சொத்து பிரச்சனை |
- 09 Dec 2014 09:46 AM |
எங்க அப்பா ஒவட அண்ணன் எங்க அப்பாவுக்கு சொத்துல பாதி பங்கு தரனும். எங்க அப்பா 20 வருஷம் கேட்டு கொண்டு இருக்கிறார். இது தாத்தா வாயில் தான் சொன்னார். எந்த ஆதாரம் பத்திரம் மூலம் இல்லை. ஆனால் பெரியப்பா ஒரு பேப்பரில் எழுதி தந்திருக்கிறார்.தரனும் என்று. எங்க அப்பா ஒவட மிதி 3 அண்ணன்கள் கேஸ் போடு நாங்க உனக்கு சாட்சி சொல்கிறோம் என்று சொல்கின்றர். நிறைய பேர் எங்க அப்பாவுக்கு ஆதரவாக இருக்கிறார். இது கேஸ் போடலாமா...pls reply |
|
|
டில்லி பாபு Said : 18 Nov 2018 12:56 AM |
என் மூத்த மைத்துனர் , என் மாமனார் உடல் நலம் குன்றியிருந்த சமயத்தில் மாமனார் பெயரில் உள்ள சொத்தை என் மாமியாருக்கும், அவரது அக்கா,தம்பிக்கும் தெரியாமல் தன் பெயருக்கு மாற்றம் செய்து கொண்டார்.மாமனார் தற்போது இறந்து விட்டார்.மூத்த மைத்துனருக்கு உடன் பிறந்த அக்கா,தம்பி மற்றும் தாய் உள்ளனர்.அவர்களுக்கு எந்த ஒரு பொருளையும் பணமோ , சொத்தோ தராமல் உள்ளார்.மாமியார் தற்போது தன் பெயருக்கு சொத்தை மாற்றம் செய்யலாமா? அல்லது எந்த அதிகாரிகளுக்கு முறையீடு செய்ய வேண்டும். |
|
P.RAJAIYA Said : 11 Aug 2018 10:50 AM |
எங்கள் தாத்தாவிற்கு நான்கு ஆண்,ஒரு பெண்
மொத்தம் 5 பேர்.இப்போது தாத்தா இறந்து விட்டார். எங்கள் பாட்டி ஒரு மகனுக்கு மட்டும்
தன் சொத்தில்1பங்கை தானசெட்டில்மெண்ட்
செய்து, மீதி உள்ள சொத்திலும் பங்கு உண்டு, சட்டப்படி மாற்ற முடியாது என்று எழுதி விட்டால்,சட்டப்படி செல்லுமா?.செல்லதா?
cell no;8489052973 |
|
சத்தியராஜ் Said : 04 Sep 2017 06:58 AM |
எனது தாத்தாவிற்கு நான்கு மகன்கள் மூன்று மகன்களுக்கு தெரியாமல் கடைசி மகனின் மகன்களின் பெயரில் பூர்வீக சொத்தை கிரையம் என்ற பெயரில் விற்க முடியுமா? மற்ற நாங்கள் மூனறு பேரும் என்ன செய்ய வேண்டும் |
|
தினேஷ்ராஜ் Said : 23 Apr 2017 08:16 AM |
என் உடன் பிறந்தவர்கள் இரண்டு பெண் பிள்ளைகள். என் தந்தை 2010ம் ஆண்டு காலமானதால், என் தாய் குடும்பத்தை வழி நடத்தி வருகிறார். என் தாய் தந்தையர் சேர்த்து வைத்த சொத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. அவற்றில் உள்ள உரிமையை விட்டு கொடுக்கவும், என் பெயரில் உள்ள சொத்துக்களை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றம் செய்யவும் வழி என்ன. விளக்கவும். நன்றி. |
|
Tamilarasan Said : 27 Feb 2017 06:12 AM |
என் பாட்டி இறந்து விட்டார்.என் பாட்டி மீது தான் சொத்து இருக்கு.என் பாட்டிக்கு என் அப்பாவும்,அக்கா பசங்க 2 பெரும் இருக்கிறார்கள். இப்போ எப்படி அவங்களுக்கு பிரிப்பது னு தெரியல.தயவு செய்து சொல்லுங்க. |
|
Jamesh Said : 26 Feb 2017 01:48 AM |
நாங்கள் கிறித்தவ சமயம். என் ஐயா இறந்துவிட்டார் அவருக்கு ஒரு ஆண் 1பெண் குழந்தைகள். அனைவருக்கும் திருமணம் ஆகி 25வருடங்கள் முடிந்துவிட்டது.சொத்து ஐயா பெயரில் உள்ளது.அத்தைக்கு சொத்து கட்டாயம் கொடுக்க வேண்டுமா தேவை இல்லையா? ஆயா அப்பாவுடன் இருக்கிறார் |
|
சீனிவாசன் Said : 24 Feb 2017 07:54 AM |
என் அப்பா மற்றும் அம்மாவின் பெயரில் உள்ள சொத்திற்க்கு ,என் அப்பாவின் தாயார் பங்கு பெற முடியுமா |
|
பூமிநாதன் Said : 06 Dec 2016 06:34 PM |
என் தாத்தாவோட சொத்து என் அப்பா பெயரில் மாற்றம் செய்ய பட்டுள்ளது.என் தாத்தாவின் மகள்கள் சொத்துரிமை எடுப்பதற்கு சட்டம் உள்ளதா |
|
Madhan. k Said : 01 Jul 2016 03:53 AM |
எனது பாட்டியார் காலத்தில் அவரது சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டினை எனது மூன்று தாய் மாமன்களும் தவறுதலாக தங்கள் பெயரில் பதிவு செய்து உள்ளனர். இது பற்றி தங்கை வழி வாரிசுகளாகிய எங்களிடம் தெரிவிக்கவில்லை இதில் நாங்கள் உரிமை கோர முடியுமா முடியுமானால் அதற்குரிய சட்டங்கள் யாவை?????? |
|
ஸ்ரீதர் Said : 12 Jun 2016 11:14 AM |
எனது தாத்தாவின் சொத்தினை அவர் மகன்கள் 4 பேர் சேர்ந்து பிரித்துக்கொண்டனர்..அதில் ஒருவருக்கு 2 மனைவி அவர் இரண்டு மணைவிக்கும் சேர்த்து சொத்தினை பிரித்துக்கொண்டார்..ஆனால் இப்பொழுது நிலப்பிரச்சனை வருகிறது..மற்ற மூன்று சகோதரர்களின் மகன்கள்(தாத்தாவின் பேரன்கள் 3 பேர்) மறுபடியும் தாத்தா சொத்தினை பிரிக்கவேண்டும் என்கின்றனர்,4காவது பேரன் மட்டும் பிரிக்க கூடாது என்கிறார்...அதனால் பிரித்த சொத்தினை மீண்டும் பிரிக்க முடியுமா சார்.. |
|
|
Pages : 1 > 2 |