|
|||||
விபத்துக்களை தடுக்க ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு தமிழக போக்குவரத்து துறை ஐந்து கட்டுப்பாடு !! |
|||||
ஆம்னி பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவது தொடர்கதையாகி வரும் நிலையில், ஆம்னி பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக போக்குவரத்து துறை, ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு, சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்து துறை விதிமுறைகள் :
பேருந்து புறப்படுவதற்கு முன்பு, விபத்து ஏற்படும்போது, உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறுவது எப்படி என்பதை, பயணிகளுக்கு வீடியோ காட்சிகளாக, விளக்கி கூற வேண்டும்.
பல்வேறு நிறுவனங்கள், பேருந்துகளை தயாரிக்கின்றன; அந்த நிறுவனங்களின் தயாரிப்பிற்கு ஏற்ப, அதன் ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
150 கி.மீ.,க்கு ஒரு ஓட்டுனர் என, 300 கி.மீ.,க்கு மேல் இயக்கப்படும் பஸ்களில், இரண்டு ஓட்டுனர் இருக்க வேண்டும்.
அதிகப்பட்சமாக, பேருந்து மணிக்கு, 80 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது.
ஓட்டுனர் மது அருந்தியிருக்கிறாரா என்பதை கண்டறிய, சுங்க சாவடிகளில் பகுப்பாய்வு கருவி மூலம் சோதனை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு, தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 22 Nov 2013 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|