முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள இல்லத்தில் வைத்து ஜார்ஜ் பெர்னான்டஸ் உயிர் பிரிந்து உள்ளது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1930 ஜூன் மாதம் 3-ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2001 முதல் 2004 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
மேலும் 1989 முதல் 1990 வரை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்து உள்ளார். 2010-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.
1976-ம் ஆண்டு அவசர நிலை காலத்தில் பரோடா வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்தார். அவசர நிலைக்குப்பின் 1977-ம் ஆண்டு மத்திய தொழில்துறை அமைச்சரானார்.
ஜார்ஜ் பெர்னான்டஸ் எடுத்த நடவடிக்கையால் 1977ல் கோகோகோலா நிறுவனம் இந்தியாவைவிட்டு வெளியேறியது. தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி, எழுத்தாளர், விவசாயி என பன்முகங்களை கொண்டவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
கொங்கன் ரயில்வே திட்டம் அமைய காரணமாக இருந்தவர். பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்ற முடிவை வெளிப்படையாக ஆதரித்தவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலையை கடுமையாக எதிர்த்த தலைவர்களுகளுள் ஒருவர்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது தான் கார்கில் போர் நடைபெற்றது, அத்துடன் தனி ஈழம் அமைய வேண்டும் எனப் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|