மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், திருமண மண்டபங்கள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், நட்சத்திர விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டவை, திருட்டு, வன்முறை போன்ற சம்பவங்களை கண்டறிவதற்காக பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்காளன கல்லூரி, பல்கலைக்கழகங்கள், தனியார் நடத்தும் உயர் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மகப்பேறு மையங்கள்,நட்சத்திர ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கண்காட்சி அரங்குகள், நடனக் அரங்குகள், மைதானங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், பெட்டோல் நிலையங்கள், ஒரே நேரத்தில் 500 பேருக்கு மேல் அமரும் கூட்டரங்குகள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயமாக பொறுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் மத்திய மாநில அரசு அலுவகங்களில் 100 பேருக்கு மேல் பணிபுரிந்தால் அங்கேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
|