LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குழந்தை பெற்றால் கிடைத்த குடியுரிமை ரத்து: அதிபர் டிரம்ப் திட்டம்!

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர். அங்கு குழந்தை பெற்றதைக் காரணம் காட்டி குடியுரிமை பெறும் முறையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். 

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு முக்கிய வேலைகளில்  வெளி நாட்டினர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் சில காலம் அங்கு வசித்த பிறகு குடியுரிமை கோரி பெறுகின்றனர். 

சிலர், குறுக்கு வழியைக் கையாள்கின்றனர். அதாவது, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர் தாங்கள் குடியுரிமை பெறாவிட்டாலும் கூட, அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அதை சாக்காக வைத்து அவர்களுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடும். 

அமெரிக்காவில் தற்போதுள்ள சட்ட விதிகள் இதை அனுமதிக்கின்றன. இதன்படி, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அமெரிக்காவில் குழந்தை பெற்றால் உடனே அமெரிக்கக் குடியுரிமைச் சான்று தானாகவே கிடைத்துவிடும்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முடிவு செய்து உள்ளார். டிரம்ப் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்,  ‘வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குழந்தை பெற்று குடியுரிமை பெறுவது உலகத்திலேயே இந்த நாட்டில்தான் உள்ளது. இதுவொரு கேலிக்கூத்தான விஷயம். இதற்கு முடிவு கட்ட வேண்டும்’ என கூறியுள்ளார். 

இந்தியாவில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். வேலை, சுற்றுலா மற்றும் விருந்தினர் விசாவில் சென்று, அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் குடியுரிமையும் வாங்கி விடுகின்றனர். ஆயிரக்கணக்கானபேர் இவ்வாறு பலன் பெற்று உள்ளனர். இனி இது எடுபடாது. இந்த நடைமுறைக்கு அமெரிக்க அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறது

by Mani Bharathi   on 31 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.