சந்தியா வந்தனத்தை நாற்காலியில் அமர்ந்து செய்யலாமா?
malarvaanan - 19 Oct 2013 02:05 AM
எனக்கு 76 வயது, தரையில் உட்கார்ந்து சந்தியா வந்தனம் செய்ய இயலவில்லை. நாற்காலி, ஊஞ்சலில் அமர்ந்து செய்யலாமா?
ganesh Said : 19 Oct 2013 02:10 AM
நீங்கள் இத்தனை வயதிலும் அனுஷ்டானங்களை விடாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களே! அதுவே, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும். நாற்காலி, பெஞ்சில் அமர்ந்து செய்யலாம். ஊஞ்சலில் செய்ய வேண்டாம். ஜபம் செய்யும் போது நாம் அமரும் ஆசனம் ஆடக்கூடாது.