LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-81


5.081.திருப்பாண்டிக்கொடுமுடி 

திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர். 

தேவியார் - பண்மொழியம்மை. 

 

 

1875 சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை

அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்

பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி

நட்ட னைத்தொழ நம்வினை நாசமே. 5.081.1

 

  உயர்ந்தவனை, சிவனை, செழுஞ்சோதி வடிவானவனை, எட்டு மூர்த்தியை, கல்லாலநிழற்கீழ் அமரும் ஆசாரியனை, திருப்பாண்டிக்கொடுமுடிக் கூத்தனைத் தொழுதால் நம்வினை நாசமாம்.

 

 

1876 பிரமன் மாலறியாத பெருமையன்

தரும மாகிய தத்துவ னெம்பிரான்

பரம னாருறை பாண்டிக் கொடுமுடி

கரும மாகத் தொழுமட நெஞ்சமே. 5.081.2

 

  அறிவற்ற நெஞ்சமே! பிரமனும் மாலும் அறியாத பெருமையனும், தருமவடிவாகிய தத்துவ வடிவினனும், எம்பிரானும், பரமனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருப்பாண்டிக் கொடுமுடியைத் தொழுவதே கருமமாகக் கொண்டு பணிவாயாக.

 

 

1877 ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்

தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி

ஈச னேயெனு மித்தனை யல்லது

பேசு மாறறி யாளொரு பேதையே. 5.081.3

 

  ஒரு பெண் ஊசல் விளையாட்டும் கொண்டிலள்; ஒள்ளிய கழல் அணிவாளுமல்லள்; தேசமாம் திருப்பாண்டிக் கொடுமுடி ஈசனே என்னும் இத்தனையேயல்லது வேறு பேசுமாறு ஒன்றும் அறியாதவள் ஆயினள்.

 

 

1878 தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்

காண்டலுமௌ யன்னடி யார்கட்குப்

பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்

காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான். 5.081.4

 

  தூண்டிய சுடர்போல் ஒக்கின்ற சோதிவடிவினனாகிய பெருமான் அடியார்களுக்குக் காண்டல் எளியவன்; பாண்டிக் கொடுமுடி மேவிய பரமனைக் காண்போம் என்று கூறுவார்க்கு ஏதும் கருதவொண்ணா இயல்பினோன்.

 

 

1879 நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்

இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன்

திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக்

கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே. 5.081.5

 

  இராவணனது அம்முடிகளை நெருக்கி, புகழை உடைய வானவர் நின்று இருக்கு வேதம் உரைத்துப் பணிந்து ஏத்த இருந்தவனுடைய "திருக்கொடுமுடி" என்றலும் தீவினையின் கருக்கெடும்; இது கைகண்ட யோக நெறியாகும்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.