LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக்குறைவால் காலமானார்!

முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.
டெல்லியில் உள்ள இல்லத்தில் வைத்து ஜார்ஜ் பெர்னான்டஸ் உயிர் பிரிந்து உள்ளது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1930 ஜூன் மாதம் 3-ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக  பதவி வகித்தார். 2001 முதல் 2004 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

மேலும் 1989 முதல் 1990 வரை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்து உள்ளார். 2010-ம்  ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 

1976-ம் ஆண்டு அவசர நிலை காலத்தில் பரோடா வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்தார். அவசர நிலைக்குப்பின் 1977-ம் ஆண்டு மத்திய தொழில்துறை அமைச்சரானார்.

ஜார்ஜ் பெர்னான்டஸ் எடுத்த நடவடிக்கையால் 1977ல் கோகோகோலா நிறுவனம் இந்தியாவைவிட்டு வெளியேறியது.  தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி, எழுத்தாளர், விவசாயி என பன்முகங்களை கொண்டவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

கொங்கன் ரயில்வே திட்டம் அமைய காரணமாக இருந்தவர். பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்ற முடிவை வெளிப்படையாக ஆதரித்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலையை கடுமையாக எதிர்த்த தலைவர்களுகளுள் ஒருவர்.  

ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது தான் கார்கில் போர் நடைபெற்றது, அத்துடன் தனி ஈழம் அமைய வேண்டும் எனப் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 29 Jan 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
01-Feb-2019 05:04:55 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.ஜார்ஜ்பெர்னாண்டஸ், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக, மாண்புமிகு வாஜ்பாயின் அமைச்சரவையில் இருந்தது உண்மையிலேயே சோதனைகள் நிறைந்து, அதனால் சாதனைகள் படைத்த பொற்காலம். கார்கில் போரில் தலை நிமிர்ந்தோம். கட்சி பாகுபாடின்றி அணைவராலும் நேசிக்கப்பட்டவர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.