அடமான கடனுக்காக, வங்கிகள் கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பறிமுதல் செய்வார்களா அல்லது முழு சொத்த
Rajasekar - 21 Mar 2014 06:01 AM
தொழில் செய்வதற்காக எனது வீட்டை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்கியிருந்தேன். தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் கொடுத்த கடனுக்காக சொத்தை பறிமுதல் செய்வார்கள் எனில், செலுத்தவேண்டிய கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பறிமுதல் செய்வார்களா அல்லது முழு இடத்தையும் எடுத்துக்கொள்வார்களா?
ganesh Said : 21 Mar 2014 06:10 AM
நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், அந்தக் கடனுக்கு ஈடாக அடமானம் வைத்த சொத்தை உள்ளது உள்ளபடியே வங்கி பறிமுதல் செய்யும். செலுத்தாமல் இருக்கும் கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பிரித்து எடுக்க வங்கிக்கு அதிகாரமில்லை. சொத்து மதிப்பீட்டாளர் மூலம் அந்த இடத்தின் சந்தை மதிப்புக் கணக்கிடப்பட்டு வெளிப்படையான ஏலம் விடப்படும். பறிமுதல் செய்யப் பட்ட சொத்தின் மதிப்பு, கடன் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் கடனை கழித்துக்கொண்டு மீதித் தொகையை சம்பந்தப்பட்டவருக்கு வங்கி திருப்பித் தந்துவிடும்.