கோவை வணிக வளாகத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நான்கு பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவை, அவினாசி ரோட்டில், லட்சுமி மில் சந்திப்பில், தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று காலை சுமார் 9.50 மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. தடைபட்ட மின்சாரம் மீண்டும் வந்த போது, அந்த வணிக வளாகத்தில் இருந்த ஒரு பங்கு வர்த்தக நிறுவனத்தின் இன்வெர்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பங்கு வர்த்தக நிறுவனத்தின் ஊழியர்கள் இதை கவனிக்காததால், தீ மளமளவென வணிக வளாகம் முழுவதும் பரவியது. இதனை அடுத்து வணிக வளாகத்திற்குள் உள்ள ஊழியர்கள் அவசரவசரமாக வெளியேறினர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ அணைக்கும் முயற்சியில் ஈட்பட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இந்த சம்பவத்தில் வணிக வளாகத்தில் வேலை பார்த்த நான்கு பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பத்திற்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
|