ஒருவர் இறந்த பின்னர் மற்றொருவர், ஜாயின்ட் அக்கவுண்டில் பணம் எடுக்க வழிமுறை சொல்லவும்...
sandhiya - 28 Jan 2014 04:31 AM
நானும் என் மனைவியும் சேர்ந்து பொதுத்துறை வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு என் மனைவில் இறந்துவிட்டார். இப்போது அந்தக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
malarvaanan Said : 28 Jan 2014 04:43 AM
உங்களின் மனைவி இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் அவருடைய இறப்பு சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்கவேண்டும். இதனுடன் இருவரின் பெயரில் இருந்த சேமிப்புக் கணக்கை உங்களின் பெயருக்கு மட்டும் மாற்றி தரும்படி ஒரு கடிதத்தையும் இணைத்து தரவேண்டும். மேலும், அந்தச் சேமிப்புக் கணக்குக்கு நாமினி ஒருவரை நியமிப்பது அவசியம். இதையெல்லாம் செய்தபிறகு வங்கி அந்தக் கணக்கை உங்களின் பெயருக்கு மாற்றித் தரும். தொடர்ந்து அதே கணக்கு எண்ணை நீங்கள் பயன்படுத்தலாம்.