LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கிடைத்தது ஜாமீன் !! துபாய்க்கு பறப்பாரா முஷாரப் !!!

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும் ராணுவ படை தளபதியுமான பர்வேஸ் முஷாரப்பிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமி்ன் வழங்கியுள்ளது இதனையடுத்து அவர் துபாய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷாரப் பதவி வகித்த போது, கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி பலுச் தேசியவாத தலைவர் நவாப் அக்பர் புக்தி ஒரு குகையில் வைத்து கொல்லப்பட்டார். இவர் அங்கு மாகாண சுயாட்சிக்காக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தியவர் ஆவார். இவர் கொல்லப்பட்டபோது அங்கு பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. முஸாரப் அதிபர் பதவியை விட்டு விலகிய பி்னனர் வெளி நாடுகளில் வசித்து வந்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தானாகவே முன்வந்து தன்மீதான வழக்குகளின் அடிப்படையில் நேரில் ஆஜரானார். 
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டார். அக்பர் புக்தி கொலை வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி பலுசிஸ்தான் ஐகோர்ட்டில் முஷாரப் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் முஷாரப் சார்பில் மேல்-முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முஷாரப்புக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் துபாய்க்கு செல்ல திட்டமி்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அவர் மீதான இரண்டு வழக்குகளிலும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 09 Oct 2013  0 Comments
Tags: Former Pakistani President   முஷாரப்   பர்வேஸ் முஷாரப்   ஜாமீன்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.