பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது, மிகவும் இன்றியமையாத, ஊட்டச்சத்துடைய ஆகாரமாகும். இன்றைய தாய்மார்கள் பெரும்பாலும், தாய்ப்பால் கொடுத்தால் தங்கள் அழகு போய்விடுமோ என தவறாக கருதி குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதில்லை. மேலும் பிரசவத்தின்போது தாய் இறந்துவிட்டாலும் சேய்க்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. இதனால் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையுடைய குழந்தைகளாக வளர்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில், பொதுத்துறை தாய்ப்பால் வங்கி நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை துவக்கி வைத்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது, பிறந்த ஒரு குழந்தையின் அடிப்படைத் தேவையை இந்த புதுமையான திட்டம் நிறைவேற்றி வைக்கும். மிகுந்த கவனத்துடன் அதிநவீன வசதிகளுடன் இந்த தாய்ப்பால் வங்கி செயல்படுவதால், குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. தாய்ப்பால் பெற முடியாத குழந்தைகளுக்கு இங்கு தாய்ப்பால் கிடைக்கும்' என மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
|