|
|||||
தமிழ்நாட்டில் 5, 8- ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பற்றி அமைச்சரவை முடிவு செய்யும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! |
|||||
தமிழ்நாட்டில் 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்துதேர்வு முறை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா ரூ20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் காமராஜர் திறந்து வைத்த அலங்கார நுழைவு வாயில் வாகனம் மோதி சேதம் அடைந்ததையடுத்து ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலங்கார நுழைவு வாயில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதற்கிடையில், 5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்திருப்பது சீர்திருத்தம் அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யக்கூடாது என்று அவர் வலியுறுத்தி உள்ளார். அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கல்வியின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனடாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். |
|||||
by Mani Bharathi on 09 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|