சகோதரர்களில் ஒருவர் இல்லாமல் ஒருவர் தனது பூர்வீக சொத்தை விற்க முடியுமா?
Rajasekar - 07 Nov 2014 04:18 AM
என்னுடைய சகோதரர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். தற்போது எங்களுடைய பூர்வீக சொத்தை எனது சகோதரர் கையெழுத்து இல்லாமல் விற்க முடியுமா?
Thiyagu Said : 08 Oct 2019 02:59 AM
என் தாத்தா சொத்து என் அப்பவிர்கு (மூத்தவர்) கொடுக்காமல் என் சித்தப்பாவிர்கும் என் அத்தைகும் பிரிவினை இல்லா பொதுசொத்து என்ரு எலுதிக் கொடுத்து விட்டு காலமானார்...அவர்கல் இருவருகும் வாரிசுகள் கிடையாது...எனக்கு அன்த சொத்து கிடைக்குமா? எனக்கு இப்போது 19 வயது ஆகிரது...என்னால் ஏதேனும் செய்ய முடியுமா ?
Anbazhagan Said : 15 Feb 2019 03:46 PM
Sir/madam , my grandfather purchase land 1 acre 1963 and my dad purchase land 2.85 acre total 3.85 acre . that sub division total 16.4 acre total 10 member .last 2002 9 member we are sharing land but one person not sign .he told now my land you are sharing place there and he give request to letter district collector . Voa told some legal issues. That place in my land part. What is the solution pls tell me sir
சத்தியராஜ் Said : 04 Sep 2017 06:46 AM
எனது தாத்தா விற்கு வயது 92 ஆகிறது நான்கு மகன்கள். பூர்வீக சொத்தை எனது தாத்தா கடைசி மகனின் மகன்களின் பெயரில் எங்களுக்கு தெரியாமல் கிரையம் எனும் பெயரில் எழுதி வைத்துவிட்டார் மற்ற நாங்கள் மூன்று பேரும் என்ன செய்ய வேண்டும்.
MURUGESAN Said : 26 Jan 2015 11:38 AM
உங்கள் சகோதரி இறப்பு செர்டிபிகாடே EDUNGA
Revathi Said : 27 Dec 2014 10:44 PM
எனது மாமியாருக்கு 3 தம்பிகள் 1 தங்கை .மாமியார் மூத்தவர் . மாமீயரின் அப்பாவின் சொத்தில் மாமியாருக்கு பங்கு கொடுக்க தம்பிகள் மறுக்கிறார்கள் . தற்போது மாமியார் உயிருடன் இல்லை . மாமியாருக்கு 4 ஆண் 1 பெண் உள்ளனர் . இப்போது இவர்கள் கஷ்டமான நிலையல் உள்ளனர் .மாமியாரின் அப்பாவுக்கு சுமார் 50 லட்சம் சொத்து உள்ளது . எனது மாமியாரின் கணவர் (மாமானர்) அல்லது மாமியாரின் பிள்ளைகள் சட்டபூர்வமாக பெற முடியுமா ?
malarvaanan Said : 07 Nov 2014 04:44 AM
உங்கள் சகோதரர் காணாமல் போய் ஏழு வருடங்களுக்கு மேல் ஆகியிருப்பதால், நீங்கள் நீதிமன்றத்தில், உங்கள் சகோதரர் சட்டப்படி இறந்துவிட்டதாக அறிவிக்குமாறு கேட்கலாம். உங்கள் சகோதரர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நகல், பத்திரிகையில் விளம்பரம் செய்தது ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். நீதிமன்றம் உங்கள் தம்பி இறந்துவிட்டதாக அறிவித்த பிறகு உங்கள் பூர்வீக சொத்தை அவருடைய கையெழுத்து இல்லாமல் விற்க முடியும். ஆனால், சொத்து விற்கப்பட்ட பிறகு உங்கள் தம்பி உயிருடன் வந்து சொத்தைக் கேட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்கவேண்டும்.