|
|||||
மன அமைதி வேண்டுமா..... இந்த உணவுகளை சாப்பிடுங்க..... |
|||||
நம்முடைய மூளையில் செரோட்டனின் என்ற இரசாயனப் பொருள் தங்குதடையின்றி சுரந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சியான மனநிலை முதலியன நீடிக்கும். இந்த செரோட்டனின் மூளையில் தயாரிக்க நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் போதுமான அளவு இருந்தால்தான் முடியும்.
ஆகவே, கேழ்வரகு ரொட்டி, கேழ்வரகு, கஞ்சியும் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். சீசனின் போது வள்ளிக்கிழங்குகளையும் அவித்துச் சாப்பிடலாம். பகல் உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் இரண்டு பிரட் துண்டுகளுடன் ஒரு கப் பழச்சாறு அருந்தினாலும் மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும் தினமும் ஒருவேளையாவது பழச்சாறு அருந்துவதும் மிக முக்கியம்.
மூளையில் செரோட்டனின் போதுமான அளவு இருக்கும் போது "கவலைப்படாதே", எல்லாம் நல்லபடியாக முடியும்", திடீரென்று கோபபப்பட்டு யாருடனும் வலுச்சண்டைக்கு போகாதே", மனஇறுக்கம் இல்லாமல் வாழ்" போன்ற சிந்தனைகளை எழுப்பி நம்மை கட்டுப்படுத்தி வழி நடத்துகிறதாம். அதே நேரத்தில் செரோட்டனின் அளவு மூளையில் குறைவாக இருந்தவர்களிடம் உடனுக்குடன் சண்டை போடும் குணம், மன அழுத்தம், வலுச்சண்டைக்குப் போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் குணமும் இருந்தது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தூக்கமின்மையுடன் உணர்ச்சிகளுக்கு உடனுக்குடன் அடிமைப்படும் குணமும் இருப்பவர்கள் மேற்கண்ட ஐந்து உணவுகளையும் தினமும் தவறாமல் சேர்ப்பது நல்லது. இதனால் மனம் பண்பட்டு மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ ஆரம்பிப்பார்கள். இரவில் நன்கு தூங்குவார்கள். இதனால் முதுமையிலும் இளமையான தோற்றத்தையும் பெறுவார்கள். |
|||||
by Swathi on 25 Dec 2013 0 Comments | |||||
Tags: மன அமைதி மனதிற்கு அமைதி உணவுவகைகள் Peace Mind Calm your Mind | |||||
Disclaimer: |
|||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|