|
|||||
அவசர வழக்குகள் அல்லாதவைக்கு தனி விதிமுறைகள் வகுக்கப்படும்- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கோகாய் அறிவிப்பு! |
|||||
தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தக் கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றம், வெளியேற்றம் ஆகியவை மட்டுமே அவசர வழக்கு என்ற அடிப்படையில் விசாரிக்கப்படும் மற்றவற்றுக்குத் தனி விதிமுறைகள் வகுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி அறைக்குச் சென்றபின், அவருக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். வடகிழக்கு மாநிலத்தில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வழக்கறிஞர்கள் அவசர வழக்காகச் சிலவற்றை விசாரிக்கக் கோரி முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "இப்போது ஏதும் முறையிடாதீர்கள். நாம் குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்துவிட்டு, எவ்வாறு, எந்த வகையில் முறையிடலாம் என்பதை முடிவு செய்யலாம் யாராவது ஒருவரை நாளை தூக்கில் இடப்போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் அல்லது நாளை யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்றால் விசாரிக்கலாம். ஆதலால், அவசரவழக்கு எது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றப்படி அவசரவழக்காக எதையும் முறையிட வேண்டாம் என்று தெரிவித்தார். அப்போது, வழக்கறிஞர் மாத்யூஸ் நெடும்பரா, முறையிடுவதை நிறுத்திவிட்டு தலைமைநீதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். "நெடும்புரா வாழ்த்துச் சொல்ல இது இடம் அல்ல. இவை எனக்குத் தேவையில்லை. நீங்கள் முறையிடத்தானே வந்தீர்கள். இப்போதுள்ள நிலையில் வழக்குகளின் தகுதிநிலை நிர்ணயிக்கப்படாதவரை அவசர வழக்காக எதையும் முறையிட முடியாது என்று தெரிவித்தார். மேலும், அவசர வழக்காக விசாரிக்கப் பல வழக்கறிஞர்கள் நின்றிருந்த நிலையில், அவர்கள் செல்லுமாறு தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். |
|||||
by Mani Bharathi on 04 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|