|
||||||||
ஐந்தாம் திருமுறை-83 |
||||||||
5.083.திருநாகைக்காரோணம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்.
தேவியார் - நீலாயதாட்சியம்மை.
1890 பாணத் தால்மதின் மூன்று மெரித்தவன்
பூணத் தானர வாமை பொறுத்தவன்
காணத் தானினி யான்கடல் நாகைக்கா
ரோணத் தானென நம்வினை யோயுமே. 5.083.1
ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும், தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும், காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும்!
1891 வண்ட லம்பிய வார்சடை யீசனை
விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக்
கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை யான கழலுமே. 5.083.2
வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும், விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும், தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும்.
1892 புனையும் மாமலர் கொண்டு புரிசடை
நனையும் மாமலர் சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை
நினைய வேவினை யாயின நீங்குமே. 5.083.3
மாமலர்களைக்கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும். கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும்.
1893 கொல்லை மால்விடை யேறிய கோவினை
எல்லி மாநட மாடு மிறைவனைக்
கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்
சொல்ல வேவினை யானவை சோருமே. 5.083.4
முல்லைநிலத்து விடையேறிய அரசனும், இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய, கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும்.
1894 மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய கண்டனை வானவர்
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. 5.083.5
உண்மையே உருவானவனும், விடையை ஊர்தியாகக்கொண்டவனும், வெண்மழுவைக் கையிற்கொண்டவனும், நாகைக்காரோணனும், ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை.
1895 அலங்கல் சேர்சடை யாதிபு ராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. 5.083.6
மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை, மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை, கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும்.
1896 சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
இனங்கொள் வானவ ரேத்திய வீசனைக்
கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே. 5.083.7
சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும், தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்தியஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும்.
1897 அந்த மில்புக ழாயிழை யார்பணிந்
தெந்தை யீசனென் றேத்து மிறைவனைக்
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே. 5.083.8
ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே! "ஈசனே" என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும்.
1898 கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை
ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த
செருவ னைத்தொழத் தீவினை தீருமே. 5.083.9
உலகிற்கெல்லாம் கருவாகியவனும். கடல்நாகைக் காரோணனும், பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும், ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும்.
1899 கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன்
வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை
அடர வூன்றிய பாத மணைதரத்
தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே. 5.083.10
கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான்.
திருச்சிற்றம்பலம்
5.083.திருநாகைக்காரோணம் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர். தேவியார் - நீலாயதாட்சியம்மை.
1890 பாணத் தால்மதின் மூன்று மெரித்தவன் பூணத் தானர வாமை பொறுத்தவன் காணத் தானினி யான்கடல் நாகைக்கா ரோணத் தானென நம்வினை யோயுமே. 5.083.1
ஓர் அம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவனும், தான் அணியாகப் பூணப் பாம்பையும் ஆமையையும் தாங்கியவனும், காண இனியவனும் ஆகிய கடல் நாகைக் காரோணத்தான் என நம்வினை ஓயும்!
1891 வண்ட லம்பிய வார்சடை யீசனை விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக் கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக் கண்ட லும்வினை யான கழலுமே. 5.083.2
வண்டுகள் ஒலிக்கும் நீண்ட சடையுடைய ஈசனும், விண்ணுலகம் பணிந்தேத்தும் மேலானவனும், தாழை கமழ்கின்ற நாகைக்காரோணனுமாகிய பெருமானைக் காணுதலும் வினைகள் நீங்கும்.
1892 புனையும் மாமலர் கொண்டு புரிசடை நனையும் மாமலர் சூடிய நம்பனைக் கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை நினைய வேவினை யாயின நீங்குமே. 5.083.3
மாமலர்களைக்கொண்டு புனையும் புரிசடை உடைய நம்பனும். கள்ளால் நனையும் மாமலரைச் சூடிய நம்பனும் ஆகிய ஒலிக்கும் நீண்ட கடல் நாகைக்காரோணனை நினைய வினைகள் நீங்கும்.
1893 கொல்லை மால்விடை யேறிய கோவினை எல்லி மாநட மாடு மிறைவனைக் கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச் சொல்ல வேவினை யானவை சோருமே. 5.083.4
முல்லைநிலத்து விடையேறிய அரசனும், இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய, கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும்.
1894 மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக் கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை மைய னுக்கிய கண்டனை வானவர் ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. 5.083.5
உண்மையே உருவானவனும், விடையை ஊர்தியாகக்கொண்டவனும், வெண்மழுவைக் கையிற்கொண்டவனும், நாகைக்காரோணனும், ஆலகால நஞ்சினை வருத்திய திருக்கழுத்தினனும் ஆகிய தேவர் தலைவனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை.
1895 அலங்கல் சேர்சடை யாதிபு ராணனை விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக் கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. 5.083.6
மாலைகள் சேர்ந்த சடையையுடைய ஆதி புராணனை, மலைமங்கையை ஒருபாகம் விரும்பிக் கொண்டவனை, கப்பல்கள் சேரும் கடல்நாகைக்காரோணனை வலம் கொண்டு வணங்குவார் வினைகள் மாயும்.
1896 சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை இனங்கொள் வானவ ரேத்திய வீசனைக் கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை மனங்கொள் வார்வினை யாயின மாயுமே. 5.083.7
சினங்கொண்ட பெரிய வேழத்தைச் சினந்து பொறாத ஏறுபோல்வானும், தொகுதி கொண்ட தேவர்கள் ஏத்தியஈசனும் ஆகிய பெருமைகொண்ட மாமதில் சூழ்ந்த நாகைக் காரோணனை உள்ளத்துக்கொள்ளுவார் வினைகள் மாயும்.
1897 அந்த மில்புக ழாயிழை யார்பணிந் தெந்தை யீசனென் றேத்து மிறைவனைக் கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச் சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே. 5.083.8
ஆயிழையார்கள் பணிந்து முடிவற்ற புகழைப் பாடி எந்தையே! "ஈசனே" என்று வாழ்த்தும் இறைவனாகிய மணம் வீசும் நெடிய பொழில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சிந்தித்தால் திண்மையாகத் துயரங்கள் கெடும்.
1898 கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை இருவ ருக்கறி வொண்ணா இறைவனை ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த செருவ னைத்தொழத் தீவினை தீருமே. 5.083.9
உலகிற்கெல்லாம் கருவாகியவனும். கடல்நாகைக் காரோணனும், பிரமன் திருமால் ஆகிய இருவருக்கறியவியலாத இறைவனும், ஒப்பற்றவனும் ஆகிய உணராத அசுரரது முப்புரங்களை எய்த போரை உடைய பெருமானைத் தொழத் தீவினைகள் தீரும்.
1899 கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன் வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை அடர வூன்றிய பாத மணைதரத் தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே. 5.083.10
கடல் உப்பங்கழிகள் பொருந்திய நாகைக் காரோணன் தன் திருக்கயிலையை எடுத்து ஆர்த்த இராவணனை அடரத் திருவிரலால் ஊன்றிய பாதம் அணைந்தால் துயக்கற்ற காலன் தொடர அஞ்சுவான்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|