|
|||||
இறுதி கட்ட பிரச்சாரத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் |
|||||
வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, அந்நாட்டு செய்தித்தாள்களில், பிரச்சார விளம்பரங்கள் முழு பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வரும் 6ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில், தற்போதைய அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சியின் சார்பில், மாசசூசெட்ஸ் முன்னாள் முதல்வருமான, மிட்ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் வாக்காளர்களை கவர்வதற்காக, பிரதானக் கட்சி வேட்பாளர்களான ஒபாமாவும், மிட்ரோம்னியும் பல சலுகை திட்டங்களை அறிவித்துள்ளனர்.பொதுமக்கள் முன்னிலையில், இருவருக்கும் இடையே, மூன்று சுற்று விவாதம் முடிவடைந்த நிலையில், ஒபாமாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதிக்கட்டப் பிரச்சாரத்தின் போது, அமெரிக்காவில் அடித்த, சாண்டி புயல் இடையூறு செய்து விட்டது. இதனால், நியூஜெர்சியில் நிவாரண பணிகளை ஒபாமா பார்வையிட்டு வருகிறார்.இன்னும், தேரதலுக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், செய்திதாள் மற்றும் தொலைகாட்சிகளில் இவர்களது பிரச்சாரம் மிகவும் சூடு பிடித்துள்ளது. அமெரிக்காவில், 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். வாஷிங்டன், நியூயார்க், நியூஜெர்சி, விர்ஜினியா, கலிபோர்னியா உள்ளிட்ட இடங்களில், இந்தியர்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு, என்பதால், இவர்கள் இந்தியர்களை கவரும் விதத்தில், பிரச்சாரங்கள் செய்து வருகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில், தேர்தலுக்காக, 3,850 கோடி ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால், இந்த முறை தேர்தல் செலவு மட்டுமே, 33 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, அந்நாட்டு செய்தித்தாள்களில், பிரச்சார விளம்பரங்கள் முழு பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வரும் 6ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில், தற்போதைய அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சியின் சார்பில், மாசசூசெட்ஸ் முன்னாள் முதல்வருமான, மிட்ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.
|
|||||
by Swathi on 02 Nov 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|