என்னை பொறுத்தவரை வணங்கலாம். காரணம் உடம்பில் தெம்பு உள்ளவர்கள் உற்சவருடன் சென்று வருவது சிறப்பாகும். உடம்பில் தென்பு அற்றவர்கள் மூலவரை வணங்கலாம். மூலவர் இல்லை எனில் உற்சவர் இல்லை. உற்சவர் இல்லை எனில் மூலவர் இல்லை. எனவே உற்சவர் இல்லாத நேரத்தில் மூலவரே உற்சவராக செயல்படுவர். மேலும் மூலவருக்குள் உற்சவர் அடக்கம். வீட்டில் அப்பா இல்லாதபோது அம்மா பதில் சொல்வதை போன்றது. எனவே தவறு இல்லை.
நந்தா Said : 19 Oct 2013 03:22 AM
மூலவரின் எழுந்தருளித் திருமேனி தான் உற்சவர். உற்சவமூர்த்தி புறப்பாடு என்பது மூலவருக்கு செய்யும் விழா. அந்நேரத்தில் நாமும் திருவீதியுலாவில் கலந்து கொண்டு தரிசிப்பது சிறப்பு. சில கோயில்களில் உற்சவர் புறப்பாடானதும், மூலவர் சந்நிதியை நடை சாத்தும் வழக்கமும் உண்டு.