குத்தகை பணத்தை தாமதமாக தருவதாக சொல்லி வீட்டை காலி செய்யச் சொன்னால்....
ganesh - 21 Mar 2014 06:08 AM
மூன்று வருடத்திற்கு முன்பு 4 லட்சம் ரூபாய் தந்து ஒரு வீட்டை குத்ததைக்கு எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து ஒப்பந்தத்தைப் புதுப்பித்து வருகிறேன். ஒப்பந்தம் முடிந்து வீட்டை காலி செய்யலாம் என்றபோது புதிதாக பெயின்ட் அடிக்க, கழிவுநீர் வெளியேற்ற என ரூ.25,000 வீட்டுச் சொந்தக்காரர் பிடித்தம் செய்துகொண்டார். அத்துடன் மீதமுள்ள பணத்தையும் ஆறு மாதம் கழித்து தருகிறேன் என்கிறார். விரைவாக நான் பணத்தைப் பெற ஏதாவது வழி இருக்கிறதா?
குணசேகரன் Said : 03 Dec 2018 07:58 AM
நான் ஒத்திக்கு ஒரு வீட்டில் குடியிருக்க மூன்று வருடத்திற்க்கு குத்தகைக்கு எடுத்தேன். தற்போது இன்னும் குத்தகை காலம் முடியவில்லை. மேலும் எனக்கு பணம் அவசரமாக தேவை படுகிறது. எனக்கு சட்டபூர்வமான ஆலோசனை தரவும்
Rajesh v Said : 18 Apr 2016 08:11 PM
Government sadhura adikku ivvalavu than vadagai vanga vendum entru nirnaithullathaga kelvi patten ,I like to know how much please.please sent in Tamil.I'm in Chennai .
Rajasekar Said : 21 Mar 2014 06:14 AM
நீங்கள் பணத்தைத் திரும்ப வாங்காமல் வீட்டை காலி செய்யாதீர்கள். ஒப்பந்தத்தில் குறிப்பிடாமல் பணம் பிடித்திருந்தால் அதையும் நீங்கள் திரும்பப் பெற முடியும். இதற்கு வழக்கறிஞர் மூலமாக வீட்டின் உரிமையாளருக்கு நீங்கள் நோட்டீஸ் அனுப்பலாம். உங்களின் பணத்தையும் நீதிமன்றம் மூலமாகத் திரும்பப் பெறலாம்.