கூட்டுறவுச் சங்கத்தில் கடன் அடைத்த பிறகும் ஒரிஜினல் பத்திரத்தை தரவில்லை என்றால் யாரிடம் புக
karthik - 10 May 2013 05:56 AM
நான் எங்கள் ஊரில் உள்ள கூட்டுறவுச் சங்கம் ஒன்றில் கடன் வாங்கி வீடு கட்டி, கடனை அடைத்து விட்டேன். ஆனால் ஒரு வருடம் ஆகியும் ஒரிஜினல் பத்திரத்தை இன்னும் தரவில்லை. இது குறித்து யாரிடம் நான் புகார் செய்வது?
anitha Said : 11 May 2013 04:58 AM
முதலில் நீங்கள் கடன் வாங்கிய கூட்டுறவு சங்க கிளைக்குச் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவிக்கவும். அதற்கான பதில் 15 முதல் 20 நாட்களில் உங்களுக்குக் கிடைத்துவிடும். அதற்குப் பிறகும் ஒரிஜினல் பத்திரம் கிடைக்கவில்லை எனில் சென்னை வேப்பேரியில் உள்ள கூட்டுறவு சங்க தலைமை அலுவலகத்துக்குச் சென்று புகார் தெரிவிக்கவும். அவர்கள் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.