அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனம் என் சான்றிதழ்களையும், பணத்தையும் தர மறுத்தால் என்ன செய்வது ?
karthik - 10 Oct 2013 03:30 AM
நான் ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கச் சேர்ந்தேன். சேர்ந்த பிறகு தான் நர்சிங் படிப்புக்கு அந்தக் கல்லூரி அங்கீகாரம் வாங்கவில்லை என்று தெரிந்தது. நான் தொடர்ந்து படிக்காமல் வெளியேற நினைத்தபோது, அரசு அங்கீகாரம் வாங்கிவிடுவோம்; தொடர்ந்து படியுங்கள் என்று என்னிடம் வாங்கிய பணத்தையும், சான்றிதழ்களையும் தர மறுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
MANIKANDAN M Said : 04 Feb 2020 06:15 AM
ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் மூன்று லட்சம் பணம் வாங்கிக் கொண்டார்கள் இன்னும் எனக்கு வேலையும் தரவில்லை எந்த ஒரு சான்றிதழும் தரவில்லை என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் ஐயா.. அவர்கள் அனுப்பிய வேலைக்கான உறுதி படிவம் நான் பணம் அனுப்பி அதற்கான ரசீது அவர்கள் அவர்களின் வேலை பணிபுரிவதற்கு ஐடி கார்டு அனைத்துமே உள்ளது இதனை வைத்து ஏதாவது செய்யலாம் சொல்லுங்கள் ஐயா.. வேலை தராமல் பணம் மட்டும் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை திருப்பி வாங்க வேண்டும் அதற்கு வழி கூறுங்கள்
ganesh Said : 10 Oct 2013 05:07 AM
நீங்கள் அந்த தனியார் நர்சிங் கல்லூரி மீது சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்து, உங்கள் பணம் மற்றும் சான்றிதழ்களை திரும்பப் பெறலாம். இதுதவிர நீங்கள் நுகர்வோர் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரி மீது வழக்குத் தொடர்ந்தால், கட்டிய பணம் மற்றும் ஒரு வருட கல்வி பாதிக்கப்பட்டதற்கான இழப்பீடு தொகையையும் கோரமுடியும்.