|
||||||||
ஐந்தாம் திருமுறை-44 |
||||||||
5.044.திருவாமாத்தூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதர்.
தேவியார் - அழகியநாயகியம்மை.
1506 மாமாத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூரர னேயரு ளாயென்றென்
றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே. 5.044.1
தமக்குள்ளே பெரும் பூசல் கொண்டவராகிய திருமாலும் பிரமனும் ஆணவ மயக்கம் கொண்டு தாமாகத் தேடியும், பெருமானின் திருவடியடையும் திருமுடியையும் காண்கிலர்; "ஆமாத்தூர் அரனே! அருள்வாயாக" என்று பலமுறை இன்பமுறக் கூவியே இறையானைக் கண்டார்.
1507 சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச்
சிந்தி யாதவர் தீவினை யாளரே. 5.044.2
காலை மாலை ஆகிய சந்திகளில் வணங்கப் படுவானும், யோகநெறி தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும், தேவர்களால் தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம்மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர்.
1508 காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான்
போமாத் தையறி யாது புலம்புவேன்
ஆமாத் தூரர னேயென் றழைத்தலும்
தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே. 5.044.3
காமமும் பொருளுமாகிய கார்வலையிலே பட்டுப்போகும் நெறியை அறியாமற் புலம்புகின்ற அடியேன் "ஆமாத்தூர் அரனே!" என்று அழைத்தலும், தேமாவின் இனிய கனி போலப் பெருமான் தித்தித்தனன்.
1509 பஞ்ச பூத வலையிற் படுவதற்
கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை
நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்
வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே. 5.044.4
ஐம்பெரும் பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண் நினைந்தேன்; அந்நினைப்பு என்னை எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன; காண்பீராக.
1510 குராமன் னுங்குழ லாளொரு கூறனார்
அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர்
இராம னும்வழி பாடுசெய் யீசனை
நிராம யன்தனை நாளும் நினைமினே. 5.044.5
குரவமலர்கள் நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும், பாம்பு நிலைபெற்ற சடையனும், திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு செய்யப் பெற்ற ஈசனும், நிராமயனும் ஆகிய பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக.
1511 பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும்
அத்த னையணி யாமாத்தூர் மேவிய
முத்தி னையடி யேனுள் முயறலும்
பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே. 5.044.6
பித்தேறியவனும், பெரிய தேவர்களால் தொழப் படும் தலைவனும், அழகு பொருந்திய ஆமாத்தூரை விரும்பிப் பொருந்திய முத்துப் போல்வானும் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தே முயன்று உள்குதலும், அன்பு என்னும் வெள்ளம் பரவி எழுவதாயிற்று; காண்பீர்களாக.
1512 நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி னான்குழற் கோலச் சடையிலோர்
ஆற்றி னானணி யாமாத்தூர் மேவிய
ஏற்றி னான்எமை யாளுடை யீசனே. 5.044.7
எம்மை ஆளுடைய இறைவன், திருநீற்றினால் நிறைந்த திருமேனி உடையவனும், நேரிழையை ஒரு கூற்றில் உடையவனும், அழகு நிறைந்த குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில் விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன்.
1513 பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்
கண்ணித் தாகு மமுதினை யாமாத்தூர்
சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர்
கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே. 5.044.8
பண்ணினை உடைய பாடல்களைப் பாடித்தன்னை அன்புசெய்யும் திறம் உடையவர்களுக்கு இனிக்கும் அமுது போல்வானும், ஆமாத்தூரில் பொருந்தியவனும், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு மிகநெருங்கிக் கண்ணிலுள்ள கருமணிப் பாவை போன்றவனுமானவனைக் காண்பீர்களாக!.
1514 குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
மிண்ட ரோடெனை வேறு படுத்துய்யக்
கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத்
தண்டனாரிட மாமாத்தூர் காண்மினே. 5.044.9
குண்டர்களும், மயிற்பீலிகளைக்கொள்ளும் குணமில்லாத மிண்டர்களுமாகிய சமணர்களோடு என்னை வேறுபடுத்தி உய்யுமாறு கொண்ட நாதனாகிய குளிர்புனல்சூழ்ந்த வீரட்டத்துத் தேவதேவர் உறையும் இடம் ஆமாத்தூரேயாகும். காண்பீர்களாக!.
1515 வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய வாமாத்தூ ரையனே. 5.044.10
ஆகாயத்தே இருளைச்சிதைக்கும் மதியை அரவொடும் அஞ்சாதபடி நட்புக் கொள்ள வைத்தவர். தேன் முதலிய பஞ்சாமிர்தத்தொடும் இளநீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றை அபிடேகம் கொண்டவர் ஆமாத்தூர்ப்பெருமான்.
1516 விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி
அடர வோர்விர லூன்றிய வாமாத்தூர்
இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம்
இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே. 5.044.11
அடங்காத விடலையாக வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு விரல் ஊன்றயவனும், ஆமாத்தூரை இடமாகக் கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன்.
திருச்சிற்றம்பலம்
5.044.திருவாமாத்தூர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அழகியநாதர். தேவியார் - அழகியநாயகியம்மை.
1506 மாமாத் தாகிய மாலயன் மால்கொடு தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி ஆமாத் தூரர னேயரு ளாயென்றென் றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே. 5.044.1
தமக்குள்ளே பெரும் பூசல் கொண்டவராகிய திருமாலும் பிரமனும் ஆணவ மயக்கம் கொண்டு தாமாகத் தேடியும், பெருமானின் திருவடியடையும் திருமுடியையும் காண்கிலர்; "ஆமாத்தூர் அரனே! அருள்வாயாக" என்று பலமுறை இன்பமுறக் கூவியே இறையானைக் கண்டார்.
1507 சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள் புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும் அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச் சிந்தி யாதவர் தீவினை யாளரே. 5.044.2
காலை மாலை ஆகிய சந்திகளில் வணங்கப் படுவானும், யோகநெறி தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும், தேவர்களால் தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம்மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர்.
1508 காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான் போமாத் தையறி யாது புலம்புவேன் ஆமாத் தூரர னேயென் றழைத்தலும் தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே. 5.044.3
காமமும் பொருளுமாகிய கார்வலையிலே பட்டுப்போகும் நெறியை அறியாமற் புலம்புகின்ற அடியேன் "ஆமாத்தூர் அரனே!" என்று அழைத்தலும், தேமாவின் இனிய கனி போலப் பெருமான் தித்தித்தனன்.
1509 பஞ்ச பூத வலையிற் படுவதற் கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே. 5.044.4
ஐம்பெரும் பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண் நினைந்தேன்; அந்நினைப்பு என்னை எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன; காண்பீராக.
1510 குராமன் னுங்குழ லாளொரு கூறனார் அராமன் னுஞ்சடை யான்திரு வாமாத்தூர் இராம னும்வழி பாடுசெய் யீசனை நிராம யன்தனை நாளும் நினைமினே. 5.044.5
குரவமலர்கள் நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும், பாம்பு நிலைபெற்ற சடையனும், திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு செய்யப் பெற்ற ஈசனும், நிராமயனும் ஆகிய பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக.
1511 பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும் அத்த னையணி யாமாத்தூர் மேவிய முத்தி னையடி யேனுள் முயறலும் பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே. 5.044.6
பித்தேறியவனும், பெரிய தேவர்களால் தொழப் படும் தலைவனும், அழகு பொருந்திய ஆமாத்தூரை விரும்பிப் பொருந்திய முத்துப் போல்வானும் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தே முயன்று உள்குதலும், அன்பு என்னும் வெள்ளம் பரவி எழுவதாயிற்று; காண்பீர்களாக.
1512 நீற்றி னார்திரு மேனியன் நேரிழை கூற்றி னான்குழற் கோலச் சடையிலோர் ஆற்றி னானணி யாமாத்தூர் மேவிய ஏற்றி னான்எமை யாளுடை யீசனே. 5.044.7
எம்மை ஆளுடைய இறைவன், திருநீற்றினால் நிறைந்த திருமேனி உடையவனும், நேரிழையை ஒரு கூற்றில் உடையவனும், அழகு நிறைந்த குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில் விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன்.
1513 பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க் கண்ணித் தாகு மமுதினை யாமாத்தூர் சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர் கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே. 5.044.8
பண்ணினை உடைய பாடல்களைப் பாடித்தன்னை அன்புசெய்யும் திறம் உடையவர்களுக்கு இனிக்கும் அமுது போல்வானும், ஆமாத்தூரில் பொருந்தியவனும், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு மிகநெருங்கிக் கண்ணிலுள்ள கருமணிப் பாவை போன்றவனுமானவனைக் காண்பீர்களாக!.
1514 குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா மிண்ட ரோடெனை வேறு படுத்துய்யக் கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத் தண்டனாரிட மாமாத்தூர் காண்மினே. 5.044.9
குண்டர்களும், மயிற்பீலிகளைக்கொள்ளும் குணமில்லாத மிண்டர்களுமாகிய சமணர்களோடு என்னை வேறுபடுத்தி உய்யுமாறு கொண்ட நாதனாகிய குளிர்புனல்சூழ்ந்த வீரட்டத்துத் தேவதேவர் உறையும் இடம் ஆமாத்தூரேயாகும். காண்பீர்களாக!.
1515 வானஞ் சாடு மதியர வத்தொடு தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத் தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும் ஆனஞ் சாடிய வாமாத்தூ ரையனே. 5.044.10
ஆகாயத்தே இருளைச்சிதைக்கும் மதியை அரவொடும் அஞ்சாதபடி நட்புக் கொள்ள வைத்தவர். தேன் முதலிய பஞ்சாமிர்தத்தொடும் இளநீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றை அபிடேகம் கொண்டவர் ஆமாத்தூர்ப்பெருமான்.
1516 விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி அடர வோர்விர லூன்றிய வாமாத்தூர் இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம் இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே. 5.044.11
அடங்காத விடலையாக வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு விரல் ஊன்றயவனும், ஆமாத்தூரை இடமாகக் கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|