LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அவசர வழக்குகள் அல்லாதவைக்கு தனி விதிமுறைகள் வகுக்கப்படும்- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கோகாய் அறிவிப்பு!

தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தக் கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றம், வெளியேற்றம் ஆகியவை மட்டுமே அவசர வழக்கு என்ற அடிப்படையில் விசாரிக்கப்படும் மற்றவற்றுக்குத் தனி விதிமுறைகள் வகுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  தலைமை நீதிபதி அறைக்குச் சென்றபின், அவருக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

வடகிழக்கு மாநிலத்தில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வழக்கறிஞர்கள் அவசர வழக்காகச் சிலவற்றை விசாரிக்கக் கோரி முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "இப்போது ஏதும் முறையிடாதீர்கள். நாம் குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்துவிட்டு, எவ்வாறு, எந்த வகையில் முறையிடலாம் என்பதை முடிவு செய்யலாம்

யாராவது ஒருவரை  நாளை தூக்கில் இடப்போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் அல்லது நாளை யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்றால் விசாரிக்கலாம். ஆதலால், அவசரவழக்கு எது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றப்படி அவசரவழக்காக எதையும் முறையிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

அப்போது, வழக்கறிஞர் மாத்யூஸ் நெடும்பரா, முறையிடுவதை நிறுத்திவிட்டு தலைமைநீதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். "நெடும்புரா வாழ்த்துச் சொல்ல இது இடம் அல்ல. இவை எனக்குத் தேவையில்லை. நீங்கள் முறையிடத்தானே வந்தீர்கள். இப்போதுள்ள நிலையில் வழக்குகளின் தகுதிநிலை நிர்ணயிக்கப்படாதவரை அவசர வழக்காக எதையும் முறையிட முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், அவசர வழக்காக விசாரிக்கப் பல வழக்கறிஞர்கள் நின்றிருந்த நிலையில், அவர்கள் செல்லுமாறு தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.

by Mani Bharathi   on 04 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.