LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு!

மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டு உள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:

கடந்த ஜூன் மாதம் நடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கல்வி மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நடப்பு கல்வி ஆண்டில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் அந்த  திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள திறன் அட்டையில் ‘கியூ ஆர் கோடு’ அல்லது ‘பார் கோடு’ மூலம் மாணவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் பொதுத் தொகுப்பில் இருந்து இணைய தளத்தின் மூலம் தகவல் பெறமுடியும். மாணவர்கள் வருகையை கண்காணிக்க முடியும். மாணவர்கள் இடைநிற்றல் துல்லியமாக கண்டறியப்படும். 

அதனால், 37358 தொடக்க, நடுநிலை உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவ மாணவியர்களுக்கும், அரசு உதவி பெறும்,பகுதி உதவி பெறும் 8386 பள்ளிகளில் படிக்கும் 23 லட்சத்து 99 ஆயிரம் மாணவ மாணவியர்கள் என மொத்தம் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 பேருக்கு திறன் அட்டை (ஸ்மார்ட் கார்டு )வழங்கப்பட வேண்டும். 

அதனால் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் டெண்டர் விடுத்து திறன் அட்டை தயாரிக்க தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கவும், இந்த திட்டத்துக்காக ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரம் நிதி அனுமதி அளித்தும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி  இயக்குநர் கேட்டுள்ளார்.

இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து  அதை ஏற்கலாம் என்று முடிவு செய்து 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவ மாணவியருக்கு திறன் அட்டைகள் வழங்கவும், திட்டத்தை செயல்படுத்த வசதியாக ரூ. 12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒப்புதல் வழங்கியும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநருக்கு அதிகாரம் வழங்கியும் ஆணையிடப்படுகிறது.  

இவ்வாறு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

by   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.