LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

விபத்துக்களை தடுக்க ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு தமிழக போக்குவரத்து துறை ஐந்து கட்டுப்பாடு !!

ஆம்னி பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவது தொடர்கதையாகி வரும் நிலையில், ஆம்னி பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக போக்குவரத்து துறை, ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு, சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. 

 

தமிழக போக்குவரத்து துறை விதிமுறைகள் :

 

பேருந்து புறப்படுவதற்கு முன்பு, விபத்து ஏற்படும்போது, உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறுவது எப்படி என்பதை, பயணிகளுக்கு வீடியோ காட்சிகளாக, விளக்கி கூற வேண்டும். 

 

பல்வேறு நிறுவனங்கள், பேருந்துகளை தயாரிக்கின்றன; அந்த நிறுவனங்களின் தயாரிப்பிற்கு ஏற்ப, அதன் ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

 

150 கி.மீ.,க்கு ஒரு ஓட்டுனர் என, 300 கி.மீ.,க்கு மேல் இயக்கப்படும் பஸ்களில், இரண்டு ஓட்டுனர் இருக்க வேண்டும். 

 

அதிகப்பட்சமாக, பேருந்து மணிக்கு, 80 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. 

 

ஓட்டுனர் மது அருந்தியிருக்கிறாரா என்பதை கண்டறிய, சுங்க சாவடிகளில் பகுப்பாய்வு கருவி மூலம் சோதனை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

 

இவ்வாறு, தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

by Swathi   on 22 Nov 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
23-Nov-2013 04:03:39 கோபால கிருஷ்ணன் said : Report Abuse
பலே பலே. வாழ்த்துக்கள், தமிழக அரசுக்கு. தாமதித்தாலும், தரமான கொள்கைகள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.