|
||||||||
ஐந்தாம் திருமுறை-81 |
||||||||
திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர். தேவியார் - பண்மொழியம்மை.
1875 சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை அட்ட மூர்த்தியை ஆல நிழலமர் பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி நட்ட னைத்தொழ நம்வினை நாசமே. 5.081.1
உயர்ந்தவனை, சிவனை, செழுஞ்சோதி வடிவானவனை, எட்டு மூர்த்தியை, கல்லாலநிழற்கீழ் அமரும் ஆசாரியனை, திருப்பாண்டிக்கொடுமுடிக் கூத்தனைத் தொழுதால் நம்வினை நாசமாம்.
1876 பிரமன் மாலறியாத பெருமையன் தரும மாகிய தத்துவ னெம்பிரான் பரம னாருறை பாண்டிக் கொடுமுடி கரும மாகத் தொழுமட நெஞ்சமே. 5.081.2
அறிவற்ற நெஞ்சமே! பிரமனும் மாலும் அறியாத பெருமையனும், தருமவடிவாகிய தத்துவ வடிவினனும், எம்பிரானும், பரமனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருப்பாண்டிக் கொடுமுடியைத் தொழுவதே கருமமாகக் கொண்டு பணிவாயாக.
1877 ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள் தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி ஈச னேயெனு மித்தனை யல்லது பேசு மாறறி யாளொரு பேதையே. 5.081.3
ஒரு பெண் ஊசல் விளையாட்டும் கொண்டிலள்; ஒள்ளிய கழல் அணிவாளுமல்லள்; தேசமாம் திருப்பாண்டிக் கொடுமுடி ஈசனே என்னும் இத்தனையேயல்லது வேறு பேசுமாறு ஒன்றும் அறியாதவள் ஆயினள்.
1878 தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான் காண்டலுமௌ யன்னடி யார்கட்குப் பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக் காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான். 5.081.4
தூண்டிய சுடர்போல் ஒக்கின்ற சோதிவடிவினனாகிய பெருமான் அடியார்களுக்குக் காண்டல் எளியவன்; பாண்டிக் கொடுமுடி மேவிய பரமனைக் காண்போம் என்று கூறுவார்க்கு ஏதும் கருதவொண்ணா இயல்பினோன்.
1879 நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன் திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக் கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே. 5.081.5
இராவணனது அம்முடிகளை நெருக்கி, புகழை உடைய வானவர் நின்று இருக்கு வேதம் உரைத்துப் பணிந்து ஏத்த இருந்தவனுடைய "திருக்கொடுமுடி" என்றலும் தீவினையின் கருக்கெடும்; இது கைகண்ட யோக நெறியாகும்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|