதார்க்கு மின்னலும். அனலும் போல்வானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும் அரத்துறைத் தலத்துக் கனல் போன்றவனுமாகிய பெருமானையே.
1099 பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர் மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார் அன்னொப் பானை யரத்துறை மேவிய தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.8
நாம் தொழுவது, பொன்னும், பொன்னின் சுடர் போன்ற மின்னலும், அன்னையும் ஒப்பானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும், அரத்துறைத் தலத்து எழுந்தருளியிருந்து தனக்குத் தானே ஒப்பானவனுமாகிய பெருமானையே.
1100 காழி யானைக் கனவிடை யூருமெய் வாழி யானைவல் லோருமென் றின்னவர் ஆழி யான்பிர மற்கும ரத்துறை ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.9
நாம்தொழுவது, காழித்தலத்துக் கடவுளும், பெருமையை உடைய விடையூரும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் வல்லோரும் என்று கூறப்படுவோராகிய திருமால் பிரமனுக்கும், ஒடுங்கும் தானமாக உள்ளவருமாகிய திரு அரத்துறை அடிகளையே.
1101 கலையொப் பானைக் கற்றார்க்கோ ரமுதினை மலையொப் பானை மணிமுடி யூன்றிய அலையொப் பானை யரத்துறை மேவிய நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. 5.003.10
நாம் தொழுவது கலையும், கற்றார்க்கமுதும், மலையும் போல்வானும், மலையெடுக்கலுற்ற இராவணனை மணி முடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும், அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|