ரஷ்யாவில், மன நல மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உடல் கருகி பலியாயினர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் மன நல மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் என 41 பேர் இருந்தனர். நேற்று அதிகாலை மின் கோளாறு காரணமாக திடிரென ஏற்பட்ட தீ விபத்துத்தில் 38 மன நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் நர்ஸ் உட்பட மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தீ விபத்தின் போது நோயாளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், அவர்கள் தப்பிக்க முடியாமல் இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|