கூட்டு வியாபாரம் மூலம் கிடைத்த சொத்தை பறிமுதல் செய்வது தொடர்பாக
Nandhakumar - 13 May 2013 08:17 AM
நானுன் என் நண்பனும் சேர்ந்து வியாபாரம் செய்து வருகிறோம், எழுந்த பிரச்னை காரணமாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் என் நண்பர் வழக்கறிஞர் மூலம் சொத்தை பறிமுதல் செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளனர். சொத்தை பறிமுதல் செய்வதற்கு எதிர்தரப்பினருக்கு அதிகாரம் உள்ளதா?
malarvaanan Said : 13 May 2013 08:25 AM
கூட்டுச் சேர்ந்து செய்த வியாபாரத்திலிருந்து கிடைத்த லாபத்தின் அடிப்படையில் வாங்கப்பட்ட சொத்தாக இருந்தாலும், அதை பறிமுதல் செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. பாதிக்கப்பட்டதாகக்
கருதப்படும் நபர் வழக்கறிஞர் மூலமாக தகுந்த நீதிமன்றத்தை அணுகி, தான் ஏமாற்றப்பட்டதாக நிரூபிக்க வேண்டும். அதன்பிறகு கோர்ட் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே சொத்தை பறிமுதல் செய்ய
முடியும்.