LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி


4.51 திருக்கோடிகா - திருநேரிசை
திருச்சிற்றம்பலம்

488    நெற்றிமேற் கண்ணி னானே
    நீறுமெய் பூசி னானே
    கற்றைப்புன் சடையி னானே
    கடல்விடம் பருகி னானே
    செற்றவர் புரங்கள் மூன்றுஞ்
    செவ்வழல் செலுத்தி னானே
    குற்றமில் குணத்தி னானே
    கோடிகா வுடைய கோவே.     4.51.1
489     கடிகமழ் கொன்றை யானே
    கபாலங்கை யேந்தி னானே
    வடிவுடை மங்கை தன்னை
    மார்பிலோர் பாகத் தானே
    அடியிணை பரவ நாளும்
    அடியவர்க் கருள்செய் வானே
    கொடியணி விழவ தோவாக்
    கோடிகா வுடைய கோவே.     4.51.2
490     நீறுமெய் பூசி னானே
    நிழல்திகழ் மழுவி னானே
    ஏறுகந் தேறி னானே
    இருங்கடல் அமுதொப் பானே
    ஆறுமோர் நான்கு வேதம்
    அறமுரைத் தருளி னானே
    கூறுமோர் பெண்ணி னானே
    கோடிகா வுடைய கோவே.     4.51.3
491     காலனைக் காலாற் செற்றன்
    றருள்புரி கருணை யானே
    நீலமார் கண்டத் தானே
    நீண்முடி யமரர் கோவே
    ஞாலமாம் பெருமை யானே
    நளிரிளந் திங்கள் சூடுங்
    கோலமார் சடையி னானே
    கோடிகா வுடைய கோவே.     4.51.4
492     பூணர வாரத் தானே
    புலியுரி அரையி னானே
    காணில்வெண் கோவ ணமுங்
    கையிலோர் கபால மேந்தி
    ஊணுமூர்ப் பிச்சை யானே
    உமையொரு பாகத் தானே
    கோணல்வெண் பிறையி னானே
    கோடிகா வுடைய கோவே.     4.51.5
493     கேழல்வெண் கொம்பு பூண்ட
    கிளரொளி மார்பி னானே
    ஏழையேன் ஏழை யேன்நான்
    என்செய்கேன் எந்தை பெம்மான்
    மாழையொண் கண்ணி னார்கள்
    வலைதனில் மயங்கு கின்றேன்
    கூழைஏ றுடைய செல்வா
    கோடிகா வுடைய கோவே.     4.51.6
494     அழலுமிழ் அங்கை யானே
    அரிவையோர் பாகத் தானே
    தழலுமிழ் அரவம் ஆர்த்துத்
    தலைதனிற் பலிகொள் வானே
    நிழலுமிழ் சோலை சூழ
    நீள்வரி வண்டி னங்கள்
    குழலுமிழ் கீதம் பாடுங்
    கோடிகா வுடைய கோவே.     4.51.7
495    ஏவடு சிலையி னாலே
    புரமவை எரிசெய் தானே
    மாவடு வகிர்கொள் கண்ணாள்
    மலைமகள் பாகத் தானே
    ஆவடு துறையு ளானே
    ஐவரால் ஆட்டப் பட்டேன்
    கோவடு குற்றந் தீராய்
    கோடிகா வுடைய கோவே.     4.51.8
496     ஏற்றநீர்க் கங்கை யானே
    இருநிலந் தாவி னானும்
    நாற்றமா மலர்மேல் ஏறும்
    நான்முகன் இவர்கள் கூடி
    ஆற்றலால் அளக்க லுற்றார்க்
    கழலுரு வாயினானே
    கூற்றுக்குங் கூற்ற தானாய்
    கோடிகா வுடைய கோவே.     4.51.9
497     பழகநான் அடிமை செய்வேன்
    பசுபதீ பாவ நாசா
    மழகளி யானை யின்றோல்
    மலைமகள் வெருவப் போர்த்த
    அழகனே அரக்கன் திண்டோ ள்
    அருவரை நெரிய வூன்றுங்
    குழகனே கோல மார்பா
    கோடிகா வுடைய கோவே.     4.51.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்; தேவியார் - வடிவாம்பிகையம்மை

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.52 திருவாரூர் - திருநேரிசை

திருச்சிற்றம்பலம்

498     படுகுழிப் பவ்வத் தன்ன
    பண்டியைப் பெய்த வாற்றாற்
    கெடுவதிம் மனிதர் வாழ்க்கை
    காண்டொறுங் கேது கின்றேன்
    முடுகுவர் இருந்துள் ஐவர்
    மூர்க்கரே இவர்க ளோடும்
    அடியனேன் வாழ மாட்டேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.1
499     புழுப்பெய்த பண்டி தன்னைப்
    புறமொரு தோலால் மூடி
    ஒழுக்கறா ஒன்ப துவாய்
    ஒற்றுமை யொன்று மில்லை
    சழக்குடை இதனுள் ஐவர்
    சங்கடம் பலவுஞ் செய்ய
    அழிப்பனாய் வாழ மாட்டேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.2
500     பஞ்சின்மெல் லடியி னார்கள்
    பாங்கரா யவர்கள் நின்று
    நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து
    நினையினும் நினைய வொட்டார்
    நஞ்சணி மிடற்றி னானே
    நாதனே நம்ப னேநான்
    அஞ்சினேற் கஞ்ச லென்னீர்
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.3
501     கெண்டையந் தடங்கண் நல்லார்
    தம்மையே கெழும வேண்டிக்
    குண்டராய்த் திரிதந் தைவர்
    குலைத்திடர்க் குழியில் நூக்கக்
    கண்டுநான் தரிக்க கில்லேன்
    காத்துக்கொள் கறைசேர் கண்டா
    அண்டவா னவர்கள் போற்றும்
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.4
502     தாழ்குழல் இன்சொல் நல்லார்
    தங்களைத் தஞ்ச மென்று
    ஏழையே னாகி நாளும்
    என்செய்கேன் எந்தை பெம்மான்
    வாழ்வதேல் அரிது போலும்
    வைகலும் ஐவர் வந்து
    ஆழ்குழிப் படுத்த வாற்றேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.5
503     மாற்றமொன் றருள கில்லீர்
    மதியிலேன் விதியி லாமை
    சீற்றமுந் தீர்த்தல் செய்யீர்
    சிக்கன வுடைய ராகிக்
    கூற்றம்போல் ஐவர் வந்து
    குலைத்திட்டுக் கோகு செய்ய
    ஆற்றவுங் கில்லேன் நாயேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.6
504     உயிர்நிலை யுடம்பே காலா
    உள்ளமே தாழி யாகத்
    துயரமே ஏற்ற மாகத்
    துன்பக்கோ லதனைப் பற்றிப்
    பயிர்தனைச் சுழிய விட்டுப்
    பாழ்க்குநீர் இறைத்து மிக்க
    அயர்வினால் ஐவர்க் காற்றேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.7
505     கற்றதேல் ஒன்று மில்லை
    காரிகை யாரோ டாடிப்
    பெற்றதேற் பெரிதுந் துன்பம்
    பேதையேன் பிழைப்பி னாலே
    முற்றினால் ஐவர் வந்து
    முறைமுறை துயரஞ் செய்ய
    அற்றுநான் அலந்து போனேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.8
506     பத்தனாய் வாழ மாட்டேன்
    பாவியேன் பரவி வந்து
    சித்தத்துள் ஐவர் தீய
    செய்வினை பலவுஞ் செய்ய
    மத்துறு தயிரே போல
    மறுகுமென் னுள்ளந் தானும்
    அத்தனே அமரர் கோவே
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.9
507     தடக்கைநா லைந்துங் கொண்டு
    தடவரை தன்னைப் பற்றி
    எடுத்தவன் பேர்க்க ஓடி
    இரிந்தன பூத மெல்லாம்
    முடித்தலை யனைத்துந் தோளும்
    முறிதர இறையே யூன்றி
    அடர்த்தருள் செய்த தென்னே
    ஆரூர்மூ லட்ட னீரே.     4.52.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.53 திருவாரூர் - திருநேரிசை

திருச்சிற்றம்பலம்

508    குழல்வலங் கொண்ட சொல்லாள்
    கோலவேற் கண்ணி தன்னைக்
    கழல்வலங் கொண்டு நீங்காக்
    கணங்களக் கணங்க ளார
    அழல்வலங் கொண்ட கையான்
    அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
    தொழல்வலங் கொண்டல் செய்வான்
    தோன்றினார் தோன்றி னாரே.     4.53.1
509     நாகத்தை நங்கை அஞ்ச
    நங்கையை மஞ்ஞை யென்று
    வேகத்தைத் தவிர நாகம்
    வேழத்தின் உரிவை போர்த்துப்
    பாகத்தின் நிமிர்தல் செய்யாத்
    திங்களை மின்னென் றஞ்சி
    ஆகத்திற் கிடந்த நாகம்
    அடங்கும்ஆ ரூர னார்க்கே.     4.53.2
510     தொழுதகங் குழைய மேவித்
    தோட்டிமை யுடைய தொண்டர்
    அழுதகம் புகுந்து நின்றார்
    அவரவர் போலும் ஆரூர்
    எழிலக நடுவெண் முத்த
    மன்றியும் ஏர்கொள் வேலிப்
    பொழிலகம் விளங்கு திங்கட்
    புதுமுகிழ் சூடி னாரே.     4.53.3
511     நஞ்சிருள் மணிகொள் கண்டர்
    நகையிருள் ஈமக் கங்குல்
    வெஞ்சுடர் விளக்கத் தாடி
    விளங்கினார் போலும் மூவா
    வெஞ்சுடர் முகடு தீண்டி
    வெள்ளிநா ராச மன்ன
    அஞ்சுடர் அணிவெண் டிங்கள்
    அணியும்ஆ ரூர னாரே.     4.53.4
512     எந்தளிர் நீர்மை கோல
    மேனியென் றிமையோ ரேத்தப்
    பைந்தளிர்க் கொம்ப ரன்ன
    படர்கொடி பயிலப் பட்டுத்
    தஞ்சடைத் தொத்தி னாலுந்
    தம்மதோர் நீர்மை யாலும்
    அந்தளிர் ஆகம் போலும்
    வடிவர்ஆ ரூர னாரே.     4.53.5
513     வானகம் விளங்க மல்கும்
    வளங்கெழு மதியஞ் சூடித்
    தானக மழிய வந்து
    தாம்பலி தேர்வர் போலும்
    ஊனகங் கழிந்த ஓட்டில்
    உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
    ஆனகம் அஞ்சும் ஆடும்
    அடிகள்ஆ ரூர னாரே.     4.53.6
514     அஞ்சணை கணையி னானை
    அழலுற அன்று நோக்கி
    அஞ்சணை குழலி னாளை
    அமுதமா அணைந்து நக்கு
    அஞ்சணை அஞ்சும் ஆடி
    ஆடர வாட்டு வார்தாம்
    அஞ்சணை வேலி ஆரூர்
    ஆதரித் திடங்கொண் டாரே.     4.53.7
515     வணங்கிமுன் அமரர் ஏத்த
    வல்வினை யான தீரப்
    பிணங்குடைச் சடையில் வைத்த
    பிறையுடைப் பெருமை யண்ணல்
    மணங்கம ழோதி பாகர்
    மதிநிலா வட்டத் தாடி
    அணங்கொடி மாட வீதி
    ஆரூரெம் அடிக ளாரே.     4.53.8
516     நகலிடம் பிறர்கட் காக
    நான்மறை யோர்கள் தங்கள்
    புகலிட மாகி வாழும்
    புகலிலி இருவர் கூடி
    இகலிட மாக நீண்டங்
    கீண்டெழில் அழல தாகி
    அகலிடம் பரவி யேத்த
    அடிகள்ஆ ரூர னாரே.     4.53.9
517     ஆயிரந் திங்கள் மொய்த்த
    அலைகடல் அமுதம் வாங்கி
    ஆயிரம் அசுரர் வாழும்
    அணிமதில் மூன்றும் வேவ
    ஆயிரந் தோளும் மட்டித்
    தாடிய அசைவு தீர
    ஆயிரம் அடியும் வைத்த
    அடிகள்ஆ ரூர னாரே.     4.53.10

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.54 திருப்புகலூர் - திருநேரிசை
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    518    பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்
        பாறிநீ றாகி வீழப்
        புகைத்திட்ட தேவர் கோவே
        பொறியிலேன் உடலந் தன்னுள்
        அகைத்திட்டங் கதனை நாளும்
        ஐவர்கொண் டாட்ட வாடித்
        திகைத்திட்டேன் செய்வ தென்னே
        திருப்புக லூர னீரே.     4.54.1
    519     மையரி மதர்த்த ஒண்கண்
        மாதரார் வலையிற் பட்டுக்
        கையெரி சூல மேந்துங்
        கடவுளை நினைய மாட்டேன்
        ஐநெரிந் தகமி டற்றே
        அடைக்கும்போ தாவி யார்தாஞ்
        செய்வதொன் றறிய மாட்டேன்
        திருப்புக லூர னீரே.     4.54.2
    520     முப்பதும் முப்பத் தாறும்
        முப்பதும் இடுகு ரம்பை
        அப்பர்போல் ஐவர் வந்து
        அதுதரு கிதுவி டென்று
        ஒப்பவே நலிய லுற்றால்
        உய்யுமா றறிய மாட்டேன்
        செப்பமே திகழு மேனித்
        திருப்புக லூர னீரே.     4.54.3
    521     பொறியிலா அழுக்கை யோம்பிப்
        பொய்யினை மெய்யென் றெண்ணி
        நெறியலா நெறிகள் சென்றேன்
        நீதனேன் நீதி யேதும்
        அறிவிலேன் அமரர் கோவே
        அமுதினை மண்ணில் வைக்குஞ்
        செறிவிலேன் செய்வ தென்னே
        திருப்புக லூர னீரே.     4.54.4
    522     அளியினார் குழலி னார்கள்
        அவர்களுக் கன்ப தாகிக்
        களியினார் பாடல் ஓவாக்
        கடவூர்வீ ரட்ட மென்னுந்
        தளியினார் பாத நாளும்
        நினைவிலாத் தகவில் நெஞ்சந்
        தெளிவிலேன் செய்வ தென்னே
        திருப்புக லூர னீரே.     4.54.5
    523     இலவினார் மாதர் பாலே
        இசைந்துநான் இருந்து பின்னும்
        நிலவுநாள் பலவென் றெண்ணி
        நீதனேன் ஆதி உன்னை
        உலவிநான் உள்க மாட்டேன்
        உன்னடி பரவு ஞானஞ்
        செலவிலேன் செய்வ தென்னே
        திருப்புக லூர னீரே.     4.54.6
    524     காத்திலேன் இரண்டும் மூன்றுங்
        கல்வியேல் இல்லை என்பால்
        வாய்த்திலேன் அடிமை தன்னுள்
        வாய்மையால் தூயே னல்லேன்
        பார்த்தனுக் கருள்கள் செய்த
        பரமனே பரவு வார்கள்
        தீர்த்தமே திகழும் பொய்கைத்
        திருப்புக லூர னீரே.     4.54.7
    525     நீருமாய்த் தீயு மாகி
        நிலனுமாய் விசும்பு மாகி
        ஏருடைக் கதிர்க ளாகி
        இமையவர் இறைஞ்ச நின்று
        ஆய்வதற் கரிய ராகி
        அங்கங்கே யாடு கின்ற
        தேவர்க்குந் தேவ ராவார்
        திருப்புக லூர னாரே.     4.54.8
    526     மெய்யுளே விளக்கை ஏற்றி
        வேண்டள வுயரத் தூண்டி
        உய்வதோர் உபாயம் பற்றி
        உகக்கின்றேன் உகவா வண்ணம்
        ஐவரை அகத்தே வைத்தீர்
        அவர்களே வலியர் சாலச்
        செய்வதொன் றறிய மாட்டேன்
        திருப்புக லூர னீரே.     4.54.9
    527     அருவரை தாங்கி னானும்
        அருமறை யாதி யானும்
        இருவரும் அறிய மாட்டா
        ஈசனார் இலங்கை வேந்தன்
        கருவரை எடுத்த ஞான்று
        கண்வழி குருதி சோரத்
        திருவிரல் சிறிது வைத்தார்
        திருப்புக லூர னாரே.     4.54.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
    தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.55 திருவலம்புரம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    528    தெண்டிரை தேங்கி ஓதஞ்
        சென்றடி வீழுங் காலைத்
        தொண்டிரைத் தண்டர் கோனைத்
        தொழுதடி வணங்கி யெங்கும்
        வண்டுகள் மதுக்கள் மாந்தும்
        வலம்புரத் தடிகள் தம்மைக்
        கொண்டுநற் கீதம் பாடக்
        குழகர்தாம் இருந்த வாறே.     4.55.1
    529     மடுக்களில் வாளை பாய
        வண்டினம் இரிந்த பொய்கைப்
        பிடிக்களி றென்னத் தம்மிற்
        பிணைபயின் றணைவ ரால்கள்
        தொடுத்தநன் மாலை ஏந்தித்
        தொண்டர்கள் பரவி யேத்த
        வடித்தடங் கண்ணி பாகர்
        வலம்புரத் திருந்த வாறே.     4.55.2
    530     தேனுடை மலர்கள் கொண்டு
        திருந்தடி பொருந்தச் சேர்த்தி
        ஆனிடை அஞ்சுங் கொண்டு
        அன்பினால் அமர வாட்டி
        வானிடை மதியஞ் சூடும்
        வலம்புரத் தடிகள் தம்மை
        நானடைந் தேத்தப் பெற்று
        நல்வினைப் பயனுற் றேனே.     4.55.3
    531     முளைஎயிற் றிளநல் ஏனம்
        பூண்டுமொய் சடைகள் தாழ
        வளைஎயிற் றிளைய நாகம்
        வலித்தரை யிசைய வீக்கிப்
        புளைகைய போர்வை போர்த்துப்
        புனலொடு மதியஞ் சூடி
        வளைபயில் இளைய ரேத்தும்
        வலம்புரத் தடிகள் தாமே.     4.55.4
    532     சுருளுறு வரையின் மேலாற்
        றுளங்கிளம் பளிங்கு சிந்த
        இருளுறு கதிர்நு ழைந்த
        இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
        அருளுறும் அடிய ரெல்லாம்
        அங்கையின் மலர்கள் ஏந்த
        மருளுறு கீதங் கேட்டார்
        வலம்புரத் தடிக ளாரே.     4.55.5
    533     நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்
        நீண்டபுன் சடையி னானே
        அனைத்துடன் கொண்டு வந்தங்
        கன்பினால் அமைய வாட்டிப்
        புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை
        மெய்ம்மையைப் புணர மாட்டேன்
        எனக்குநான் செய்வ தென்னே
        இனிவலம் புரவ னீரே.     4.55.6
    534     செங்கயல் சேல்கள் பாய்ந்து
        தேம்பழ மினிய நாடித்
        தங்கயந் துறந்து போந்து
        தடம்பொய்கை அடைந்து நின்று
        கொங்கையர் குடையுங் காலைக்
        கொழுங்கனி யழுங்கி னாராம்
        மங்கல மனையின் மிக்கார்
        வலம்புரத் தடிக ளாரே.     4.55.7
    535    அருகெலாங் குவளை செந்நெல்
        அகவிலை யாம்பல் நெய்தல்
        தெருவெலாந் தெங்கு மாவும்
        பழம்விழும் படப்பை யெல்லாங்
        குருகினங் கூடி யாங்கே
        கும்மலித் திறகு லர்த்தி
        மருவலா மிடங்கள் காட்டும்
        வலம்புரத் தடிக ளாரே.     4.55.8
    536     கருவரை யனைய மேனிக்
        கடல்வண்ண னவனுங் காணான்
        திருவரை யனைய பூமேல்
        திசைமுக னவனுங் காணான்
        ஒருவரை உச்சி ஏறி
        ஓங்கினார் ஓங்கி வந்து
        அருமையில் எளிமை யானார்
        அவர்வலம் புரவ னாரே.     4.55.9
    537     வாளெயி றிலங்க நக்கு
        வளர்கயி லாயந் தன்னை
        ஆள்வலி கருதிச் சென்ற
        அரக்கனை வரைக்கீ ழன்று
        தோளொடு பத்து வாயுந்
        தொலைந்துடன் அழுந்த வூன்றி
        ஆண்மையும் வலியுந் தீர்ப்பார்
        அவர்வலம் புரவ னாரே.     4.55.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.56 திருஆவடுதுறை - திருநேரிசை
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    538    மாயிரு ஞால மெல்லாம்
        மலரடி வணங்கும் போலும்
        பாயிருங் கங்கை யாளைப்
        படர்சடை வைப்பர் போலுங்
        காயிரும் பொழில்கள் சூழ்ந்த
        கழுமல வூரர்க் கம்பொன்
        ஆயிரங் கொடுப்பர் போலும்
        ஆவடு துறைய னாரே.     4.56.1
    539     மடந்தை பாகத்தர் போலும்
        மான்மறிக் கையர் போலும்
        குடந்தையிற் குழகர் போலுங்
        கொல்புலித் தோலர் போலுங்
        கடைந்தநஞ் சுண்பர் போலுங்
        காலனைக் காய்வர் போலும்
        அடைந்தவர்க் கன்பர் போலும்
        ஆவடு துறைய னாரே.     4.56.2
    540     உற்றநோய் தீர்ப்பர் போலும்
        உறுதுணை யாவர் போலுஞ்
        செற்றவர் புரங்கள் மூன்றுந்
        தீயெழச் செறுவர் போலுங்
        கற்றவர் பரவி யேத்தக்
        கலந்துலந் தலந்து பாடும்
        அற்றவர்க் கன்பர் போலும்
        ஆவடு துறைய னாரே.     4.56.3
    541     மழுவமர் கையர் போலும்
        மாதவள் பாகர் போலும்
        எழுநுனை வேலர் போலும்
        என்புகொண் டணிவர் போலுந்
        தொழுதெழுந் தாடிப் பாடித்
        தோத்திரம் பலவுஞ் சொல்லி
        அழுமவர்க் கன்பர் போலும்
        ஆவடு துறைய னாரே.     4.56.4
    542     பொடியணி மெய்யர் போலும்
        பொங்குவெண் ணூலர் போலுங்
        கடியதோர் விடையர் போலுங்
        காமனைக் காய்வர் போலும்
        வெடிபடு தலையர் போலும்
        வேட்கையாற் பரவுந் தொண்டர்
        அடிமையை அளப்பர் போலும்
        ஆவடு துறைய னாரே.     4.56.5
    543    வக்கரன் உயிரை வவ்வக்
        கண்மலர் கொண்டு போற்றச்
        சக்கரங் கொடுப்பர் போலுந்
        தானவர் தலைவர் போலுந்
        துக்கமா மூடர் தம்மைத்
        துயரிலே வீழ்ப்பர் போலும்
        அக்கரை ஆர்ப்பர் போலும்
        ஆவடு துறைய னாரே.     4.56.6
    544     விடைதரு கொடியர் போலும்
        வெண்புரி நூலர் போலும்
        படைதரு மழுவர் போலும்
        பாய்புலித் தோலர் போலும்
        உடைதரு கீளர் போலும்
        உலகமு மாவர் போலும்
        அடைபவர் இடர்கள் தீர்க்கும்
        ஆவடு துறைய னாரே.     4.56.7
    545     முந்திவா னோர்கள் வந்து
        முறைமையால் வணங்கி யேத்த
        நந்திமா காள ரென்பார்
        நடுவுடை யார்கள் நிற்பச்
        சிந்தியா தேயொ ழிந்தார்
        திரிபுரம் எரிப்பர் போலும்
        அந்திவான் மதியஞ் சூடும்
        ஆவடு துறைய னாரே.     4.56.8
    546     பானமர் ஏன மாகிப்
        பாரிடந் திட்ட மாலுந்
        தேனமர்ந் தேறும் அல்லித்
        திசைமுக முடைய கோவுந்
        தீனரைத் தியக் கறுத்த
        திருவுரு வுடையர் போலும்
        ஆனரை ஏற்றர் போலும்
        ஆவடு துறைய னாரே.     4.56.9
    547     பார்த்தனுக் கருள்வர் போலும்
        படர்சடை முடியர் போலும்
        ஏத்துவார் இடர்கள் தீர
        இன்பங்கள் கொடுப்பர் போலுங்
        கூத்தராய்ப் பாடி யாடிக்
        கொடுவலி யரக்கன் றன்னை
        ஆர்த்தவாய் அலறு விப்பார்
        ஆவடு துறைய னாரே.     4.56.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.57. திருஆவடுதுறை - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    548    மஞ்சனே மணியு மானாய்
        மரகதத் திரளு மானாய்
        நெஞ்சுளே புகுந்து நின்று
        நினைதரு நிகழ்வி னானே
        துஞ்சும்போ தாக வந்து
        துணையெனக் காகி நின்று
        அஞ்சலென் றருள வேண்டும்
        ஆவடு துறையு ளானே.     4.57.1
    549     நானுகந் துன்னை நாளும்
        நணுகுமா கருதி யேயும்
        ஊனுகந் தோம்பும் நாயேன்
        உள்ளுற ஐவர் நின்றார்
        தானுகந் தேயு கந்த
        தகவிலாத் தொண்ட னேன்நான்
        ஆனுகந் தேறு வானே
        ஆவடு துறையு ளானே.     4.57.2
    550     கட்டமே வினைக ளான
        காத்திவை நோக்கி ஆளாய்
        ஒட்டவே ஒட்டி நாளும்
        உன்னையுள் வைக்க மாட்டேன்
        பட்டவான் தலைகை யேந்திப்
        பலிதிரிந் தூர்கள் தோறும்
        அட்டமா வுருவி னானே
        ஆவடு துறையு ளானே.     4.57.3
    551     பெருமைநன் றுடைய தில்லை
        யென்றுநான் பேச மாட்டேன்
        ஒருமையால் உன்னை உள்கி
        உகந்துவா னேற மாட்டேன்
        கருமையிட் டாய வூனைக்
        கட்டமே கழிக்கின் றேன்நான்
        அருமையா நஞ்ச முண்ட
        ஆவடு துறையு ளானே.     4.57.4
    552     துட்டனாய் வினைய தென்னுஞ்
        சுழித்தலை அகப்பட் டேனைக்
        கட்டனாய் ஐவர் வந்து
        கலக்காமைக் காத்துக் கொள்வாய்
        மட்டவிழ் கோதை தன்னை
        மகிழ்ந்தொரு பாகம் வைத்து
        அட்டமா நாக மாட்டும்
        ஆவடு துறையு ளானே.     4.57.5
    553     காரழற் கண்ட மேயாய்
        கடிமதிற் புரங்கள் மூன்றும்
        ஓரழல் அம்பி னாலே
        யுகைத்துத்தீ எரிய மூட்டி
        நீரழற் சடையு ளானே
        நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
        ஆரழல் ஏந்தி யாடும்
        ஆவடு துறையு ளானே.     4.57.6
    554     செறிவிலேன் சிந்தை யுள்ளே
        சிவனடி தெரிய மாட்டேன்
        குறியிலேன் குணமொன் றில்லேன்
        கூறுமா கூற மாட்டேன்
        நெறிபடு மதியொன் றில்லேன்
        நினையுமா நினைய மாட்டேன்
        அறிவிலேன் அயர்த்துப் போனேன்
        ஆவடு துறையு ளானே.     4.57.7
    555     கோலமா மங்கை தன்னைக்
        கொண்டொரு கோல மாய
        சீலமே அறிய மாட்டேன்
        செய்வினை மூடி நின்று
        ஞாலமாம் இதனுள் என்னை
        நைவியா வண்ணம் நல்காய்
        ஆலமா நஞ்ச முண்ட
        ஆவடு துறையு ளானே.     4.57.8
    556     நெடியவன் மலரி னானும்
        நேர்ந்திரு பாலும் நேடக்
        கடியதோர் உருவ மாகிக்
        கனலெரி யாகி நின்ற
        வடிவின வண்ண மென்றே
        என்றுதாம் பேச லாகார்
        அடியனேன் நெஞ்சி னுள்ளார்
        ஆவடு துறையு ளானே.     4.57.9
    557     மலைக்குநே ராய ரக்கன்
        சென்றுற மங்கை அஞ்சத்
        தலைக்குமேற் கைக ளாலே
        தாங்கினான் வலியை மாள
        உலப்பிலா விரலால் ஊன்றி
        ஒறுத்தவற் கருள்கள் செய்து
        அலைத்தவான் கங்கை சூடும்
        ஆவடு துறையு ளானே.     4.57.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.58 திருப்பருப்பதம் - திருநேரிசை
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    558    கன்றினார் புரங்கள் மூன்றுங்
        கனலெரி யாகச் சீறி
        நின்றதோ ருருவந் தன்னால்
        நீர்மையும் நிறையுங் கொண்டு
        ஒன்றியாங் குமையுந் தாமும்
        ஊர்பலி தேர்ந்து பின்னும்
        பன்றிப்பின் வேட ராகிப்
        பருப்பத நோக்கி னாரே.     4.58.1
    559     கற்றமா மறைகள் பாடிக்
        கடைதொறும் பலியுந் தேர்வார்
        வற்றலோர் தலைகை யேந்தி
        வானவர் வணங்கி வாழ்த்த
        முற்றவோர் சடையில் நீரை
        ஏற்றமுக் கண்ணர் தம்மைப்
        பற்றினார்க் கருள்கள் செய்து
        பருப்பத நோக்கி னாரே.     4.58.2
    560     கரவிலா மனத்த ராகிக்
        கைதொழு வார்கட் கென்றும்
        இரவினின் றெரிய தாடி
        இன்னருள் செய்யும் எந்தை
        மருவலார் புரங்கள் மூன்று
        மாட்டிய நகைய ராகிப்
        பரவுவார்க் கருள்கள் செய்து
        பருப்பத நோக்கி னாரே.     4.58.3
    561     கட்டிட்ட தலைகை யேந்திக்
        கனலெரி யாடிச் சீறிச்
        சுட்டிட்ட நீறு பூசிச்
        சுடுபிணக் காட ராகி
        விட்டிட்ட வேட்கை யார்க்கு
        வேறிருந் தருள்கள் செய்து
        பட்டிட்ட வுடைய ராகிப்
        பருப்பத நோக்கி னாரே.     4.58.4
    562     கையராய்க் கபால மேந்திக்
        காமனைக் கண்ணாற் காய்ந்து
        மெய்யராய் மேனி தன்மேல்
        விளங்குவெண் ணீறு பூசி
        உய்யரா யுள்கு வார்கட்
        குவகைகள் பலவுஞ் செய்து
        பையரா அரையி லார்த்துப்
        பருப்பத நோக்கி னாரே.     4.58.5
    563     வேடராய் வெய்ய ராகி
        வேழத்தி னுரிவை போர்த்து
        ஓடரா யுலக மெல்லா
        முழிதர்வர் உமையுந் தாமுங்
        காடராய்க் கனல்கை யேந்திக்
        கடியதோர் விடைமேற் கொண்டு
        பாடராய்ப் பூதஞ் சூழப்
        பருப்பத நோக்கி னாரே.     4.58.6
    564     மேகம்போல் மிடற்ற ராகி
        வேழத்தி னுரிவை போர்த்து
        ஏகம்பம் மேவி னார்தாம்
        இமையவர் பரவி யேத்தக்
        காகம்பர் கழற ராகிக்
        கடியதோர் விடையொன் றேறிப்
        பாகம்பெண் ணுருவ மானார்
        பருப்பத நோக்கி னாரே.     4.58.7
    565     பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்
        பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
        காருடைக் கண்ட ராகிக்
        கபாலமோர் கையி லேந்திச்
        சீருடைச் செங்கண் வெள்ளே
        றேறிய செல்வர் நல்ல
        பாரிடம் பாணி செய்யப்
        பருப்பத நோக்கி னாரே.     4.58.8
    566     அங்கண்மா லுடைய ராய
        ஐவரா லாட்டு ணாதே
        உங்கள்மால் தீர வேண்டில்
        உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
        செங்கண்மால் பரவி யேத்திச்
        சிவனென நின்ற செல்வர்
        பைங்கண்வெள் ளேற தேறிப்
        பருப்பத நோக்கி னாரே.     4.58.9
    567     அடல்விடை யூர்தி யாகி
        அரக்கன்றோள் அடர வூன்றிக்
        கடலிடை நஞ்ச முண்ட
        கறையணி கண்ட னார்தாஞ்
        சுடர்விடு மேனி தன்மேற்
        சுண்ணவெண் ணீறு பூசிப்
        படர்சடை மதியஞ் சேர்த்திப்
        பருப்பத நோக்கி னாரே.     4.58.10

    இத்தலம் வடநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - மனோன்மணியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.59 திருஅவளிவணல்லூர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    568     தோற்றினான் எயிறு கவ்வித்
        தொழிலுடை யரக்கன் றன்னைத்
        தேற்றுவான் சென்று சொல்லச்
        சிக்கெனத் தவிரு மென்று
        வீற்றினை யுடைய னாகி
        வெடுவெடுத் தெழுந்த வன்றன்
        ஆற்றலை அழிக்க வல்லார்
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.1
    569     வெம்பினா ரரக்க ரெல்லாம்
        மிகச்சழக் காயிற் றென்று
        செம்பினா லெடுத்த கோயில்
        சிக்கெனச் சிதையு மென்ன
        நம்பினா ரென்று சொல்லி
        நன்மையான் மிக்கு நோக்கி
        அம்பினால் அழிய வெய்தார்
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.2
    570     கீழ்ப்படக் கருத லாமோ
        கீர்த்திமை யுள்ள தாகிற்
        தோட்பெரு வலியி னாலே
        தொலைப்பன்யான் மலையை யென்று
        வேட்பட வைத்த வாறே
        விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
        ஆட்படக் கருதிப் புக்கார்
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.3
    571     நிலைவலம் வல்ல னல்லன்
        நேர்மையை நினைய மாட்டான்
        சிலைவலங் கொண்ட செல்வன்
        சீரிய கயிலை தன்னைத்
        தலைவலங் கருதிப் புக்குத்
        தாக்கினான் தன்னை யன்று
        அலைகுலை யாக்கு வித்தார்
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.4
    572     தவ்வலி யொன்ற னாகித்
        தனதொரு பெருமை யாலே
        மெய்வ்வலி யுடைய னென்று
        மிகப்பெருந் தேரை யூர்ந்து
        செவ்வலி கூர்வி ழியாற்
        சிரமத்தான் எடுக்குற் றானை
        அவ்வலி தீர்க்க வல்லார்
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.5
    573    நன்மைதான் அறிய மாட்டான்
        நடுவிலா அரக்கர் கோமான்
        வன்மையே கருதிச் சென்று
        வலிதனைச் செலுத்த லுற்றுக்
        கன்மையான் மலையை யோடிக்
        கருதித்தான் எடுத்து வாயால்
        அம்மையோ வென்ன வைத்தார்
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.6
    574     கதம்படப் போது வார்கள்
        போதுமக் கருத்தி னாலே
        சிதம்பட நின்ற நீர்கள்
        சிக்கெனத் தவிரு மென்று
        மதம்படு மனத்த னாகி
        வன்மையான் மிக்கு நோக்க
        அதம்பழத் துருவு செய்தார்
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.7
    575     நாடுமிக் குழிதர் கின்ற
        நடுவிலா அரக்கர் கோனை
        ஓடுமிக் கென்று சொல்லி
        ஊன்றினான் உகிரி னாலே
        பாடுமிக் குய்வ னென்று
        பணியநற் றிறங்கள் காட்டி
        ஆடுமிக் கரவம் பூண்டார்
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.8
    576     ஏனமா யிடந்த மாலும்
        எழில்தரு முளரி யானும்
        ஞானந்தா னுடைய ராகி
        நன்மையை அறிய மாட்டார்
        சேனந்தான் இலாவ ரக்கன்
        செழுவரை எடுக்க வூன்றி
        ஆனந்த அருள்கள் செய்தார்
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.9
    577    ஊக்கினான் மலையை யோடி
        உணர்விலா அரக்கன் றன்னைத்
        தாக்கினான் விரலி னாலே
        தலைபத்துந் தகர வூன்றி
        நோக்கினான் அஞ்சத் தன்னை
        நோன்பிற வூன்று சொல்லி
        ஆக்கினார் அமுத மாக
        அவளிவ ணல்லூ ராரே.     4.59.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    578    மறையணி நாவி னானை
        மறப்பிலார் மனத்து ளானைக்
        கறையணி கண்டன் றன்னைக்
        கனலெரி யாடி னானைப்
        பிறையணி சடையி னானைப்
        பெருவேளூர் பேணி னானை
        நறையணி மலர்கள் தூவி
        நாடொறும் வணங்கு வேனே.     4.60.1
    579     நாதனாய் உலக மெல்லாம்
        நம்பிரான் எனவும் நின்ற
        பாதனாம் பரம யோகி
        பலபல திறத்தி னாலும்
        பேதனாய்த் தோன்றி னானைப்
        பெருவேளூர் பேணி னானை
        ஓதநா வுடைய னாகி
        உரைக்குமா றுரைக்கின் றேனே.     4.60.2
    580     குறவிதோள் மணந்த செல்வக்
        குமரவேள் தாதை யென்று
        நறவிள நறுமென் கூந்தல்
        நங்கையோர் பாகத் தானைப்
        பிறவியை மாற்று வானைப்
        பெருவேளூர் பேணி னானை
        உறவினால் வல்ல னாகி
        உணருமா றுணர்த்து வேனே.     4.60.3
    581     மைஞ்ஞவில் கண்டன் றன்னை
        வலங்கையின் மழுவொன் றேந்திக்
        கைஞ்ஞவில் மானி னோடுங்
        கனலெரி யாடி னானைப்
        பிஞ்ஞகன் றன்னை அந்தண்
        பெருவேளூர் பேணி னானைப்
        பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்
        பொறியிலா அறிவி லேனே.     4.60.4
    582     ஓடைசேர் நெற்றி யானை
        உரிவையை மூடி னானை
        வீடதே காட்டு வானை
        வேதநான் காயி னானைப்
        பேடைசேர் புறவ நீங்காப்
        பெருவேளூர் பேணி னானைக்
        கூடநான் வல்ல மாற்றங்
        குறுகுமா றறிகி லேனே.     4.60.5
    583     கச்சைசேர் நாகத் தானைக்
        கடல்விடங் கண்டத் தானைக்
        கச்சியே கம்பன் றன்னைக்
        கனலெரி யாடு வானைப்
        பிச்சைசேர்ந் துழல்வி னானைப்
        பெருவேளூர் பேணி னானை
        இச்சைசேர்ந் தமர நானும்
        இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.     4.60.6
    584    சித்தராய் வந்து தன்னைத்
        திருவடி வணங்கு வார்கள்
        முத்தனை மூர்த்தி யாய
        முதல்வனை முழுது மாய
        பித்தனைப் பிறரு மேத்தப்
        பெருவேளூர் பேணி னானை
        மெத்தனே யவனை நாளும்
        விரும்புமா றறிகி லேனே.     4.60.7
    585     முண்டமே தாங்கி னானை
        முற்றிய ஞானத் தானை
        வண்டுலாங் கொன்றை மாலை
        வளர்மதிக் கண்ணி யானைப்
        பிண்டமே ஆயி னானைப்
        பெருவேளூர் பேணி னானை
        அண்டமாம் ஆதி யானை
        அறியுமா றறிகி லேனே.     4.60.8
    586     விரிவிலா அறிவி னார்கள்
        வேறொரு சமயஞ் செய்து
        எரிவினாற் சொன்னா ரேனும்
        எம்பிராற் கேற்ற தாகும்
        பரிவினாற் பெரியோ ரேத்தும்
        பெருவேளூர் பற்றி னானை
        மருவிநான் வாழ்த்தி உய்யும்
        வகையது நினைக்கின் றேனே.     4.60.9
    587     பொருகடல் இலங்கை மன்னன்
        உடல்கெடப் பொருத்தி நல்ல
        கருகிய கண்டத் தானைக்
        கதிரிளங் கொழுந்து சூடும்
        பெருகிய சடையி னானைப்
        பெருவேளூர் பேணி னானை
        உருகிய அடிய ரேத்தும்
        உள்ளத்தால் உள்கு வேனே.     4.60.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.61 திருஇராமேச்சுரம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    588    பாசமுங் கழிக்க கில்லா
        அரக்கரைப் படுத்துத் தக்க
        வாசமிக் கலர்கள் கொண்டு
        மதியினால் மால்செய் கோயில்
        நேசமிக் கன்பி னாலே
        நினைமின்நீர் நின்று நாளுந்
        தேசமிக் கான் இருந்த
        திருஇரா மேச்சு ரமே.     4.61.1
    589     முற்றின நாள்கள் என்று
        முடிப்பதே கார ணமாய்
        உற்றவன் போர்க ளாலே
        உணர்விலா அரக்கர் தம்மைச்
        செற்றமால் செய்த கோயில்
        திருஇரா மேச்சு ரத்தைப்
        பற்றிநீ பரவு நெஞ்சே
        படர்சடை ஈசன் பாலே.     4.61.2
    590     கடலிடை மலைகள் தம்மால்
        அடைத்துமால் கருமம் முற்றித்
        திடலிடைச் செய்த கோயில்
        திருஇரா மேச்சு ரத்தைத்
        தொடலிடை வைத்து நாவிற்
        சுழல்கின்றேன் தூய்மை யின்றி
        உடலிடை நின்றும் பேரா
        ஐவர்ஆட் டுண்டு நானே.     4.61.3
    591     குன்றுபோல் தோளு டைய
        குணமிலா அரக்கர் தம்மைக்
        கொன்றுபோ ராழி யம்மால்
        வேட்கையாற் செய்த கோயில்
        நன்றுபோல் நெஞ்ச மேநீ
        நன்மையை அறிதி யாயிற்
        சென்றுநீ தொழுதுய் கண்டாய்
        திருஇரா மேச்சு ரமே.     4.61.4
    592     வீரமிக் கெயிறு காட்டி
        விண்ணுற நீண்ட ரக்கன்
        கூரமிக் கவனைச் சென்று
        கொன்றுடன் கடற் படுத்துத்
        தீரமிக் கானி ருந்த
        திருஇரா மேச்சு ரத்தைக்
        கோரமிக் கார்த வத்தாற்
        கூடுவார் குறிப்பு ளாரே.     4.61.5
    593     ஆர்வலம் நம்மின் மிக்கார்
        என்றஅவ் வரக்கர் கூடிப்
        போர்வலஞ் செய்து மிக்குப்
        பொருதவர் தம்மை வீட்டித்
        தேர்வலஞ் செற்ற மால்செய்
        திருஇரா மேச்சு ரத்தைச்
        சேர்மட நெஞ்ச மேநீ
        செஞ்சடை எந்தை பாலே.     4.61.6
    594     வாக்கினால் இன்பு ரைத்து
        வாழ்கிலார் தம்மை யெல்லாம்
        போக்கினாற் புடைத்த வர்கள்
        உயிர்தனை யுண்டு மால்தான்
        தேக்குநீர் செய்த கோயில்
        திருஇரா மேச்சு ரத்தை
        நோக்கினால் வணங்கு வார்க்கு
        நோய்வினை நுணுகு மன்றே.     4.61.7
    595     பலவுநாள் தீமை செய்து
        பார்தன்மேற் குழுமி வந்து
        கொலைவிலார் கொடிய ராய
        அரக்கரைக் கொன்று வீழ்த்தச்
        சிலையினான் செய்த கோயில்
        திருஇரா மேச்சு ரத்தைத்
        தலையினால் வணங்கு வார்கள்
        தாழ்வராந் தவம தாமே.     4.618
    596     கோடிமா தவங்கள் செய்து
        குன்றினார் தம்மை யெல்லாம்
        வீடவே சக்க ரத்தால்
        எறிந்துபின் அன்பு கொண்டு
        தேடிமால் செய்த கோயில்
        திருஇரா மேச்சு ரத்தை
        நாடிவாழ் நெஞ்ச மேநீ
        நன்னெறி யாகு மன்றே.     4.61.9
    597     வன்கண்ணர் வாள ரக்கர்
        வாழ்வினை யொன்ற றியார்
        புன்கண்ண ராகி நின்று
        போர்கள்செய் தாரை மாட்டிச்
        செங்கண்மால் செய்த கோயில்
        திருஇரா மேச்சு ரத்தைத்
        தங்கணால் எய்த வல்லார்
        தாழ்வராந் தலைவன் பாலே.     4.61.10
    598     வரைகளொத் தேயு யர்ந்த
        மணிமுடி அரக்கர் கோனை
        விரையமுற் றறவொ டுக்கி
        மீண்டுமால் செய்த கோயில்
        திரைகள்முத் தால்வ ணங்குந்
        திருஇரா மேச்சு ரத்தை
        உரைகள்பத் தாலு ரைப்பார்
        உள்குவார் அன்பி னாலே.     4.61.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - இராமலிங்கேசுவரர்; தேவியார் - பருவதவர்த்தனியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.62 திருவாலவாய் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    599    வேதியா வேத கீதா
        விண்ணவர் அண்ணா என்றென்
        றோதியே மலர்கள் தூவி
        ஒடுங்கிநின் கழல்கள் காணப்
        பாதியோர் பெண்ணை வைத்தாய்
        படர்சடை மதியஞ் சூடும்
        ஆதியே ஆல வாயில்
        அப்பனே அருள்செ யாயே.     4.62.1
    600     நம்பனே நான்மு கத்தாய்
        நாதனே ஞான மூர்த்தி
        என்பொனே ஈசா என்றென்
        றேத்திநான் ஏசற் றென்றும்
        பின்பினே திரிந்து நாயேன்
        பேர்த்தினிப் பிறவா வண்ணம்
        அன்பனே ஆலவாயில் அப்பனே
        அருள் செயாயே.     4.62.2
    601     ஒருமருந் தாகி யுள்ளாய்
        உம்பரோ டுலகுக் கெல்லாம்
        பெருமருந் தாகி நின்றாய்
        பேரமு தின்சு வையாய்க்
        கருமருந் தாகி யுள்ளாய்
        ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
        அருமருந் தால வாயில்
        அப்பனே அருள்செ யாயே.     4.62.3
    602     செய்யநின் கமல பாதஞ்
        சேருமா தேவர் தேவே
        மையணி கண்டத் தானே
        மான்மறி மழுவொன் றேந்துஞ்
        சைவனே சால ஞானங்
        கற்றறி விலாத நாயேன்
        ஐயனே ஆல வாயில்
        அப்பனே அருள்செ யாயே.     4.62.4
    603     வெண்டலை கையி லேந்தி
        மிகவுமூர் பலிகொண் டென்றும்
        உண்டது மில்லை சொல்லில்
        உண்டது நஞ்சு தன்னைப்
        பண்டுனை நினைய மாட்டாப்
        பளகனேன் உளம தார
        அண்டனே ஆல வாயில்
        அப்பனே அருள்செ யாயே.     4.62.5
    604     எஞ்சலில் புகலி தென்றென்
        றேத்திநான் ஏசற் றென்றும்
        வஞ்சக மொன்று மின்றி
        மலரடி காணும் வண்ணம்
        நஞ்சினை மிடற்றில் வைத்த
        நற்பொருட் பதமே நாயேற்
        கஞ்சலென் றால வாயில்
        அப்பனே அருள்செ யாயே.     4.62.6
    605     வழுவிலா துன்னை வாழ்த்தி
        வழிபடுந் தொண்ட னேன்உன்
        செழுமலர்ப் பாதங் காணத்
        தெண்டிரை நஞ்ச முண்ட
        குழகனே கோல வில்லீ
        கூத்தனே மாத்தா யுள்ள
        அழகனே ஆல வாயில்
        அப்பனே அருள்செ யாயே.     4.62.7
    606     நறுமலர் நீருங் கொண்டு
        நாடொறு மேத்தி வாழ்த்திச்
        செறிவன சித்தம் வைத்துத்
        திருவடி சேரும் வண்ணம்
        மறிகடல் வண்ணன் பாகா
        மாமறை யங்க மாறும்
        அறிவனே ஆல வாயில்
        அப்பனே அருள்செ யாயே.     4.62.8
    607    நலந்திகழ் வாயின் நூலாற்
        சருகிலைப் பந்தர் செய்த
        சிலந்தியை அரச தாள
        அருளினாய் என்று திண்ணங்
        கலந்துடன் வந்து நின்றாள்
        கருதிநான் காண்ப தாக
        அலந்தனன் ஆல வாயில்
        அப்பனே அருள்செ யாயே.     4.62.9
    608     பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
        குரம்பையிற் புந்தி யொன்றிப்
        பிடித்துநின் றாள்க ளென்றும்
        பிதற்றிநா னிருக்க மாட்டேன்
        எடுப்பனென் றிலங்கைக் கோன்வந்
        தெடுத்தலும் இருப துதோள்
        அடர்த்தனே ஆல வாயில்
        அப்பனே அருள்செ யாயே.     4.62.10

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.63 திருவண்ணாமலை - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    609     ஓதிமா மலர்கள் தூவி
        உமையவள் பங்கா மிக்க
        சோதியே துளங்கும் எண்டோ ள்
        சுடர்மழுப் படையி னானே
        ஆதியே அமரர் கோவே
        அணியணா மலையு ளானே
        நீதியால் நின்னை யல்லால்
        நினையுமா நினைவி லேனே.     4.63.1
    610     பண்டனை வென்ற இன்சொற்
        பாவையோர் பங்க நீல
        கண்டனே கார்கொள் கொன்றைக்
        கடவுளே கமல பாதா
        அண்டனே அமரர் கோவே
        அணியணா மலையு ளானே
        தொண்டனேன் உன்னை அல்லாற்
        சொல்லுமா சொல்லி லேனே.     4.63.2
    611    உருவமும் உயிரு மாகி
        ஓதிய உலகுக் கெல்லாம்
        பெருவினை பிறப்பு வீடாய்
        நின்றவெம் பெருமான் மிக்க
        அருவிபொன் சொரியும் அண்ணா
        மலையுளாய் அண்டர் கோவே
        மருவிநின் பாத மல்லான்
        மற்றொரு மாடி லேனே.     4.63.3
    612     பைம்பொனே பவளக் குன்றே
        பரமனே பால்வெண் ணீற்றாய்
        செம்பொனே மலர்செய் பாதா
        சீர்தரு மணியே மிக்க
        அம்பொனே கொழித்து வீழும்
        அணியணா மலையு ளானே
        என்பொனே உன்னை யல்லால்
        யாதும்நான் நினைவி லேனே.     4.63.4
    613     பிறையணி முடியி னானே
        பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
        மறைவலா இறைவா வண்டார்
        கொன்றையாய் வாம தேவா
        அறைகழல் அமர ரேத்தும்
        அணியணா மலையு ளானே
        இறைவனே உன்னை யல்லா
        லியாதுநான் நினைவி லேனே.     4.63.5
    614     புரிசடை முடியின் மேலோர்
        பொருபுனற் கங்கை வைத்துக்
        கரியுரி போர்வை யாகக்
        கருதிய கால காலா
        அரிகுலம் மலிந்த அண்ணா
        மலையுளாய் அலரின் மிக்க
        வரிமிகு வண்டு பண்செய்
        பாதநான் மறப்பி லேனே.     4.63.6
    615     இரவியும் மதியும் விண்ணும்
        இருநிலம் புனலுங் காற்றும்
        உரகமார் பவனம் எட்டுந்
        திசையொளி உருவ மானாய்
        அரவுமிழ் மணிகொள் சோதி
        அணியணா மலையு ளானே
        பரவுநின் பாத மல்லாற்
        பரமநான் பற்றி லேனே.     4.63.7
    616     பார்த்தனுக் கன்று நல்கிப்
        பாசுப தத்தை ஈந்தாய்
        நீர்த்ததும் புலாவு கங்கை
        நெடுமுடி நிலாவ வைத்தாய்
        ஆர்த்துவந் தீண்டு கொண்டல்
        அணியணா மலையு ளானே
        தீர்த்தனே நின்றன் பாதத்
        திறமலாற் றிறமி லேனே.     4.63.8
    617     பாலுநெய் முதலா மிக்க
        பசுவில்ஐந் தாடு வானே
        மாலுநான் முகனுங் கூடிக்
        காண்கிலா வகையுள் நின்றாய்
        ஆலுநீர் கொண்டல் பூகம்
        அணியணா மலையு ளானே
        வாலுடை விடையாய் உன்றன்
        மலரடி மறப்பி லேனே.     4.63.9
    618     இரக்கமொன் றியாது மில்லாக்
        காலனைக் கடிந்த எம்மான்
        உரத்தினால் வரையை ஊக்க
        ஒருவிரல் நுதியி னாலே
        அரக்கனை நெரித்த அண்ணா
        மலையுளாய் அமர ரேறே
        சிரத்தினால் வணங்கி யேத்தித்
        திருவடி மறப்பி லேனே.     4.63.10

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அருணாசலேசுவரர், தேவியார் - உண்ணாமுலையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.64 திருவீழிமிழலை - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    619    பூதத்தின் படையர் பாம்பின்
        பூணினர் பூண நூலர்
        சீதத்திற் பொலிந்த திங்கட்
        கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
        கீதத்திற் பொலிந்த ஓசைக்
        கேள்வியர் வேள்வி யாளர்
        வேதத்தின் பொருளர் வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.1
    620     காலையிற் கதிர்செய் மேனி
        கங்குலிற் கறுத்த கண்டர்
        மாலையின் மதியஞ் சேர்ந்த
        மகுடத்தர் மதுவும் பாலும்
        ஆலையிற் பாகும் போல
        அண்ணித்திட் டடியார்க் கென்றும்
        வேலையின் அமுதர் வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.2
    621     வருந்தின நெருநல் இன்றாய்
        வழங்கின நாளர் ஆற்கீழ்
        இருந்துநன் பொருள்கள் நால்வர்க்
        கியம்பினர் இருவ ரோடும்
        பொருந்தினர் பிரிந்து தம்பால்
        பொய்யரா மவர்கட் கென்றும்
        விருந்தினர் திருந்து வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.3
    622     நிலையிலா வூர்மூன் றொன்ற
        நெருப்பரி காற்றம் பாகச்
        சிலையுநா ணதுவு நாகங்
        கொண்டவர் தேவர் தங்கள்
        தலையினாற் றரித்த என்பும்
        தலைமயிர் வடமும் பூண்ட
        விலையிலா வேடர் வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.4
    623     மறையிடைப் பொருளர் மொட்டின்
        மலர்வழி வாசத் தேனர்
        கறவிடைப் பாலின் நெய்யர்
        கரும்பினிற் கட்டி யாளர்
        பிறையிடைப் பாம்பு கொன்றைப்
        பிணையல்சேர் சடையுள் நீரர்
        விறகிடைத் தீயர் வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.5
    624     எண்ணகத் தில்லை அல்லர்
        உளரல்லர் இமவான் பெற்ற
        பெண்ணகத் தரையர் காற்றிற்
        பெருவலி யிருவ ராகி
        மண்ணகத் தைவர் நீரில்
        நால்வர்தீ யதனில் மூவர்
        விண்ணகத் தொருவர் வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.6
    625     சந்தணி கொங்கை யாளோர்
        பங்கினர் சாம வேதர்
        எந்தையும் எந்தை தந்தை
        தந்தையு மாய ஈசர்
        அந்தியோ டுதயம் அந்த
        ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
        வெந்தழ லுருவர் வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.7
    626     நீற்றினை நிறையப் பூசி
        நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
        ஏற்றுழி ஒருநா ளொன்று
        குறையக்கண் நிறைய விட்ட
        ஆற்றலுக் காழி நல்கி
        யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
        வீற்றிருந் தளிப்பர் வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.8
    627     சித்திசெய் பவர்கட் கெல்லாஞ்
        சேர்விடஞ் சென்று கூடப்
        பத்திசெய் பவர்கள் பாவம்
        பறைப்பவர் இறப்பி லாளர்
        முத்திசை பவள மேனி
        முதிரொளி நீல கண்டர்
        வித்தினில் முளையர் வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.9
    628     தருக்கின அரக்கன் தேரூர்
        சாரதி தடைநி லாது
        பொருப்பினை யெடுத்த தோளும்
        பொன்முடி பத்தும் புண்ணாய்
        நெரிப்புண்டங் கலறி மீண்டு
        நினைந்தடி பரவத் தம்வாள்
        விருப்பொடுங் கொடுப்பர் வீழி
        மிழலையுள் விகிர்த னாரே.     4.64.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீழியழகீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.65 திருச்சாய்க்காடு - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    629     தோடுலா மலர்கள் தூவித்
        தொழுதெழு மார்க்கண் டேயன்
        வீடுநாள் அணுகிற் றென்று
        மெய்கொள்வான் வந்த காலன்
        பாடுதான் செல்லு மஞ்சிப்
        பாதமே சரண மென்னச்
        சாடினார் காலன் மாளச்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.1
    630     வடங்கெழு மலைமத் தாக
        வானவர் அசுர ரோடு
        கடைந்திட எழுந்த நஞ்சங்
        கண்டுபல் தேவ ரஞ்சி
        அடைந்துநும் சரண மென்ன
        அருள்பெரி துடைய ராகித்
        தடங்கடல் நஞ்சம் உண்டார்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.2
    631     அரணிலா வெளிய நாவல்
        அருள்நிழ லாக ஈசன்
        வரணிய லாகித் தன்வாய்
        நூலினாற் பந்தர் செய்ய
        முரணிலாச் சிலந்தி தன்னை
        முடியுடை மன்ன னாக்கித்
        தரணிதான் ஆள வைத்தார்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.3
    632     அரும்பெருஞ் சிலைக்கை வேட
        னாய்விறற் பார்த்தற் கன்று
        உரம்பெரி துடைமை காட்டி
        ஒள்ளமர் செய்து மீண்டே
        வரம்பெரி துடைய னாக்கி
        வாளமர் முகத்தின் மன்னுஞ்
        சரம்பொலி தூணி ஈந்தார்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.4
    633     இந்திரன் பிரமன் அங்கி
        எண்வகை வசுக்க ளோடு
        மந்திர மறைய தோதி
        வானவர் வணங்கி வாழ்த்தத்
        தந்திர மறியாத் தக்கன்
        வேள்வியைத் தகர்த்த ஞான்று
        சந்திரற் கருள்செய் தாருஞ்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.5
    634     ஆமலி பாலும் நெய்யும்
        ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
        பூமலி கொன்றை சூட்டப்
        பொறாததன் தாதை தாளைக்
        கூர்மழு வொன்றால் ஓச்சக்
        குளிர்சடைக் கொன்றை மாலைத்
        தாமநற் சண்டிக் கீந்தார்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.6
    635     மையறு மனத்த னாய
        பகீரதன் வரங்கள் வேண்ட
        ஐயமில் லமர ரேத்த
        ஆயிர முகம தாகி
        வையகம் நெளியப் பாய்வான்
        வந்திழி கங்கை யென்னுந்
        தையலைச் சடையில் ஏற்றார்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.7
    636     குவப்பெருந் தடக்கை வேடன்
        கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
        துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்
        தூயவாய்க் கலசம் ஆட்ட
        உவப்பெருங் குருதி சோர
        ஒருகணை யிடந்தங் கப்பத்
        தவப்பெருந் தேவு செய்தார்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.8
    637     நக்குலா மலர்பன் னூறு
        கொண்டுநன் ஞானத் தோடு
        மிக்கபூ சனைகள் செய்வான்
        மென்மல ரொன்று காணா
        தொக்குமென் மலர்க்கண் ணென்றங்
        கொருகணை யிடந்து மப்பச்
        சக்கரங் கொடுப்பர் போலுஞ்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.9
    638     புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து
        மாயகொண் டரக்க னோடிச்
        சிவன்திரு மலையைப் பேர்க்கத்
        திருமலர்க் குழலி யஞ்ச
        வியன்பெற எய்தி வீழ
        விரல்சிறி தூன்றி மீண்டே
        சயம்பெற நாம மீந்தார்
        சாய்க்காடு மேவி னாரே.     4.65.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சாயவனேசுவரர்,
    தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.66 திருநாகேச்சரம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    639    கச்சைசேர் அரவர் போலுங்
        கறையணி மிடற்றர் போலும்
        பிச்சைகொண் டுண்பர் போலும்
        பேரரு ளாலர் போலும்
        இச்சையால் மலர்கள் தூவி
        இரவொடு பகலுந் தம்மை
        நச்சுவார்க் கினியர் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.1
    640     வேடுறு வேட ராகி
        விசயனோ டெய்தார் போலுங்
        காடுறு பதியர் போலுங்
        கடிபுனற் கங்கை நங்கை
        சேடெறி சடையர் போலுந்
        தீவினை தீர்க்க வல்ல
        நாடறி புகழர் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.2
    641     கற்றுணை வில்ல தாகக்
        கடியரண் செற்றார் போலும்
        பொற்றுணைப் பாதர் போலும்
        புலியத ளுடையார் போலுஞ்
        சொற்றுணை மாலை கொண்டு
        தொழுதெழு வார்கட் கெல்லாம்
        நற்றுணை யாவர் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.3
    642     கொம்பனாள் பாகர் போலுங்
        கொடியுடை விடையர் போலுஞ்
        செம்பொனா ருருவர் போலுந்
        திகழ்திரு நீற்றர் போலும்
        எம்பிரான் எம்மை யாளும்
        இறைவனே என்று தம்மை
        நம்புவார்க் கன்பர் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.4
    643     கடகரி யுரியர் போலுங்
        கனல்மழு வாளர் போலும்
        படவர வரையர் போலும்
        பாரிடம் பலவுங் கூடிக்
        குடமுடை முழவம் ஆர்ப்பக்
        கூளிகள் பாட நாளும்
        நடநவில் அடிகள் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.5
    644     பிறையுறு சடையர் போலும்
        பெண்ணொரு பாகர் போலும்
        மறையுறு மொழியர் போலும்
        மால்மறை யவன்ற னோடு
        முறைமுறை அமரர் கூடி
        முடிகளால் வணங்க நின்ற
        நறவமர் கழலர் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.6
    645     வஞ்சகர்க் கரியர் போலும்
        மருவினோர்க் கெளியர் போலுங்
        குஞ்சரத் துரியர் போலுங்
        கூற்றினைக் குமைப்பர் போலும்
        விஞ்சையர் இரிய அன்று
        வேலைவாய் வந்தெ ழுந்த
        நஞ்சணி மிடற்றர் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.7
    646     போகமார் மோடி கொங்கை
        புணர்தரு புனிதர் போலும்
        வேகமார் விடையர் போலும்
        வெண்பொடி யாடு மேனிப்
        பாகமா லுடையர் போலும்
        பருப்பத வில்லர் போலும்
        நாகநா ணுடையர் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.8
    647     கொக்கரை தாளம் வீணை
        பாணிசெய் குழகர் போலும்
        அக்கரை யணிவர் போலும்
        ஐந்தலை யரவர் போலும்
        வக்கரை யமர்வர் போலும்
        மாதரை மையல் செய்யும்
        நக்கரை யுருவர் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.9
    648    வின்மையாற் புரங்கள் மூன்றும்
        வெந்தழல் விரித்தார் போலும்
        தன்மையால் அமரர் தங்கள்
        தலைவர்க்குந் தலைவர் போலும்
        வன்மையான் மலையெ டுத்தான்
        வலியினைத் தொலைவித் தாங்கே
        நன்மையால் அளிப்பர் போலும்
        நாகஈச் சரவ னாரே.     4.66.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர்,
    தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    649     வரைகிலேன் புலன்க ளைந்தும்
        வரைகிலாப் பிறவி மாயப்
        புரையிலே அடங்கி நின்று
        புறப்படும் வழியுங் காணேன்
        அரையிலே மிளிரு நாகத்
        தண்ணலே அஞ்ச லென்னாய்
        திரையுலாம் பழன வேலித்
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.1
    650     தொண்டனேன் பிறந்து வாளா
        தொல்வினைக் குழியில் வீழ்ந்து
        பிண்டமே சுமந்து நைந்து
        பேர்வதோர் வழியுங் காணேன்
        அண்டனே அண்ட வாணா
        அறிவனே அஞ்ச லென்னாய்
        தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.2
    651     கால்கொடுத் தெலும்பு மூட்டிக்
        கதிர்நரம் பாக்கை யார்த்துத்
        தோலுடுத் துதிர மட்டித்
        தொகுமயிர் மேய்ந்த கூரை
        ஓலெடுத் துழைஞர் கூடி
        ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
        சேலுடைப் பழனஞ் சூழ்ந்த
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.3
    652     கூட்டமாய் ஐவர் வந்து
        கொடுந்தொழிற் குணத்த ராகி
        ஆட்டுவார்க் காற்ற கில்லேன்
        ஆடர வசைத்த கோவே
        காட்டிடை யரங்க மாக
        ஆடிய கடவு ளேயோ
        சேட்டிரும் பழன வேலித்
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.4
    653     பொக்கமாய் நின்ற பொல்லாப்
        புழுமிடை முடைகொள் ஆக்கை
        தொக்குநின் றைவர் தொண்ணூற்
        றறுவருந் துயக்க மெய்த
        மிக்குநின் றிவர்கள் செய்யும்
        வேதனைக் கலந்து போனேன்
        செக்கரே திகழும் மேனித்
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.5
    654    ஊனுலா முடைகொள் ஆக்கை
        உடைகல மாவ தென்றும்
        மானுலா மழைக்க ணார்தம்
        வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
        நானெலா மினைய கால
        நண்ணிலேன் எண்ண மில்லேன்
        தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.6
    655     சாணிரு மடங்கு நீண்ட
        சழக்குடைப் பதிக்கு நாதர்
        வாணிகர் ஐவர் தொண்ணூற்
        றறுவரும் மயக்கஞ் செய்து
        பேணிய பதியின் நின்று
        பெயரும்போ தறிய மாட்டேன்
        சேணுயர் மாட நீடு
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.7
    656     பொய்மறித் தியற்றி வைத்துப்
        புலால்கமழ் பண்டம் பெய்து
        பைமறித் தியற்றி யன்ன
        பாங்கிலாக் குரம்பை நின்று
        கைமறித் தனைய வாவி
        கழியும்போ தறிய மாட்டேன்
        சென்னெறிச் செலவு காணேன்
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.8
    657     பாலனாய்க் கழிந்த நாளும்
        பனிமலர்க் கோதை மார்தம்
        மேலனாய்க் கழிந்த நாளும்
        மெலிவொடு மூப்பு வந்து
        கோலனாய்க் கழிந்த நாளுங்
        குறிக்கோளி லாது கெட்டேன்
        சேலுலாம் பழன வேலித்
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.9
    658     விரைதரு கருமென் கூந்தல்
        விளங்கிழை வேலொண் கண்ணாள்
        வெருவர இலங்கைக் கோமான்
        விலங்கலை எடுத்த ஞான்று
        பருவரை யனைய தோளும்
        முடிகளும் பாரி வீழத்
        திருவிர லூன்றி னானே
        திருக்கொண்டீச் சரத்து ளானே.     4.67.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.68 திருவாலங்காடு - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    659     வெள்ளநீர்ச் சடையர் போலும்
        விரும்புவார்க் கெளியர் போலும்
        உள்ளுளே யுருகி நின்றங்
        குகப்பவர்க் கன்பர் போலுங்
        கள்ளமே வினைக ளெல்லாங்
        கரிசறுத் திடுவர் போலும்
        அள்ளலம் பழனை மேய
        ஆலங்காட் டடிக ளாரே.     4.68.1
    660     செந்தழ லுருவர் போலுஞ்
        சினவிடை யுடையர் போலும்
        வெந்தவெண் ணீறு கொண்டு
        மெய்க்கணிந் திடுவர் போலும்
        மந்தமாம் பொழிற் பழனை
        மல்கிய வள்ளல் போலும்
        அந்தமில் அடிகள் போலும்
        ஆலங்காட் டடிக ளாரே.     4.68.2
    661     கண்ணினாற் காம வேளைக்
        கனலெழ விழிப்பர் போலும்
        எண்ணிலார் புரங்கள் மூன்று
        மெரியுணச் சிரிப்பர் போலும்
        பண்ணினார் முழவ மோவாப்
        பைம்பொழிற் பழனை மேய
        அண்ணலார் எம்மை யாளும்
        ஆலங்காட் டடிக ளாரே.     4.68.3
    662     காறிடு விடத்தை யுண்ட
        கண்டரெண் தோளர் போலுந்
        தூறிடு சுடலை தன்னிற்
        சுண்ணவெண் ணீற்றர் போலுங்
        கூறிடு முருவர் போலுங்
        குளிர்பொழிற் பழனை மேய
        ஆறிடு சடையர் போலும்
        ஆலங்காட் டடிக ளாரே.     4.68.4
    663     பார்த்தனோ டமர் பொருது
        பத்திமை காண்பர் போலுங்
        கூர்த்தவா யம்பு கோத்துக்
        குணங்களை அறிவர் போலும்
        பேர்த்துமோ ராவ நாழி
        அம்போடுங் கொடுப்பர் போலுந்
        தீர்த்தமாம் பழனை மேய
        திருவாலங் காட னாரே.     4.68.5
    664    வீட்டினார் சுடுவெண் ணீறு
        மெய்க்கணிந் திடுவர் போலுங்
        காட்டில்நின் றாடல் பேணுங்
        கருத்தினை யுடையர் போலும்
        பாட்டினார் முழவ மோவாப்
        பைம்பொழிற் பழனை மேயார்
        ஆட்டினார் அரவந் தன்னை
        ஆலங்காட் டடிக ளாரே.     4.68.6
    665     தாளுடைச் செங்க மலத்
        தடங்கொள்சே வடியர் போலும்
        நாளுடைக் காலன் வீழ
        உதைசெய்த நம்பர் போலுங்
        கோளுடைப் பிறவி தீர்ப்பார்
        குளிர்பொழிற் பழனை மேய
        ஆளுடை யண்ணல் போலும்
        ஆலங்காட் டடிக ளாரே.     4.68.7
    666     கூடினார் உமைதன் னோடே
        குறிப்புடை வேடங் கொண்டு
        சூடினார் கங்கை யாளைச்
        சுவறிடு சடையர் போலும்
        பாடினார் சாம வேதம்
        பைம்பொழிற் பழனை மேயார்
        ஆடினார் காளி காண
        ஆலங்காட் டடிக ளாரே.     4.68.8
    667     வெற்றரைச் சமண ரோடு
        விலையுடைக் கூறை போர்க்கும்
        ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்
        குணங்களை உகப்பர் போலும்
        பெற்றமே உகந்தங் கேறும்
        பெருமையை யுடையர் போலும்
        அற்றங்கள் அறிவர் போலும்
        ஆலங்காட் டடிக ளாரே.     4.68.9
    668     மத்தனாய் மலையெ டுத்த
        அரக்கனைக் கரத்தோ டொல்க
        ஒத்தினார் திருவி ரலால்
        ஊன்றியிட் டருள்வர் போலும்
        பத்தர்தம் பாவந் தீர்க்கும்
        பைம்பொழிற் பழனை மேய
        அத்தனார் நம்மை யாள்வார்
        ஆலங்காட் டடிக ளாரே.     4.68.10

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,
    தேவியார் - வண்டார்குழலியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    669    செத்தையேன் சிதம்ப நாயேன்
        செடியனேன் அழுக்குப் பாயும்
        பொத்தையே போற்றி நாளும்
        புகலிடம் அறிய மாட்டேன்
        எத்தைநான் பற்றி நிற்கேன்
        இருளற நோக்க மாட்டாக்
        கொத்தையேன் செய்வ தென்னே
        கோவல்வீ ரட்ட னீரே.     4.69.1
    670     தலைசுமந் திருகை நாற்றித்
        தரணிக்கே பொறைய தாகி
        நிலையிலா நெஞ்சந் தன்னுள்
        நித்தலும் ஐவர் வேண்டும்
        விலைகொடுத் தறுக்க மாட்டேன்
        வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
        குலைகொள்மாங் கனிகள் சிந்தும்
        கோவல்வீ ரட்ட னீரே.     4.69.2
    671    வழித்தலைப் படவு மாட்டேன்
        வைகலுந் தூய்மை செய்து
        பழித்திலேன் பாச மற்றுப்
        பரமநான் பரவ மாட்டேன்
        இழித்திலேன் பிறவி தன்னை
        என்னினைந் திருக்க மாட்டேன்
        கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்
        கோவல்வீ ரட்ட னீரே.     4.69.3
    672    சாற்றுவர் ஐவர் வந்து
        சந்தித்த குடிமை வேண்டிக்
        காற்றுவர் கனலப் பேசிக்
        கண்செவி மூக்கு வாயுள்
        ஆற்றுவர் அலந்து போனேன்
        ஆதியை அறிவொன் றின்றிக்
        கூற்றுவர் வாயிற் பட்டேன்
        கோவல்வீ ரட்ட னீரே.     4.69.4
    673     தடுத்திலேன் ஐவர் தம்மைத்
        தத்துவத் துயர்வு நீர்மைப்
        படுத்திலேன் பரப்பு நோக்கிப்
        பன்மலர்ப் பாத முற்ற
        அடுத்திலேன் சிந்தை யார
        ஆர்வலித் தன்பு திண்ணங்
        கொடுத்திலேன் கொடிய வாநான்
        கோவல்வீ ரட்ட னீரே.     4.69.5
    674     மாச்செய்த குரம்பை தன்னை
        மண்ணிடை மயக்க மெய்து
        நாச்செய்து நாலு மைந்தும்
        நல்லன வாய்தல் வைத்துக்
        காச்செய்த காயந் தன்னுள்
        நித்தலும் ஐவர் வந்து
        கோச்செய்து குமைக்க வாற்றேன்
        கோவல்வீ ரட்ட னீரே.     4.69.6
    675     படைகள்போல் வினைகள் வந்து
        பற்றியென் பக்கல் நின்றும்
        விடகிலா வாத லாலே
        விகிர்தனை விரும்பி யேத்தும்
        இடையிலேன் என்செய் கேன்நான்
        இரப்பவர் தங்கட் கென்றுங்
        கொடையிலேன் கொள்வ தேநான்
        கோவல்வீ ரட்ட னீரே.     4.69.7
    676     பிச்சிலேன் பிறவி தன்னைப்
        பேதையேன் பிணக்க மென்னுந்
        துச்சுளே அழுந்தி வீழ்ந்து
        துயரமே இடும்பை தன்னுள்
        அச்சனாய் ஆதி மூர்த்திக்
        கன்பனாய் வாழ மாட்டாக்
        கொச்சையேன் செய்வ தென்னே
        கோவல்வீ ரட்ட னீரே.     4.69.8
    677     நிணத்திடை யாக்கை பேணி
        நியமஞ்செய் திருக்க மாட்டேன்
        மணத்திடை ஆட்டம் பேசி
        மக்களே சுற்ற மென்னுங்
        கணத்திடை ஆட்டப் பட்டுக்
        காதலால் உன்னைப் பேணுங்
        குணத்திடை வாழ மாட்டேன்
        கோவல்வீ ரட்ட னீரே.     4.69.9
    678     விரிகடல் இலங்கைக் கோனை
        வியன்கயி லாயத் தின்கீழ்
        இருபது தோளும் பத்துச்
        சிரங்களும் நெறிய வூன்றிப்
        பரவிய பாடல் கேட்டுப்
        படைகொடுத் தருளிச் செய்தார்
        குரவொடு கோங்கு சூழ்ந்த
        கோவல்வீ ரட்ட னாரே.     4.69.10

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டேசநாதர், தேவியார் - சிவாநந்தவல்லி.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.70 திருநனிபள்ளி - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    679    முற்றுணை யாயி னானை
        மூவர்க்கு முதல்வன் றன்னைச்
        சொற்றுணை ஆயி னானைச்
        சோதியை ஆத ரித்து
        உற்றுணர்ந் துருகி யூறி
        உள்கசி வுடைய வர்க்கு
        நற்றுணை யாவர் போலும்
        நனிபள்ளி அடிக ளாரே.     4.70.1
    680     புலர்ந்தகால் பூவும் நீருங்
        கொண்டடி போற்ற மாட்டா
        வலஞ்செய்து வாயின் நூலால்
        வட்டணைப் பந்தர் செய்த
        சிலந்தியை அரைய னாக்கிச்
        சீர்மைகள் அருள வல்லார்
        நலந்திகழ் சோலை சூழ்ந்த
        நனிபள்ளி அடிக ளாரே.     4.70.2
    681     எண்பதும் பத்தும் ஆறு
        மென்னுளே இருந்து மன்னிக்
        கண்பழக் கொன்று மின்றிக்
        கலக்கநான் அலக்க ழிந்தேன்
        செண்பகந் திகழும் புன்னை
        செழுந்திரட் குரவம் வேங்கை
        நண்புசெய் சோலை சூழ்ந்த
        நனிபள்ளி அடிக ளாரே.     4.70.3
    682     பண்ணினார் பாட லாகிப்
        பழத்தினில் இரத மாகிக்
        கண்ணினார் பார்வை யாகிக்
        கருத்தொடு கற்ப மாகி
        எண்ணினார் எண்ண மாகி
        ஏழுல கனைத்து மாகி
        நண்ணினார் வினைகள் தீர்ப்பார்
        நனிபள்ளி அடிக ளாரே.     4.70.4
    683     துஞ்சிருள் காலை மாலை
        தொடர்ச்சியை மறந் திராதே
        அஞ்செழுத் தோதின் நாளும்
        அரனடிக் கன்ப தாகும்
        வஞ்சனைப் பால்சோ றாக்கி
        வழக்கிலா அமணர் தந்த
        நஞ்சமு தாக்கு வித்தார்
        நனிபள்ளி அடிக ளாரே.     4.70.5
    684     செம்மலர்க் கமலத் தோனுந்
        திருமுடி காண மாட்டான்
        அம்மலர்ப் பாதங் காண்பான்
        ஆழியான் அகழ்ந்துங் காணான்
        நின்மலன் என்றங் கேத்தும்
        நினைப்பினை அருளி நாளும்
        நம்மலம் அறுப்பர் போலும்
        நனிபள்ளி அடிக ளாரே.     4.70.6
    685     அரவத்தால் வரையைச் சுற்றி
        அமரரோ டசுரர் கூடி
        அரவித்துக் கடையத் தோன்றும்
        ஆலநஞ் சமுதா வுண்டார்
        விரவித்தம் அடிய ராகி
        வீடிலாத் தொண்டர் தம்மை
        நரகத்தில் வீழ வொட்டார்
        நனிபள்ளி அடிக ளாரே.     4.70.7
    686     மண்ணுளே திரியும் போது
        வருவன பலவுங் குற்றம்
        புண்ணுளே புரைபு ரையன்
        புழுப்பொதி பொள்ள லாக்கை
        ----- ----- ----- -----
        இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின்
        பின்னிரண்டடிகளும் 9-ம்செய்யுளும்
        மறைந்து போயின.     4.70.8-9
    687     பத்துமோர் இரட்டி தோளான்
        பாரித்து மலையெ டுக்கப்
        பத்துமோர் இரட்டி தோள்கள்
        படருடம் படர வூன்றிப்
        பத்துவாய் கீதம் பாடப்
        பரிந்தவற் கருள்கொ டுத்தார்
        பத்தர்தாம் பரவி யேத்தும்
        நனிபள்ளிப் பரம னாரே.     4.70.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.71 திருநாகைக்காரோணம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    688    மனைவிதாய் தந்தை மக்கள்
        மற்றுள சுற்ற மென்னும்
        வினையுளே விழுந்த ழுந்தி
        வேதனைக் கிடமா காதே
        கனையுமா கடல்சூழ் நாகை
        மன்னுகா ரோணத் தானை
        நினையுமா வல்லீ ராகில்
        உய்யலாம் நெஞ்சி னீரே.     4.71..1
    689     வையனை வைய முண்ட
        மாலங்கந் தோண்மேற் கொண்ட
        செய்யனைச் செய்ய போதிற்
        திசைமுகன் சிரமொன் றேந்துங்
        கையனைக் கடல்சூழ் நாகைக்
        காரோணங் கோயில் கொண்ட
        ஐயனை நினைந்த நெஞ்சே
        அம்மநாம் உய்ந்த வாறே.     4.71..2
    690     நிருத்தனை நிமலன் றன்னை
        நீணிலம் விண்ணின் மிக்க
        விருத்தனை வேத வித்தை
        விளைபொருள் மூல மான
        கருத்தனைக் கடல்சூழ் நாகைக்
        காரோணங் கோயில் கொண்ட
        ஒருத்தனை உணர்த லால்நாம்
        உய்ந்தவா நெஞ்சி னீரே.     4.71.3
    691     மண்டனை இரந்து கொண்ட
        மாயனோ டசுரர் வானோர்
        தெண்டிரை கடைய வந்த
        தீவிடந் தன்னை யுண்ட
        கண்டனைக் கடல்சூழ் நாகைக்
        காரோணங் கோயில் கொண்ட
        அண்டனை நினைந்த நெஞ்சே
        அம்மநாம் உய்ந்த வாறே.     4.71.4
    692     நிறைபுனல் அணிந்த சென்னி
        நீணிலா அரவஞ் சூடி
        மறையொலி பாடி யாடல்
        மயானத்து மகிழ்ந்த மைந்தன்
        கறைமலி கடல்சூழ் நாகைக்
        காரோணங் கோயில் கொண்ட
        இறைவனை நாளு மேத்த
        இடும்பைபோய் இன்ப மாமே.     4.71.5
    693     வெம்பனைக் கருங்கை யானை
        வெருவவன் றுரிவை போர்த்த
        கம்பனைக் காலற் காய்ந்த
        காலனை ஞால மேத்தும்
        உம்பனை உம்பர் கோனை
        நாகைக்கா ரோண மேய
        செம்பொனை நினைந்த நெஞ்சே
        திண்ணம்நாம் உய்ந்த வாறே.     4.71.6
    694     வெங்கடுங் கானத் தேழை
        தன்னொடும் வேட னாய்ச்சென்
        றங்கமர் மலைந்து பார்த்தற்
        கடுசரம் அருளி னானை
        மங்கைமார் ஆட லோவா
        மன்னுகா ரோணத் தானைக்
        கங்குலும் பகலுங் காணப்
        பெற்றுநாங் களித்த வாறே.     4.71.7
    695     தெற்றினர் புரங்கள் மூன்றுந்
        தீயினில் விழவோ ரம்பால்
        செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
        சிந்தையுட் சேர்வி லாதார்
        கற்றவர் பயிலும் நாகைக்
        காரோணங் கருதி யேத்தப்
        பெற்றவர் பிறந்தார் மற்றுப்
        பிறந்தவர் பிறந்தி லாரே.     4.71.8
        இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     4.71.9
    696     கருமலி கடல்சூழ் நாகைக்
        காரோணர் கமல பாதத்
        தொருவிரல் நுதிக்கு நில்லா
        தொண்டிறல் அரக்க னுக்கான்
        இருதிற மங்கை மாரோ
        டெம்பிரான் செம்பொ னாகந்
        திருவடி தரித்து நிற்கத்
        திண்ணம்நாம் உய்ந்த வாறே.     4.71.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்,
    தேவியார் - நீலாயதாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.72 திருவின்னம்பர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    697    விண்ணவர் மகுட கோடி
        மிடைந்தசே வடியர் போலும்
        பெண்ணொரு பாகர் போலும்
        பேடலி யாணர் போலும்
        வண்ணமால் அயனுங் காணா
        மால்வரை எரியர் போலும்
        எண்ணுரு வநேகர் போலும்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.1
    698     பன்னிய மறையர் போலும்
        பாம்பரை யுடையர் போலுந்
        துன்னிய சடையர் போலுந்
        தூமதி மத்தர் போலும்
        மன்னிய மழுவர் போலும்
        மாதிடம் மகிழ்வர் போலும்
        என்னையும் உடையர் போலும்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.2
    699    மறியொரு கையர் போலும்
        மாதுமை யுடையர் போலும்
        பறிதலைப் பிறவி நீக்கிப்
        பணிகொள வல்லர் போலுஞ்
        செறிவுடை அங்க மாலை
        சேர்திரு வுருவர் போலும்
        எறிபுனற் சடையர் போலும்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.3
    700    விடமலி கண்டர் போலும்
        வேள்வியை அழிப்பர் போலுங்
        கடவுநல் விடையர் போலுங்
        காலனைக் காய்வர் போலும்
        படமலி அரவர் போலும்
        பாய்புலித் தோலர் போலும்
        இடர்களைந் தருள்வர் போலும்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.4
    701    அளிமலர்க் கொன்றை துன்றும்
        அவிர்சடை யுடையர் போலுங்
        களிமயிற் சாய லோடுங்
        காமனை விழிப்பர் போலும்
        வெளிவளர் உருவர் போலும்
        வெண்பொடி யணிவர் போலும்
        எளியவர் அடியர்க் கென்றும்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.5
    702    கணையமர் சிலையர் போலுங்
        கரியுரி உடையர் போலுந்
        துணையமர் பெண்ணர் போலுந்
        தூமணிக் குன்றர் போலும்
        அணையுடை அடியர் கூடி
        அன்பொடு மலர்கள் தூவும்
        இணையடி உடையர் போலும்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.6
    703    பொருப்பமர் புயத்தர் போலும்
        புனலணி சடையர் போலும்
        மருப்பிள வாமை தாங்கு
        மார்பில்வெண் ணூலர் போலும்
        உருத்திர மூர்த்தி போலும்
        உணர்விலார் புரங்கள் மூன்றும்
        எரித்திடு சிலையர் போலும்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.7
    704    காடிடம் உடையர் போலுங்
        கடிகுரல் விளியர் போலும்
        வேடுரு வுடையர் போலும்
        வெண்மதிக் கொழுந்தர் போலுங்
        கோடலர் வன்னி தும்பை
        கொக்கிற கலர்ந்த கொன்றை
        ஏடமர் சடையர் போலும்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.8
    705    காறிடு விடத்தை யுண்ட
        கண்டரெண் டோ ளர் போலும்
        நீறுடை யுருவர் போலும்
        நினைப்பினை அரியர் போலும்
        பாறுடைத் தலைகை ஏந்திப்
        பலிதிரிந் துண்பர் போலும்
        ஏறுடைக் கொடியர் போலும்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.9
    706    ஆர்த்தெழு மிலங்கைக் கோனை
        அருவரை அடர்ப்பர் போலும்
        பார்த்தனோ டமர் பொருது
        படைகொடுத் தருள்வர் போலுந்
        தீர்த்தமாங் கங்கை தன்னைத்
        திருச்சடை வைப்பர் போலும்
        ஏத்தஏ ழுலகும் வைத்தார்
        இன்னம்பர் ஈச னாரே.     4.72.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்,
    தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.73 திருச்சேறை - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    707    பெருந்திரு இமவான் பெற்ற
        பெண்கொடி பிரிந்த பின்னை
        வருந்துவான் தவங்கள் செய்ய
        மாமணம் புணர்ந்து மன்னும்
        அருந்திரு மேனி தன்பால்
        அங்கொரு பாக மாகத்
        திருந்திட வைத்தார் சேறைச்
        செந்நெறிச் செல்வ னாரே.     4.73.1
    708    ஓர்த்துள வாறு நோக்கி
        உண்மையை உணராக் குண்டர்
        வார்த்தையை மெய்யென் றெண்ணி
        மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
        பேர்த்தெனை ஆளாக் கொண்டு
        பிறவிவான் பிணிக ளெல்லாந்
        தீர்த்தருள் செய்தார் சேறைச்
        செந்நெறிச் செல்வ னாரே.     4.73.2
    709    ஒன்றிய தவத்து மன்னி
        உடையனாய் உலப்பில் காலம்
        நின்றுதங் கழல்க ளேத்தும்
        நீள்சிலை விசய னுக்கு
        வென்றிகொள் வேட னாகி
        விரும்பிவெங் கான கத்துச்
        சென்றருள் செய்தார் சேறைச்
        செந்நெறிச் செல்வ னாரே.     4.73.3
    710    அஞ்சையும் அடக்கி ஆற்ற
        லுடையனாய் அநேக காலம்
        வஞ்சமில் தவத்துள் நின்று
        மன்னிய பகீர தற்கு
        வெஞ்சின முகங்க ளாகி
        விசையொடு பாயுங் கங்கைச்
        செஞ்சடை யேற்றார் சேறைச்
        செந்நெறிச் செல்வ னாரே.     4.73.4
    711    நிறைந்தமா மணலைக் கூப்பி
        நேசமோ டாவின் பாலைக்
        கறந்துகொண் டாட்டக் கண்டு
        கறுத்ததன் தாதை தாளை
        எறிந்தமா ணிக்கப் போதே
        எழில்கொள்சண் டீசன் என்னச்
        சிறந்தபே றளித்தார் சேறைச்
        செந்நெறிச் செல்வ னாரே.     4.73.5
    712    விரித்தபல் கதிர்கொள் சூலம்
        வெடிபடு தமரு கங்கை
        தரித்ததோர் கோல காலப்
        பயிரவ னாகி வேழம்
        உரித்துமை யஞ்சக் கண்டு
        ஒண்டிரு மணிவாய் விள்ளச்
        சிரித்தருள் செய்தார் சேறைச்
        செந்நெறிச் செல்வ னாரே.     4.73.6
    713    சுற்றுமுன் இமையோர் நின்று
        தொழுதுதூ மலர்கள் தூவி
        மற்றெமை உயக்கொள் என்ன
        மன்னுவான் புரங்கள் மூன்றும்
        உற்றொரு நொடியின் முன்னம்
        ஒள்ளழல் வாயின் வீழச்
        செற்றருள் செய்தார் சேறைச்
        செந்நெறிச் செல்வ னாரே.     4.73.7
    714    முந்தியிவ் வுலக மெல்லாம்
        படைத்தவன் மாலி னோடும்
        எந்தனி நாத னேயென்
        றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
        அந்தமில் சோதி தன்னை
        அடிமுடி யறியா வண்ணஞ்
        செந்தழ லானார் சேறைச்
        செந்நெறிச் செல்வ னாரே.     4.73.8
        இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     4.73.9
    715    ஒருவரும் நிக ரிலாத
        ஒண்டிறல் அரக்கன் ஓடிப்
        பெருவரை யெடுத்த திண்டோ ள்
        பிறங்கிய முடிகள் இற்று
        மருவியெம் பெருமா னென்ன
        மலரடி மெள்ள வாங்கித்
        திருவருள் செய்தார் சேறைச்
        செந்நெறிச் செல்வ னாரே.     4.73.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சென்னெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.74 நெஞ்சம்ஈசனைநினைந்த - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    716    முத்தினை மணியைப் பொன்னை
        முழுமுதற் பவள மேய்க்குங்
        கொத்தினை வயிர மாலைக்
        கொழுந்தினை அமரர் சூடும்
        வித்தினை வேத வேள்விக்
        கேள்வியை விளங்க நின்ற
        அத்தனை நினைந்த நெஞ்சம்
        அழகிதா நினைந்த வாறே.     4.74.1
    717    முன்பனை யுலகுக் கெல்லாம்
        மூர்த்தியை முனிக ளேத்தும்
        இன்பனை இலங்கு சோதி
        இறைவனை அரிவை யஞ்ச
        வன்பனைத் தடக்கை வேள்விக்
        களிற்றினை யுரித்த எங்கள்
        அன்பனை நினைந்த நெஞ்சம்
        அழகிதா நினைந்த வாறே.     4.74.2
    718    கரும்பினு மினியான் றன்னைக்
        காய்கதிர்ச் சோதி யானை
        இருங்கட லமுதந் தன்னை
        இறப்பொடு பிறப் பிலானைப்
        பெரும்பொருட் கிளவி யானைப்
        பெருந்தவ முனிவ ரேத்தும்
        அரும்பொனை நினைந்த நெஞ்சம்
        அழகிதா நினைந்த வாறே.     4.74.3
    719    செருத்தனை யருத்தி செய்து
        செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
        கருத்தனைக் கனக மேனிக்
        கடவுளைக் கருதும் வானோர்க்
        கொருத்தனை யொருத்தி பாகம்
        பொருத்தியும் அருத்தி தீரா
        நிருத்தனை நினைந்த நெஞ்சம்
        நேர்பட நினைந்த வாறே.     4.74.4
    720    கூற்றினை யுதைத்த பாதக்
        குழகனை மழலை வெள்ளே
        றேற்றனை இமையோ ரேத்த
        இருஞ்சடைக் கற்றை தன்மேல்
        ஆற்றனை அடிய ரேத்தும்
        அமுதனை அமுத யோக
        நீற்றனை நினைந்த நெஞ்சம்
        நேர்பட நினைந்த வாறே.     4.74.5
    721    கருப்பனைத் தடக்கை வேழக்
        களிற்றினை யுரித்த கண்டன்
        விருப்பனை விளங்கு சோதி
        வியன்கயி லாய மென்னும்
        பொருப்பனைப் பொருப்பன் மங்கை
        பங்கனை அங்கை யேற்ற
        நெருப்பனை நினைந்த நெஞ்சம்
        நேர்பட நினைந்த வாறே.     4.74.6
    722    நீதியால் நினைப்பு ளானை
        நினைப்பவர் மனத்து ளானைச்
        சாதியைச் சங்க வெண்ணீற்
        றண்ணலை விண்ணில் வானோர்
        சோதியைத் துளக்க மில்லா
        விளக்கினை அளக்க லாகா
        ஆதியை நினைந்த நெஞ்சம்
        அழகிதா நினைந்த வாறே.     4.74.7
    723    பழகனை யுலகுக் கெல்லாம்
        பருப்பனைப் பொருப்போ டொக்கும்
        மழகளி யானை யின்றோல்
        மலைமகள் நடுங்கப் போர்த்த
        குழகனைக் குழவித் திங்கள்
        குளிர்சடை மருவ வைத்த
        அழகனை நினைந்த நெஞ்சம்
        அழகிதா நினைந்த வாறே.     4.74.8
    724    விண்ணிடை மின்னொப் பானை
        மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
        கண்ணிடை மணியொப் பானைக்
        கடுவிருட் சுடரொப் பானை
        எண்ணிடை யெண்ண லாகா
        இருவரை வெருவ நீண்ட
        அண்ணலை நினைந்த நெஞ்சம்
        அழகிதா நினைந்த வாறே.     4.74.9
    725    உரவனைத் திரண்ட திண்டோ ள்
        அரக்கனை யூன்றி மூன்றூர்
        நிரவனை நிமிர்ந்த சோதி
        நீண்முடி யமரர் தங்கள்
        குரவனைக் குளிர்வெண் டிங்கள்
        சடையிடைப் பொதியும் ஐவாய்
        அரவனை நினைந்த நெஞ்சம்
        அழகிதா நினைந்த வாறே.     4.74.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.75 தனித் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    726    தொண்டனேன் பட்ட தென்னே
        தூயகா விரியின் நன்னீர்
        கொண்டிருக் கோதி யாட்டிக்
        குங்குமக் குழம்பு சாத்தி
        இண்டைகொண் டேற நோக்கி
        ஈசனை எம்பி ரானைக்
        கண்டனைக் கண்டி ராதே
        காலத்தைக் கழித்த வாறே.     4.75.1
    727    பின்னிலேன் முன்னி லேன்நான்
        பிறப்பறுத் தருள்செய் வானே
        என்னிலேன் நாயி னேன்நான்
        இளங்கதிர்ப் பயலைத் திங்கட்
        சின்னிலா எறிக்குஞ் சென்னிச்
        சிவபுரத் தமர ரேறே
        நின்னலால் களைகண் ஆரே
        நீறுசே ரகலத் தானே.     4.75.2
    728    கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்
        காலத்தைக் கழித்துப் போக்கித்
        தெள்ளியே னாகி நின்று
        தேடினேன் நாடிக் கண்டேன்
        உள்குவார் உள்கிற் றெல்லாம்
        உடனிருந் தறிதி யென்று
        வெள்கினேன் வெள்கி நானும்
        விலாவிறச் சிரித்திட் டேனே.     4.75.3
    729    உடம்பெனு மனைய கத்துள்
        உள்ளமே தகளி யாக
        மடம்படும் உணர்நெய் யட்டி
        உயிரெனுந் திரிம யக்கி
        இடம்படு ஞானத் தீயால்
        எரிகொள இருந்து நோக்கில்
        கடம்பமர் காளை தாதை
        கழலடி காண லாமே.     4.75.4
    730    வஞ்சப்பெண் ணரங்கு கோயில்
        வாளெயிற் றரவந் துஞ்சா
        வஞ்சப்பெண் இருந்த சூழல்
        வான்றவழ் மதியந் தோயும்
        வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்
        வாழ்வினை வாழ லுற்று
        வஞ்சப்பெண் ணுறக்க மானேன்
        வஞ்சனேன் என்செய் கேனே.     4.75.5
    731    உள்குவார் உள்ளத் தானை
        உணர்வெனும் பெருமை யானை
        உள்கினேன் நானுங் காண்பான்
        உருகினேன் ஊறி யூறி
        எள்கினேன் எந்தை பெம்மான்
        இருதலை மின்னு கின்ற
        கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம்
        எங்ஙனங் கூடு மாறே.     4.75.6
    732    மோத்தையைக் கண்ட காக்கை
        போலவல் வினைகள் மொய்த்துன்
        வார்த்தையைப் பேச வொட்டா
        மயக்கநான் மயங்கு கின்றேன்
        சீத்தையைச் சிதம்பு தன்னைச்
        செடிகொள்நோய் வடிவொன் றில்லா
        ஊத்தையைக் கழிக்கும் வண்ணம்
        உணர்வுதா உலக மூர்த்தீ.     4.75.7
    733    அங்கத்தை மண்ணுக் காக்கி
        ஆர்வத்தை உனக்கே தந்து
        பங்கத்தைப் போக மாற்றிப்
        பாவித்தேன் பரமா நின்னைs
        சங்கொத்த மேனிச் செல்வா
        சாதல்நாள் நாயேன் உன்னை
        எங்குற்றாய் என்ற போதா
        இங்குற்றேன் என்கண் டாயே.     4.75.8
    734    வெள்ளநீர்ச் சடைய னார்தாம்
        வினவுவார் போல வந்தென்
        உள்ளமே புகுந்து நின்றார்க்
        குறங்குநான் புடைகள் போந்து
        கள்ளரோ புகுந்தீ ரென்னக்
        கலந்துதான் நோக்கி நக்கு
        வெள்ளரோ மென்று நின்றார்
        விளங்கிளம் பிறைய னாரே.     4.75.9
    735    பெருவிரல் இறைதா னூன்ற
        பிறையெயி றிலங்க அங்காந்
        தருவரை அனைய தோளான்
        அரக்கனன் றலறி வீழ்ந்தான்
        இருவரும் ஒருவ னாய
        உருவமங் குடைய வள்ளல்
        திருவடி சுமந்து கொண்டு
        காண்கநான் திரியு மாறே.     4.75.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.76 தனித் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    736    மருளவா மனத்த னாகி
        மயங்கினேன் மதியி லாதேன்
        இருளவா அறுக்கும் எந்தை
        இணையடி நீழ லென்னும்
        அருளவாப் பெறுத லின்றி
        அஞ்சிநான் அலமந் தேற்குப்
        பொருளவாத் தந்த வாறே
        போதுபோய்ப் புலர்ந்த தன்றே.     4.76.1
    737    மெய்ம்மையாம் உழவைச் செய்து
        விருப்பெனும் வித்தை வித்திப்
        பொய்ம்மையாங் களையை வாங்கிப்
        பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
        தம்மையும் நோக்கிக் கண்டு
        தகவெனும் வேலி யிட்டுச்
        செம்மையுள் நிற்ப ராகிற்
        சிவகதி விளையு மன்றே.     4.76.2
    738    எம்பிரான் என்ற தேகொண்
        டென்னுளே புகுந்து நின்றிங்
        கெம்பிரான் ஆட்ட ஆடி
        என்னுளே உழிதர் வேனை
        எம்பிரான் என்னைப் பின்னைத்
        தன்னுளே கரக்கு மென்றால்
        எம்பிரான் என்னி னல்லால்
        என்செய்கேன் ஏழை யேனே.     4.76.3
    739    காயமே கோயி லாகக்
        கடிமனம் அடிமை யாக
        வாய்மையே தூய்மை யாக
        மனமணி இலிங்க மாக
        நேயமே நெய்யும் பாலா
        நிறையநீர் அமைய வாட்டிப்
        பூசனை ஈச னார்க்குப்
        போற்றவிக் காட்டி னோமே.     4.76.4
    740    வஞ்சகப் புலைய னேனை
        வழியறத் தொண்டிற் பூட்டி
        அஞ்சலென் றாண்டு கொண்டாய்
        அதுவுநின் பெருமை யன்றே
        நெஞ்சகங் கனிய மாட்டேன்
        நின்னையுள் வைக்க மாட்டேன்
        நஞ்சிடங் கொண்ட கண்டா
        என்னென நன்மை தானே.     4.76.5
    741    நாயினுங் கடைப்பட் டேனை
        நன்னெறி காட்டி ஆண்டாய்
        ஆயிரம் அரவ மார்த்த
        அமுதனே அமுத மொத்து
        நீயுமென் னெஞ்சி னுள்ளே
        நிலாவினாய் நிலாவி நிற்க
        நோயவை சாரு மாகில்
        நோக்கிநீ அருள்செய் வாயே.     4.76.6
    742    விள்ளத்தா னொன்று மாட்டேன்
        விருப்பெனும் வேட்கை யாலே
        வள்ளத்தேன் போல நுன்னை
        வாய்மடுத் துண்டி டாமே
        உள்ளத்தே நிற்றி யேனும்
        உயிர்ப்புளே வருதி யேனுங்
        கள்ளத்தே நிற்றி அம்மா
        எங்ஙனங் காணு மாறே.     4.76.7
    743    ஆசைவன் பாச மெய்தி
        அங்குற்றே னிங்குற் றேனாய்
        ஊசலாட் டுண்டு வாளா
        உழந்துநான் உழித ராமே
        தேசனே தேச மூர்த்தி
        திருமறைக் காடு மேய
        ஈசனே உன்றன் பாதம்
        ஏத்துமா றருளெம் மானே.     4.76.8
    744    நிறைவிலேன் நேச மில்லேன்
        நினைவிலேன் வினையின் பாச
        மறைவிலே புறப்பட் டேறும்
        வகையெனக் கருளெ னெம்மான்
        சிறையிலேன் செய்வ தென்னே
        திருவடி பரவி யேத்தக்
        குறைவிலேன் குற்றந் தீராய்
        கொன்றைசேர் சடையி னானே.    4.76.9
    745    நடுவிலாக் காலன் வந்து
        நணுகும்போ தறிய வொண்ணா
        அடுவன அஞ்சு பூதம்
        அவைதமக் காற்ற லாகேன்
        படுவன பலவுங் குற்றம்
        பாங்கிலா மனிதர் வாழ்க்கை
        கெடுவதிப் பிறவி சீசீ
        கிளரொளிச் சடையி னீரே.     4.76.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.77 தனித் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    746    கடும்பகல் நட்ட மாடிக்
        கையிலோர் கபால மேந்தி
        இடும்பலிக் கில்லந் தோறு
        முழிதரும் இறைவ னீரே
        நெடும்பொறை மலையர் பாவை
        நேரிழை நெறிமென் கூந்தற்
        கொடுங்குழை புகுந்த வன்றுங்
        கோவண மரைய தேயோ.     4.77.1
    747    கோவண முடுத்த வாறுங்
        கோளர வசைத்த வாறுந்
        தீவணச் சாம்பர் பூசித்
        திருவுரு இருந்த வாறும்
        பூவணக் கிழவ னாரைப்
        புலியுரி அரைய னாரை
        ஏவணச் சிலையி னாரை
        யாவரே எழுது வாரே.     4.77.2
    748    விளக்கினாற் பெற்ற இன்பம்
        மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
        துளக்கில்நன் மலர்தொ டுத்தால்
        தூயவிண் ணேற லாகும்
        விளக்கிட்டார் பேறு சொல்லின்
        மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
        அளப்பில கீதஞ் சொன்னார்க்
        கடிகள்தாம் அருளு மாறே.     4.77.3
    749    சந்திரற் சடையில் வைத்த
        சங்கரன் சாம வேதி
        அந்தரத் தமரர் பெம்மான்
        ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
        மந்திரம் நமச்சி வாய
        ஆகநீ றணியப் பெற்றால்
        வெந்தறும் வினையும் நோயும்
        வெவ்வழல் விறகிட் டன்றே.     4.77.4
    750    புள்ளுவர் ஐவர் கள்வர்
        புனத்திடைப் புகுந்து நின்று
        துள்ளுவர் சூறை கொள்வர்
        தூநெறி விளைய வொட்டார்
        முள்ளுடை யவர்கள் தம்மை
        முக்கணான் பாத நீழல்
        உள்ளிடை மறைந்து நின்றங்
        குணர்வினா லெய்ய லாமே.     4.77.5
    751    தொண்டனேன் பிறந்து வாளா
        தொல்வினைக் குழியில் வீழ்ந்து
        பிண்டமே சுமந்து நாளும்
        பெரியதோர் அவாவிற் பட்டேன்
        அண்டனே அமரர் கோவே
        அறிவனே அஞ்ச லென்னாய்
        தெண்டிரைக் கங்கை சூடுந்
        திகழ்தரு சடையி னானே.     4.77.6
    752    பாறினாய் பாவி நெஞ்சே
        பன்றிபோல் அளற்றிற் பட்டுத்
        தேறிநீ நினைதி யாயின்
        சிவகதி திண்ண மாகும்
        ஊறலே உவர்ப்பு நாறி
        உதிரமே யொழுகும் வாசல்
        கூறையால் மூடக் கண்டு
        கோலமாக் கருதி னாயே.     4.77.7
        இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள்
    சிதைந்து போயின.     4.77.8-9
    753    உய்த்தகால் உதயத் தும்பர்
        உமையவள் நடுக்கந் தீர
        வைத்தகா லரக்க னோதன்
        வான்முடி தனக்கு நேர்ந்தான்
        மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள்
        மூர்த்தியெ னுச்சி தன்மேல்
        வைத்தகால் வருந்து மென்று
        வாடிநான் ஒடுங்கி னேனே.     4.77.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.78 குறைந்த - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    754     வென்றிலேன் புலன்க ளைந்தும்
        வென்றவர் வளாகந் தன்னுள்
        சென்றிலே னாத லாலே
        செந்நெறி யதற்குஞ் சேயேன்
        நின்றுளே துளும்பு கின்றேன்
        நீசனேன் ஈச னேயோ
        இன்றுளேன் நாளை யில்லேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.78.1
    755    கற்றிலேன் கலைகள் ஞானங்
        கற்றவர் தங்க ளோடும்
        உற்றிலே னாத லாலே
        உணர்வுக்குஞ் சேய னானேன்
        பெற்றிலேன் பெருந்த டங்கண்
        பேதைமார் தமக்கும் பொல்லேன்
        எற்றுளேன் இறைவ னேநான்
        என்செய்வான் தோன்றி னேனே.    4.78.2
    756    மாட்டினேன் மனத்தை முன்னே
        மறுமையை உணர மாட்டேன்
        மூட்டிநான் முன்னை நாளே
        முதல்வனை வணங்க மாட்டேன்
        பாட்டினாய் போல நின்று
        பற்றதாம் பாவந் தன்னை
        ஈட்டினேன் களைய மாட்டேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.78.3
    757    கரைக்கடந் தோத மேறுங்
        கடல்விட முண்ட கண்டன்
        உரைக்கடந் தோது நீர்மை
        யுணர்ந்திலே னாத லாலே
        அரைக்கிடந் தசையு நாகம்
        அசைப்பனே இன்ப வாழ்க்கைக்
        கிரைக்கிடைந் துருகு கின்றேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.78.4
    758    செம்மைவெண் ணீறு பூசுஞ்
    ச்஢வனவன் தேவ தேவன்
    வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்
        விகிர்தனுக் கார்வ மெய்தி
        அம்மைநின் றடிமை செய்யா
        வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
        கிம்மைநின் றுருகு கின்றேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.78.5
    759    பேச்சொடு பேச்சுக் கெல்லாம்
        பிறர்தமைப் புறமே பேசக்
        கூச்சிலே னாத லாலே
        கொடுமையை விடுமா றோரேன்
        நாச்சொலி நாளும் மூர்த்தி
        நன்மையை யுணர மாட்டேன்
        ஏச்சுளே நின்று மெய்யே
        என்செய்வான் தோன்றி னேனே.     4.78.6
    760    தேசனைத் தேச மாகுந்
        திருமாலோர் பங்கன் றன்னைப்
        பூசனைப் புனிதன் றன்னைப்
        புணரும்புண் டரிகத் தானை
        நேசனை நெருப்பன் றன்னை
        நிவஞ்சகத் தகன்ற செம்மை
        ஈசனை அறிய மாட்டேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.78.7
    761    விளைக்கின்ற வினையை நோக்கி
        வெண்மயிர் விரவி மேலும்
        முளைக்கின்ற வினையைப் போக
        முயல்கிலேன் இயல வெள்ளந்
        திளைக்கின்ற முடியி னான்றன்
        திருவடி பரவ மாட்டா
        திளைக்கின்றே னிருமி யூன்றி
        என்செய்வான் தோன்றி னேனே.     4.78.8
    762    விளைவறி விலாமை யாலே
        வேதனைக் குழியி லாழ்ந்து
        களைகணு மில்லேன் எந்தாய்
        காமரங் கற்று மில்லேன்
        தளையவிழ் கோதை நல்லார்
        தங்களோ டின்ப மெய்த
        இளையனு மல்லேன் எந்தாய்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.78.9
    763    வெட்டன வுடைய னாகி
        வீரத்தால் மலை யெடுத்த
        துட்டனைத் துட்டுத் தீர்த்துச்
        சுவைப்படக் கீதங் கேட்ட
        அட்டமா மூர்த்தி யாய
        ஆதியை ஓதி நாளும்
        எட்டனை எட்ட மாட்டேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.78.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.79 குறைந்த - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    764    தம்மானங் காப்ப தாகித்
        தையலார் வலையு ளாழ்ந்து
        அம்மானை அமுதன் றன்னை
        ஆதியை அந்த மாய
        செம்மான ஒளிகொள் மேனிச்
        சிந்தையு ளொன்றி நின்ற
        எம்மானை நினைய மாட்டேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.79.1
    765    மக்களே மணந்த தார
        மவ்வயிற் றவரை யோம்புஞ்
        சிக்குளே யழுந்தி ஈசன்
        திறம்படேன் றவம தோரேன்
        கொப்புளே போலத் தோன்றி
        யதனுளே மறையக் கண்டும்
        இக்களே பரத்தை யோம்ப
        என்செய்வான் தோன்றி னேனே.     4.79.2
    766    கூழையே னாக மாட்டேன்
        கொடுவினைக் குழியில் வீழ்ந்து
        ஏழினின் னிசையி னாலும்
        இறைவனை யேத்த மாட்டேன்
        மாழையொண் கண்ணின் நல்ல
        மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
        ஏழையே னாகி நாளு
        மென்செய்வான் தோன்றி னேனே.     4.79.3
    767    முன்னையென் வினையி னாலே
        மூர்த்தியை நினைய மாட்டேன்
        பின்னைநான் பித்த னாகிப்
        பிதற்றுவன் பேதை யேன்நான்
        என்னுளே மன்னி நின்ற
        சீர்மைய தாயி னானை
        என்னுளே நினைய மாட்டேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.79.4
    768    கறையணி கண்டன் றன்னைக்
        காமரங் கற்று மில்லேன்
        பிறைநுதற் பேதை மாதர்
        பெய்வளை யார்க்கு மல்லேன்
        மறைநவில் நாவி னானை
        மன்னிநின் றிறைஞ்சி நாளும்
        இறையேயு மேத்த மாட்டேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.79.5
        இப்பதிகத்தில் 6,7,8,9-ம்செய்யுட்கள்
    மறைந்து போயின.     4.79.6-91
    769    வளைத்துநின் றைவர் கள்வர்
        வந்தெனை நடுக்கஞ் செய்யத்
        தளைத்துவைத் துலையை யேற்றித்
        தழலெரி மடுத்த நீரில்
        திளைத்துநின் றாடு கின்ற
        ஆமைபோல் தெளிவி லாதேன்
        இளைத்துநின் றாடு கின்றேன்
        என்செய்வான் தோன்றி னேனே.     4.79.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.80 கோயில் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    770    பாளையு டைக்கமு கோங்கிப்பன்
        மாடம்நெ ருங்கியெங்கும்
        வாளையு டைப்புனல் வந்தெறி
        வாழ்வயல் தில்லைதன்னுள்
        ஆளவு டைக்கழற் சிற்றம்ப
        லத்தரன் ஆடல்கண்டாற்
        பீளையு டைக்கண்க ளாற்பின்னைப்
        பேய்த்தொண்டர் காண்பதென்னே.     4.80.1
    771    பொருவிடை யொன்றுடைப் புண்ணிய
        மூர்த்தி புலியதளன்
        உருவுடை யம்மலை மங்கைம
        ணாளன் உலகுக்கெல்லாந்
        திருவுடை அந்தணர் வாழ்கின்ற
        தில்லைச்சிற் றம்பலவன்
        திருவடி யைக்கண்ட கண்கொண்டு
        மற்றினிக் காண்பதென்னே.     4.80.2
    772    தொடுத்த மலரொடு தூபமுஞ்
        சாந்துங்கொண் டெப்பொழுதும்
        அடுத்து வணங்கும் அயனொடு
        மாலுக்குங் காண்பரியான்
        பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய
        தில்லைச்சிற் றம்பலவன்
        உடுத்த துகில்கண்ட கண்கொண்டு
        மற்றினிக் காண்பதென்னே.     4.80.3
    773    வைச்ச பொருள்நமக் காகுமென்
        றெண்ணி நமச்சிவாய
        அச்ச மொழிந்தேன் அணிதில்லை
        யம்பலத் தாடுகின்ற
        பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
        உந்தியின் மேலசைத்த
        கச்சின் அழகுகண் டாற்பின்னைக்
        கண்கொண்டு காண்பதென்னே.     4.80.4
    774    செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற
        தில்லைச்சிற் றம்பலவன்
        மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
        கண்டு மகிழ்ந்துநிற்க
        நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த
        நீல மணிமிடற்றான்
        கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக்
        கண்கொண்டு காண்பதென்னே.     4.80.5
    775    ஊனத்தை நீக்கி உலகறிய
        என்னை யாட்கொண்டவன்
        தேனொத் தெனக்கினி யான்தில்லைச்
        சிற்றம் பலவனெங்கோன்
        வானத் தவருய்ய வன்னஞ்சை
        யுண்டகண் டத்திலங்கும்
        ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக்
        கண்கொண்டு காண்பதென்னே.     4.80.6
    776    தெரித்த கணையாற் திரிபுர
        மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
        எரித்த இறைவன் இமையவர்
        கோமான் இணையடிகள்
        தரித்த மனத்தவர் வாழ்கின்ற
        தில்லைச்சிற் றம்பலவன்
        சிரித்த முகங்கண்ட கண்கொண்டு
        மற்றினிக் காண்பதென்னே.     4.80.7
    777    சுற்று மமரர் சுரபதி
        நின்திருப் பாதமல்லால்
        பற்றொன் றிலோமென் றழைப்பப்
        பரவையுள் நஞ்சையுண்டான்
        செற்றங் கனங்கனைத் தீவிழித்
        தான்றில்லை யம்பலவன்
        நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
        மற்றினிக் காண்பதென்னே.     4.80.8
    778    சித்தத் தெழுந்த செழுங்கம
        லத்தன்ன சேவடிகள்
        வைத்த மனத்தவர் வாழ்கின்ற
        தில்லைச்சிற் றம்பலவன்
        முத்தும் வயிரமும் மாணிக்கந்
        தன்னுள் விளங்கியதூ
        மத்த மலர்கண்ட கண்கொண்டு
        மற்றினிக் காண்பதென்னே.     4.80.9
    779    தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி
        யுன்னித் தடவரையை
        வரைக்கை களாலெடுத் தார்ப்ப
        மலைமகள் கோன்சிரித்து
        அரக்கன் மணிமுடி பத்தும்
        அணிதில்லை யம்பலவன்
        நெருக்கி மிதித்த விரல்கண்ட
        கண்கொண்டு காண்பதென்னே.     4.80.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
    தேவியார் - சிவகாமியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.81 கோயில் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    780    கருநட்ட கண்டனை அண்டத்
        தலைவனைக் கற்பகத்தைச்
        செருநட்ட மும்மதி லெய்யவல்
        லானைச்செந் தீமுழங்கத்
        திருநட்ட மாடியைத் தில்லைக்
        கிறையைச்சிற் றம்பலத்துப்
        பெருநட்ட மாடியை வானவர்
        கோனென்று வாழ்த்துவனே.     4.81.1
    781    ஒன்றி யிருந்து நினைமின்கள்
        உந்தமக் கூனமில்லை
        கன்றிய காலனைக் காலாற்
        கடிந்தான் அடியவற்காச்
        சென்று தொழுமின்கள் தில்லையுட்
        சிற்றம் பலத்துநட்டம்
        என்றுவந் தாயெனும் எம்பெரு
        மான்றன் திருக்குறிப்பே.     4.81.2
    782    கன்மன வீர்கழி யுங்கருத்
        தேசொல்லிக் காண்பதென்னே
        நன்மன வர்நவில் தில்லையுட்
        சிற்றம் பலத்துநட்டம்
        பொன்மலை யில்வெள்ளிக் குன்றது
        போலப் பொலிந்திலங்கி
        என்மன மேயொன்றிப் புக்கனன்
        போந்த சுவடில்லையே.     4.81.3
    783    குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்
        வாயிற் குமிண்சிரிப்பும்
        பனித்த சடையும் பவளம்போல்
        மேனியிற் பால்வெண்ணீறும்
        இனித்த முடைய எடுத்தபொற்
        பாதமுங் காணப்பெற்றால்
        மனித்தப் பிறவியும் வேண்டுவதே
        இந்த மாநிலத்தே.     4.81.4
    784    வாய்த்தது நந்தமக் கீதோர்
        பிறவி மதித்திடுமின்
        பார்த்தற்குப் பாசு பதமருள்
        செய்தவன் பத்தருள்ளீர்
        கோத்தன்று முப்புரந் தீவளைத்
        தான்றில்லை யம்பலத்துக்
        கூத்தனுக் காட்பட் டிருப்பதன்
        றோநந்தங் கூழைமையே.     4.81.5
    785    பூத்தன பொற்சடை பொன்போல்
        மிளிரப் புரிகணங்கள்
        ஆர்த்தன கொட்டி யரித்தன
        பல்குறட் பூதகணந்
        தேத்தென வென்றிசை வண்டுகள்
        பாடுசிற் றம்பலத்துக்
        கூத்தனிற் கூத்துவல் லாருள
        ரோவென்றன் கோல்வளைக்கே.     4.81.6
    786    முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
        நோக்கும் முறுவலிப்புந்
        துடிகொண்ட கையுந் துதைந்தவெண்
        ணீறுஞ் சுரிகுழலாள்
        படிகொண்ட பாகமும் பாய்புலித்
        தோலுமென் பாவிநெஞ்சிற்
        குடிகொண்ட வாதில்லை யம்பலக்
        கூத்தன் குரைகழலே.     4.81.7
    787    படைக்கல மாகவுன் னாமத்
        தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
        இடைக்கல மல்லேன் எழுபிறப்
        பும்முனக் காட்செய்கின்றேன்
        துடைக்கினும் போகேன் தொழுது
        வணங்கித்தூ நீறணிந்துன்
        அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச்
        சிற்றம் பலத்தரனே.     4.81.8
    788    பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ
        றணிந்து புரிசடைகள்
        மின்னொத் திலங்கப் பலிதேர்ந்
        துழலும் விடங்கவேடச்
        சின்னத்தி னான்மலி தில்லையுட்
        சிற்றம் பலத்துநட்டம்
        என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற
        தாலிவ் விருநிலமே.     4.81.9
    789    சாட எடுத்தது தக்கன்றன்
        வேள்வியிற் சந்திரனை
        வீட எடுத்தது காலனை
        நாரணன் நான்முகனுந்
        தேட எடுத்தது தில்லையுட்
        சிற்றம் பலத்துநட்டம்
        ஆட எடுத்திட்ட பாதமன்
        றோநம்மை யாட்கொண்டதே.     4.81.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.82 திருக்கழுமலம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    790    பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட
        ஞான்றுநின் பாதமெல்லாம்
        நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
        என்பர் நளிர்மதியங்
        கால்கொண்ட வண்கைச் சடைவிரித்
        தாடுங் கழுமலவர்க்
        காளன்றி மற்றுமுண் டோ அந்த
        ணாழி அகலிடமே.     4.82.1
    791    கடையார் கொடிநெடு மாடங்க
        ளெங்குங் கலந்திலங்க
        உடையா னுடைதலை மாலையுஞ்
        சூடி உகந்தருளி
        விடைதா னுடையவவ் வேதியன்
        வாழுங் கழுமலத்துள்
        அடைவார் வினைக ளவையெள்க
        நாடொறும் ஆடுவரே.     4.82.2
    792    திரைவாய்ப் பெருங்கடல் முத்தங்
        குவிப்ப முகந்துகொண்டு
        நுரைவாய் நுளைச்சிய ரோடிக்
        கழுமலத் துள்ளழுந்தும்
        விரைவாய் நறுமலர் சூடிய
        விண்ணவன் றன்னடிக்கே
        வரையாப் பரிசிவை நாடொறும்
        நந்தமை யாள்வனவே.     4.82.3
    793    விரிக்கும் அரும்பதம் வேதங்க
        ளோதும் விழுமியநூல்
        உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
        கேட்கில் உலகமுற்றும்
        இரிக்கும் பறையொடு பூதங்கள்
        பாடக் கழுமலவன்
        நிருத்தம் பழம்படி யாடுங்
        கழல்நம்மை ஆள்வனவே.     4.82.4
    794    சிந்தித் தெழுமன மேநினை
        யாமுன் கழுமலத்தைப்
        பந்தித்த வல்வினை தீர்க்க
        வல்லானைப் பசுபதியைச்
        சந்தித்த கால மறுத்துமென்
        றெண்ணி யிருந்தவர்க்கு
        முந்தித் தொழுகழல் நாடொறும்
        நந்தம்மை ஆள்வனவே.     4.82.5
    795    நிலையும் பெருமையும் நீதியுஞ்
        சால அழகுடைத்தாய்
        அலையும் பெருவெள்ளத் தன்று
        மிதந்தவித் தோணிபுரஞ்
        சிலையில் திரிபுரம் மூன்றெரித்
        தார்தங் கழுமலவர்
        அலருங் கழலடி நாடொறும்
        நந்தமை ஆள்வனவே.     4.82.6
    796    முற்றிக் கிடந்துமுந் நீரின்
        மிதந்துடன் மொய்த்தமரர்
        சுற்றிக் கிடந்து தொழப்படு
        கின்றது சூழரவந்
        தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்
        துன்றிவெண் திங்கள்சூடுங்
        கற்றைச் சடைமுடி யார்க்கிட
        மாய கழுமலமே.     4.82.7
    797    உடலும் உயிரும் ஒருவழிச்
        செல்லும் உலகத்துள்ளே
        அடையும் உனைவந் தடைந்தார்
        அமரர் அடியிணைக்கீழ்
        நடையும் விழவொடு நாடொறும்
        மல்கும் கழுமலத்துள்
        விடையன் தனிப்பதம் நாடொறும்
        நந்தமை ஆள்வனவே.     4.82.8
    798    பரவைக் கடல்நஞ்ச முண்டது
        மில்லையிப் பார்முழுதும்
        நிரவிக் கிடந்து தொழப்படு
        கின்றது நீண்டிருவர்
        சிரமப் படவந்து சார்ந்தார்
        கழலடி காண்பதற்கே
        அரவக் கழலடி நாடொறும்
        நந்தமை ஆள்வனவே.     4.82.9
    799    கரையார் கடல்சூழ் இலங்கையர்
        கோன்றன் முடிசிதறத்
        தொலையா மலரடி ஊன்றலும்
        உள்ளம் விதிர்விதிர்த்துத்
        தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்
        கழுமலங் காண்பதற்கே
        அலையாப் பரிசிவை நாடொறும்
        நந்தமை ஆள்வனவே.     4.82.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரமபுரீசர், தேவியார் - திருநிலைநாயகி.
    திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.83 திருக்கழுமலம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    800    படையார் மழுவொன்று பற்றிய
        கையன் பதிவினவிற்
        கடையார் கொடிநெடு மாடங்க
        ளோங்குங் கழுமலமாம்
        மடைவாய்க் குருகினம் பாளை
        விரிதொறும் வண்டினங்கள்
        பெடைவாய் மதுவுண்டு பேரா
        திருக்கும் பெரும்பதியே.     4.83.1

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.84 ஆருயிர்த் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    801    எட்டாந் திசைக்கும் இருதிசைக்
        கும்மிறை வாமுறையென்
        றிட்டார் அமரர்வெம் பூசல்
        எனக்கேட் டெரிவிழியா
        ஒட்டாக் கயவர் திரிபுரம்
        மூன்றையும் ஓரம்பினால்
        அட்டான் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.1
    802    பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந்
        தேறிப் பிறங்கிலங்கு
        தேய்வாய் இளம்பிறை செஞ்சடை
        மேல்வைத்த தேவர்பிரான்
        மூவான் இளகான் முழுவுல
        கோடுமண் விண்ணுமற்றும்
        ஆவான் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.2
    803    தரியா வெகுளிய னாய்த்தக்கன்
        வேள்வி தகர்த்துகந்த
        எரியார் இலங்கிய சூலத்தி
        னான்இமை யாதமுக்கட்
        பெரியான் பெரியார் பிறப்பறுப்
        பானென்றுந் தன்பிறப்பை
        அரியான் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.3
    804    வடிவுடை வாணெடுங் கண்ணுமை
        யாளையோர் பால்மகிழ்ந்து
        வெடிகொள் அரவொடு வேங்கை
        அதள்கொண்டு மேல்மருவிப்
        பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந்
        தன்னபைங் கொன்றையந்தார்
        அடிகள் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.4
    805    பொறுத்தான் அமரர்க் கமுதரு
        ளிநஞ்ச முண்டுகண்டங்
        கறுத்தான் கறுப்பழ காவுடை
        யான்கங்கை செஞ்சடைமேற்
        செறுத்தான் தனஞ்சயன் சேணா
        ரகலங் கணையொன்றினால்
        அறுத்தான் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.5
    806    காய்ந்தான் செறற்கரி யானென்று
        காலனைக் காலொன்றினாற்
        பாய்ந்தான் பணைமதில் மூன்றுங்
        கணையென்னும் ஒள்ளழலால்
        மேய்ந்தான் வியனுல கேழும்
        விளங்க விழுமியநூல்
        ஆய்ந்தான் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.6
    807    உளைந்தான் செறுத்தற் கரியான்
        றலையை உகிரொன்றினாற்
        களைந்தான் அதனை நிறைய
        நெடுமால் கணார் குருதி
        வளைந்தான் ஒருவிர லின்னொடு
        வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ
        றளைந்தான் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.7
    808    முந்திவட் டத்திடைப் பட்டதெல்
        லாம்முடி வேந்தர்தங்கள்
        பந்திவட் டத்திடைப் பட்டலைப்
        புண்பதற் கஞ்சிக்கொல்லோ
        நந்திவட் டந்நறு மாமலர்க்
        கொன்றையு நக்கசென்னி
        அந்திவட் டத்தொளி யானடிச்
        சேர்ந்ததென் ஆருயிரே.     4.84.8
    809    மிகத்தான் பெரியதோர் வேங்கை
        யதள்கொண்டு மெய்ம்மருவி
        அகத்தான் வெருவநல் லாளை
        நடுக்குறுப் பான்வரும்பொன்
        முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி
        னாலுகப் பானிசைந்த
        அகத்தான் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.9
    810    பைம்மா ணரவல்குற் பங்கயச்
        சீறடி யாள்வெருவக்
        கைம்மா வரிசிலைக் காமனை
        யட்ட கடவுள்முக்கண்
        எம்மான் இவனென் றிருவரு
        மேத்த எரிநிமிர்ந்த
        அம்மான் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.10
    811    பழகவோ ரூர்தி யரன்பைங்கட்
        பாரிடம் பாணிசெய்யக்
        குழலும் முழவொடு மாநட
        மாடி உயரிலங்கைக்
        கிழவன் இருபது தோளும்
        ஒருவிர லாலிறுத்த
        அழகன் அடிநிழற் கீழதன்
        றோவென்றன் ஆருயிரே.     4.84.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.85 திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    812    காலை யெழுந்து கடிமலர்
        தூயன தாங்கொணர்ந்து
        மேலை யமரர் விரும்பு
        மிடம்விரை யான்மலிந்த
        சோலை மணங்கமழ் சோற்றுத்
        துறையுறை வார்சடைமேல்
        மாலை மதியமன் றோவெம்
        பிரானுக் கழகியதே.     4.85.1
    813    வண்டணை கொன்றையும் வன்னியும்
        மத்தமும் வாளரவுங்
        கொண்டணைந் தேறு முடியுடை
        யான்குரை சேர்கழற்கே
        தொண்டணைந் தாடிய சோற்றுத்
        துறையுறை வார்சடைமேல்
        வெண்டலை மாலையன் றோவெம்
        பிரானுக் கழகியதே.     4.85.2
    814    அளக்கு நெறியினன் அன்பர்கள்
        தம்மனத் தாய்ந்துகொள்வான்
        விளக்கு மடியவர் மேல்வினை
        தீர்த்திடும் விண்ணவர்கோன்
        துளக்குங் குழையணி சோற்றுத்
        துறையுறை வார்சடைமேற்
        றிளைக்கும் மதியமன் றோவெம்
        பிரானுக் கழகியதே.     4.85.3
    815    ஆய்ந்தகை வாளர வத்தொடு
        மால்விடை யேறியெங்கும்
        பேர்ந்தகை மானட மாடுவர்
        பின்னு சடையிடையே
        சேர்ந்தகைம் மாமலர் துன்னிய
        சோற்றுத் துறையுறைவார்
        ஏந்துகைச் சூல மழுவெம்
        பிரானுக் கழகியதே.     4.85.4
    816    கூற்றைக் கடந்ததுங் கோளர
        வார்த்ததுங் கோளுழுவை
        நீற்றில் துதைந்து திரியும்
        பரிசது நாமறியோம்
        ஆற்றிற் கிடந்தங் கலைப்ப
        அலைப்புண் டசைந்ததொக்குஞ்
        சோற்றுத் துறையுறை வார்சடை
        மேலதோர் தூமதியே.     4.85.5
    817    வல்லாடி நின்று வலிபேசு
        வார்கோளர் வல்லசுரர்
        கொல்லாடி நின்று குமைக்கிலும்
        வானவர் வந்திறைஞ்சச்
        சொல்லாடி நின்று பயில்கின்ற
        சோற்றுத் துறையுறைவார்
        வில்லாடி நின்ற நிலையெம்
        பிரானுக் கழகியதே.     4.85.6
    818    ஆய முடையது நாமறி
        யோம்அர ணத்தவரைக்
        காயக் கணைசிலை வாங்கியு
        மெய்துந் துயக்கறுத்தான்
        தூயவெண் ணீற்றினன் சோற்றுத்
        துறையுறை வார்சடைமேற்
        பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம்
        மானுக் கழகியதே.     4.85.7
    819    அண்டர் அமரர் கடைந்
        தெழுந் தோடிய நஞ்சதனை
        உண்டும் அதனை ஒடுக்க
        வல்லான் மிக்க உம்பர்கள்கோன்
        தொண்டு பயில்கின்ற சோற்றுத்
        துறையுறை வார்சடைமேல்
        இண்டை மதியமன் றோவெம்
        பிரானுக் கழகியதே.     4.85.8
    820    கடல்மணி வண்ணன் கருதிய
        நான்முகன் றானறியான்
        விடமணி கண்ட முடையவன்
        றானெனை ஆளுடையான்
        சுடரணிந் தாடிய சோற்றுத்
        துறையுறை வார்சடைமேற்
        படமணி நாகமன் றோவெம்
        பிரானுக் கழகியதே.     4.85.9
    821    இலங்கைக் கிறைவன் இருபது
        தோளு முடிநெரியக்
        கலங்க விரலினா லூன்றி
        அவனைக் கருத்தழித்த
        துலங்கல் மழுவினன் சோற்றுத்
        துறையுறை வார்சடைமேல்
        இலங்கு மதியமன் றோவெம்
        பிரானுக் கழகியதே.     4.85.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    822    செற்றுக் களிற்றுரி கொள்கின்ற
        ஞான்று செருவெண்கொம்பொன்
        றிற்றுக் கிடந்தது போலும்
        இளம்பிறை பாம்பதனைச்
        சுற்றிக் கிடந்தது கிம்புரி
        போலச் சுடரிமைக்கும்
        நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா
        லொற்றி யூரனுக்கே.     4.86.1
    823    சொல்லக் கருதிய தொன்றுண்டு
        கேட்கிற் றொண்டாயடைந்தார்
        அல்லற் படக்கண்டு பின்னென்
        கொடுத்தி அலைகொள்முந்நீர்
        மல்லற் றிரைச்சங்க நித்திலங்
        கொண்டுவம் பக்கரைக்கே
        ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி
        யூருறை யுத்தமனே.     4.86.2
    824    பரவை வருதிரை நீர்க்கங்கை
        பாய்ந்துக்க பல்சடைமேல்
        அரவ மணிதரு கொன்றை
        இளந்திங்கட் சூடியதோர்
        குரவ நறுமலர் கோங்க
        மணிந்து குலாய சென்னி
        உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி
        யூருறை யுத்தமனே.     4.86.3
    825    தானகங் காடரங் காக
        வுடையது தன்னடைந்தார்
        ஊனக நாறு முடைதலை
        யிற்பலி கொள்வதுந்தான்
        தேனக நாறுந் திருவொற்றி
        யூருறை வாரவர்தாந்
        தானக மேவந்து போனகம்
        வேண்டி உழிதர்வரே.     4.86.4
    826    வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள்
        ளேற்றொடும் வீற்றிருந்த
        மாலைச் சடையார்க் குறைவிட
        மாவது வாரிகுன்றா
        ஆலைக் கரும்பொடு செந்நெற்
        கழனி அருகணைந்த
        சோலைத் திருவொற்றி யூரையெப்
        போதுந் தொழுமின்களே.     4.86.5
    827    புற்றினில் வாழும் அரவுக்குந்
        திங்கட்குங் கங்கையென்னுஞ்
        சிற்றிடை யாட்குஞ் செறிதரு
        கண்ணிக்குஞ் சேர்விடமாம்
        பெற்றுடை யான்பெரும் பேச்சுடை
        யான்பிரி யாதெனையாள்
        விற்றுடை யானொற்றி யூருடை
        யான்றன் விரிசடையே.     4.86.6
    828    இன்றரைக் கண்ணுடை யாரெங்கு
        மில்லை இமய மென்னுங்
        குன்றரைக் கண்ணன் குலமகட்
        பாவைக்குக் கூறிட்டநாள்
        அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை
        யாளையும் பாகம்வைத்த
        ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி
        யூருறை உத்தமனே.     4.86.7
    829    சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங்
        காவுந் துதைந்திலங்கு
        பெற்றிகண் டால்மற்று யாவருங்
        கொள்வர் பிறரிடைநீ
        ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங்
        கைவிட் டுறுமென்றெண்ணி
        விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப
        தில்லிடம் வேதியனே.     4.86.8
    830    சுற்றிக் கிடந்தொற்றி யூரனென்
        சிந்தை பிரிவறியான்
        ஒற்றித் திரிதந்து நீயென்ன
        செய்தி உலகமெல்லாம்
        பற்றித் திரிதந்து பல்லொடு
        நாமென்று கண்குழித்துத்
        தெற்றித் திருப்பதல் லாலென்ன
        செய்யுமித் தீவினையே.     4.86.9
    831    அங்கட் கடுக்கைக்கு முல்லைப்
        புறவம் முறுவல்செய்யும்
        பைங்கட் டலைக்குச் சுடலைக்
        களரி பருமணிசேர்
        கங்கைக்கு வேலை அரவுக்குப்
        புற்று கலைநிரம்பாத்
        திங்கட்கு வானந் திருவொற்றி
        யூரர் திருமுடியே.     4.86.10
    832    தருக்கின வாளரக் கன்முடி
        பத்திறப் பாதந்தன்னால்
        ஒருக்கின வாறடி யேனைப்
        பிறப்பறுத் தாளவல்லான்
        நெருக்கின வானவர் தானவர்
        கூடிக் கடைந்தநஞ்சைப்
        பருக்கின வாறென்செய் கேனொற்றி
        யூருறை பண்டங்கனே.     4.86.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.87 திருப்பழனம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    833    மேவித்து நின்று விளைந்தன
        வெந்துயர் துக்கமெல்லாம்
        ஆவித்து நின்று கழிந்தன
        அல்லல் அவையறுப்பான்
        பாவித்த பாவனை நீயறி
        வாய்பழ னத்தரசே
        கூவித்துக் கொள்ளுந் தனையடி
        யேனைக் குறிக்கொள்வதே.     4.87.1
    834    சுற்றிநின் றார்புறங் காவ
        லமரர் கடைத்தலையில்
        மற்றுநின் றார்திரு மாலொடு
        நான்முகன் வந்தடிக்கீழ்ப்
        பற்றிநின் றார்பழ னத்தர
        சேயுன் பணியறிவான்
        உற்றுநின் றாரடி யேனைக்
        குறிக்கொண் டருளுவதே.     4.87.2
    835    ஆடிநின் றாயண்டம் ஏழுங்
        கடந்துபோய் மேலவையுங்
        கூடிநின் றாய்குவி மென்முலை
        யாளையுங் கொண்டுடனே
        பாடிநின் றாய்பழ னத்தர
        சேயங்கோர் பால்மதியஞ்
        சூடிநின் றாயடி யேனையஞ்
        சாமைக் குறிக்கொள்வதே.     4.87.3
    836    எரித்துவிட் டாய்அம்பி னாற்புர
        மூன்றுமுன் னேபடவும்
        உரித்துவிட் டாய்உமை யாள்நடுக்
        கெய்தவோர் குஞ்சரத்தைப்
        பரித்துவிட் டாய்பழ னத்தர
        சேகங்கை வார்சடைமேற்
        தரித்துவிட் டாயடி யேனைக்
        குறிக்கொண் டருளுவதே.     4.87.4
    837    முன்னியும் முன்னி முளைத்தன
        மூவெயி லும்முடனே
        மன்னியு மங்கும் இருந்தனை
        மாய மனத்தவர்கள்
        பன்னிய நூலின் பரிசறி
        வாய்பழ னத்தரசே
        உன்னியும் உன்னடி யேனைக்
        குறிக்கொண் டருளுவதே.     4.87.5
    838    ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்
        தேபடைத் தான்றலையைக்
        காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று
        காமனைக் காலனையும்
        பாய்ந்தறுத் தாய்பழ னத்தர
        சேயென் பழவினைநோய்
        ஆய்ந்தறுத் தாயடி யேனைக்
        குறிக்கொண் டருளுவதே.     4.87.6
    839    மற்றுவைத் தாயங்கோர் மாலொரு
        பாகம் மகிழ்ந்துடனே
        உற்றுவைத் தாய்உமை யாளொடுங்
        கூடும் பரிசெனவே
        பற்றிவைத் தாய்பழ னத்தர
        சேயங்கோர் பாம்பொருகை
        சுற்றிவைத் தாய்அடி யேனைக்
        குறிக்கொண் டருளுவதே.     4.87.7
    840    ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண்
        டாரையும் ஒள்ளழலாற்
        போரினின் றாய்பொறை யாயுயி
        ராவி சுமந்துகொண்டு
        பாரிநின் றாய்பழ னத்தர
        சேபணி செய்பவர்கட்
        காரநின் றாய்அடி யேனைக்
        குறிக்கொண் டருளுவதே.     4.87.8
    841    போகம்வைத் தாய்புரி புன்சடை
        மேலோர் புனலதனை
        ஆகம்வைத் தாய்மலை யான்மட
        மங்கை மகிழ்ந்துடனே
        பாகம்வைத் தாய்பழ னத்தர
        சேயுன் பணியருளால்
        ஆகம்வைத் தாய்அடி யேனைக்
        குறிக்கொண் டருளுவதே.     4.87.9
    842    அடுத்திருந் தாய்அரக் கன்முடி
        வாயொடு தோள்நெரியக்
        கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி
        யைக்கிளை யோடுடனே
        படுத்திருந் தாய்பழ னத்தர
        சேபுலி யின்னுரிதோல்
        உடுத்திருந் தாய்அடி யேனைக்
        குறிக்கொண் டருளுவதே.     4.87.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.88 திருப்பூந்துருத்தி - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    843    மாலினை மாலுற நின்றான்
        மலைமகள் தன்னுடைய
        பாலனைப் பான்மதி சூடியைப்
        பண்புண ரார்மதின்மேற்
        போலனைப் போர்விடை யேறியைப்
        பூந்துருத் திமகிழும்
        ஆலனை ஆதிபு ராணனை
        நானடி போற்றுவதே.     4.88.1
    844    மறியுடை யான்மழு வாளினன்
        மாமலை மங்கையோர்பால்
        குறியுடை யான்குண மொன்றறிந்
        தாரில்லை கூறிலவன்
        பொறியுடை வாளர வத்தவன்
        பூந்துருத் தியுறையும்
        அறிவுடை ஆதி புராணனை
        நானடி போற்றுவதே.     4.88.2
    845    மறுத்தவர் மும்மதில் மாயவோர்
        வெஞ்சிலை கோத்தோரம்பால்
        அறுத்தனை ஆலதன் கீழனை
        ஆல்விட முண்டதனைப்
        பொறுத்தனைப் பூதப் படையனைப்
        பூந்துருத் தியுறையும்
        நிறத்தனை நீல மிடற்றனை
        யானடி போற்றுவதே.     4.88.3
    846    உருவினை ஊழி முதல்வனை
        ஓதி நிறைந்துநின்ற
        திருவினைத் தேசம் படைத்தனைச்
        சென்றடைந் தேனுடைய
        பொருவினை யெல்லாந் துரந்தனைப்
        பூந்துருத் தியுறையுங்
        கருவினைக் கண்மூன் றுடையனை
        யானடி போற்றுவதே.     4.88.4
    847    தக்கன்றன் வேள்வி தகர்த்தவன்
        சார மதுவன்றுகோள்
        மிக்கன மும்மதில் வீயவோர்
        வெஞ்சிலை கோத்தோரம்பால்
        புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர்
        பூந்துருத் தியுறையும்
        நக்கனை நங்கள் பிரான்றனை
        நானடி போற்றுவதே.     4.88.5
    848    அருகடை மாலையுந் தானுடை
        யான்அழ காலமைந்த
        உருவுடை மங்கையுந் தன்னொரு
        பாலுல காயுநின்றான்
        பொருபடை வேலினன் வில்லினன்
        பூந்துருத் தியுறையுந்
        திருவுடைத் தேச மதியனை
        யானடி போற்றுவதே.     4.88.6
    849    மன்றியுந் நின்ற மதிலரை
        மாய வகைகெடுக்கக்
        கன்றியுந் நின்று கடுஞ்சிலை
        வாங்கிக் கனலம்பினாற்
        பொன்றியும் போகப் புரட்டினன்
        பூந்துருத் தியுறையும்
        அன்றியுஞ் செய்த பிரான்றனை
        யானடி போற்றுவதே.     4.88.7
    850    மின்னிறம் மிக்க இடையுமை
        நங்கையோர் பான்மகிழ்ந்தான்
        என்னிற மென்றம ரர்பெரி
        யாரின்னந் தாமறியார்
        பொன்னிற மிக்க சடையவன்
        பூந்துருத் தியுறையும்
        என்னிற வெந்தை பிரான்றனை
        யானடி போற்றுவதே.     4.88.8
    851    அந்தியை நல்ல மதியினை
        யார்க்கும் அறிவரிய
        செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை
        சென்றடைந் தேனுடைய
        புந்தியைப் புக்க அறிவினை
        பூந்துருத் தியுறையும்
        நந்தியை நங்கள் பிரான்றனை
        நானடி போற்றுவதே.     4.88.9
    852    பைக்கையும் பாந்தி விழிக்கையும்
        பாம்பு சடையிடையே
        வைக்கையும் வானிழி கங்கையும்
        மங்கை நடுக்குறவே
        மொய்க்கை அரக்கனை யூன்றினன்
        பூந்துருத் தியுறையும்
        மிக்கநல் வேத விகிர்தனை
        நானடி போற்றுவதே.     4.88.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    853    பாரிடஞ் சாடிய பல்லுயிர்
        வானம ரர்க்கருளிக்
        காரடைந் தகடல் வாயுமிழ்
        நஞ்சமு தாகவுண்டான்
        ஊரடைந் திவ்வுல கிற்பலி
        கொள்வது நாமறியோம்
        நீரடைந் தகரை நின்றநெய்த்
        தானத் திருந்தவனே.     4.89.1
    854    தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி
        யாய்நின் திருச்சடைமேற்
        பாய்ந்தகங் கைப்புனற் பன்முக
        மாகிப் பரந்தொலிப்ப
        ஆய்ந்திலங் கும்மழு வேலுடை
        யாயடி யேற்குரைநீ
        ஏந்திள மங்கையும் நீயும்நெய்த்
        தானத் திருந்ததுவே.     4.89.2
    855    கொன்றடைந் தாடிக் குமைத்திடுங்
        கூற்றமொன் னார்மதின்மேற்
        சென்றடைந் தாடிப் பொருததுந்
        தேசமெல் லாமறியுங்
        குன்றடைந் தாடுங் குளிர்பொழிற்
        காவிரி யின்கரைமேற்
        சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த்
        தானத் திருந்தவனே.     4.89.3
    856    கொட்டு முழவர வத்தொடு
        கோலம் பலஅணிந்து
        நட்டம் பலபயின் றாடுவர்
        நாகம் அரைக் கசைத்துச்
        சிட்டர் திரிபுரந் தீயெழச்
        செற்ற சிலையுடையான்
        இட்ட முமையொடு நின்றநெய்த்
        தானத் திருந்தவனே.     4.89.4
    857    கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி
        மத்தமுங் கூவிளமும்
        மெய்மலர் வேய்ந்த விரிசடைக்
        கற்றைவிண் ணோர்பெருமான்
        மைமலர் நீல நிறங்கருங்
        கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
        நின்மல னாடல் நிலயநெய்த்
        தானத் திருந்தவனே.     4.89.5
    858    பூந்தார் நறுங்கொன்றை மாலையை
        வாங்கிச் சடைக்கணிந்து
        கூர்ந்தார் விடையினை யேறிப்பல்
        பூதப் படைநடுவே
        போந்தார் புறவிசை பாடவும்
        ஆடவுங் கேட்டருளிச்
        சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த்
        தானத் திருந்தவனே.     4.89.6
    859    பற்றின பாம்பன் படுத்த
        புலியுரித் தோலுடையன்
        முற்றின மூன்று மதில்களை
        மூட்டி யெரித்தறுத்தான்
        சுற்றிய பூதப் படையினன்
        சூல மழுவொருமான்
        செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த்
        தானத் திருந்தவனே.     4.89.7
    860    விரித்த சடையினன் விண்ணவர்
        கோன்விட முண்டகண்டன்
        உரித்த கரியுரி மூடியொன்
        னார்மதில் மூன்றுடனே
        எரித்த சிலையினன் ஈடழியா
        தென்னை ஆண்டுகொண்ட
        தரித்த உமையவ ளோடுநெய்த்
        தானத் திருந்தவனே.     4.89.8
    861    தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
        துன்னிய செஞ்சடைமேல்
        வாங்கா மதியமும் வாளர
        வுங்கங்கை தான்புனைந்தான்
        தேங்கார் திரிபுரந் தீயெழ
        வெய்து தியக்கறுத்து
        நீங்கான் உமையவ ளோடுநெய்த்
        தானத் திருந்தவனே.     4.89.9
    862    ஊட்டிநின் றான்பொரு வானில
        மும்மதில் தீயம்பினால்
        மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து
        வீழவும் வானவர்க்குக்
        காட்டிநின் றான்கத மாக்கங்கை
        பாயவோர் வார்சடையை
        நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த்
        தானத் திருந்தவனே.     4.89.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.90 திருவேதிகுடி - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    863    கையது காலெரி நாகங்
        கனல்விடு சூலமது
        வெய்யது வேலைநஞ் சுண்ட
        விரிசடை விண்ணவர்கோன்
        செய்யினில் நீல மணங்கம
        ழுந்திரு வேதிகுடி
        ஐயனை ஆரா அமுதினை
        நாமடைந் தாடுதுமே.     4.90.1
    864    கைத்தலை மான்மறி யேந்திய
        கையன் கனல்மழுவன்
        பொய்த்தலை யேந்திநற் பூதி
        யணிந்து பலிதிரிவான்
        செய்த்தலை வாளைகள் பாய்ந்துக
        ளுந்திரு வேதிகுடி
        அத்தனை ஆரா அமுதினை
        நாமடைந் தாடுதுமே.     4.90.2
    865    முன்பின் முதல்வன் முனிவனெம்
        மேலை வினைகழித்தான்
        அன்பின் நிலையில் அவுணர்
        புரம்பொடி யானசெய்யுஞ்
        செம்பொனை நன்மலர் மேலவன்
        சேர்திரு வேதிகுடி
        அன்பனை நம்மை யுடையனை
        நாமடைந் தாடுதுமே.     4.90.3
    866    பத்தர்கள் நாளும் மறவார்
        பிறவியை யொன்றறுப்பான்
        முத்தர்கள் முன்னம் பணிசெய்து
        பாரிடம் முன்னுயர்த்தான்
        கொத்தன கொன்றை மணங்கம
        ழுந்திரு வேதிகுடி
        அத்தனை ஆரா அமுதினை
        நாமடைந் தாடுதுமே.     4.90.4
    867    ஆனணைந் தேறுங் குறிகுண
        மாரறி வாரவர்கை
        மானணைந் தாடு மதியும்
        புனலுஞ் சடைமுடியன்
        தேனணைந் தாடிய வண்டு
        பயில்திரு வேதிகுடி
        ஆனணைந் தாடு மழுவனை
        நாமடைந் தாடுதுமே.     4.90.5
    868    எண்ணும் எழுத்துங் குறியும்
        அறிபவர் தாமொழியப்
        பண்ணின் இசைமொழி பாடிய
        வானவர் தாம்பணிவார்
        திண்ணென் வினைகளைத் தீர்க்கும்
        பிரான்றிரு வேதிகுடி
        நண்ண அரிய அமுதினை
        நாமடைந் தாடுதுமே.     4.90.6
    869    ஊர்ந்த விடையுகந் தேறிய
        செல்வனை நாமறியோம்
        ஆர்ந்த மடமொழி மங்கையோர்
        பாகம் மகிழ்ந்துடையான்
        சேர்ந்த புனற்சடைச் செல்வப்
        பிரான்றிரு வேதிகுடிச்
        சார்ந்த வயலணி தண்ணமு
        தையடைந் தாடுதுமே.     4.90.7
    870    எரியும் மழுவினன் எண்ணியும்
        மற்றொரு வன்றலையுள்
        திரியும் பலியினன் தேயமும்
        நாடுமெல் லாமுடையான்
        விரியும் பொழிலணி சேறு
        திகழ்திரு வேதிகுடி
        அரிய அமுதினை அன்பர்க
        ளோடடைந் தாடுதுமே.     4.90.8
    871    மையணி கண்டன் மறைவிரி
        நாவன் மதித்துகந்த
        மெய்யணி நீற்றன் விழுமிய
        வெண்மழு வாட்படையான்
        செய்ய கமல மணங்கம
        ழுந்திரு வேதிகுடி
        ஐயனை ஆரா அமுதினை
        நாமடைந் தாடுதுமே.     4.90.9
    872    வருத்தனை வாளரக் கன்முடி
        தோளொடு பத்திறுத்த
        பொருத்தனைப் பொய்யா அருளனைப்
        பூதப் படையுடைய
        திருத்தனைத் தேவர் பிரான்றிரு
        வேதி குடியுடைய
        அருத்தனை ஆரா அமுதினை
        நாமடைந் தாடுதுமே.     4.90.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்,
    தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.91 திருவையாறு - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    873    குறுவித்த வாகுற்ற நோய்வினை
        காட்டிக் குறுவித்தநோய்
        உறுவித்த வாவுற்ற நோய்வினை
        தீர்ப்பான் உகந்தருளி
        அறிவித்த வாறடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        செறிவித்த வாதொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.1
    874    கூர்வித்த வாகுற்ற நோய்வினை
        காட்டியுங் கூர்வித்தநோய்
        ஊர்வித்த வாவுற்ற நோய்வினை
        தீர்ப்பான் உகந்தருளி
        ஆர்வித்த வாறடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        சேர்வித்த வாதொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.2
    875    தாக்கின வாசல மேவினை
        காட்டியுந் தண்டித்தநோய்
        நீக்கின வாநெடு நீரினின்
        றேற நினைந்தருளி
        ஆக்கின வாறடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        நோக்கின வாதொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.3
    876    தருக்கின நான்றக வின்றியு
        மோடச் சலமதனால்
        நெருக்கின வாநெடு நீரினின்
        றேற நினைந்தருளி
        உருக்கின வாறடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        பெருக்கின வாதொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.4
    877    இழிவித்த வாறிட்ட நோய்வினை
        காட்டி இடர்ப்படுத்துக்
        கழிவித்த வாகட்ட நோய்வினை
        தீர்ப்பான் கலந்தருளி
        அழிவித்த வாறடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        தொழுவித்த வாதொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.5
    878    இடைவித்த வாறிட்ட நோய்வினை
        காட்டி இடர்ப்படுத்து
        உடைவித்த வாறுற்ற நோய்வினை
        தீர்ப்பான் உகந்தருளி
        அடைவித்த வாறடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.6
    879    படக்கின வாபட நின்றுபன்
        னாளும் படக்கினநோய்
        அடக்கின வாறது வன்றியுந்
        தீவினை பாவமெல்லாம்
        அடக்கின வாறடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        தொடக்கின வாதொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.7
    880    மறப்பித்த வாவல்லை நோய்வினை
        காட்டி மறப்பித்தநோய்
        துறப்பித்த வாதுக்க நோய்வினை
        தீர்ப்பான் உகந்தருளி
        இறப்பித்த வாறடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.8
    881    துயக்கின வாதுக்க நோய்வினை
        காட்டித் துயக்கினநோய்
        இயக்கின வாறிட்ட நோய்வினை
        தீர்ப்பான் இசைந்தருளி
        அயக்கின வாறடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        மயக்கின வாதொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.9
    882    கறுத்துமிட் டார்கண்டங் கங்கை
        சடைமேற் கரந்தருளி
        இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை
        தன்னை இருபதுதோள்
        அறுத்துமிட் டாரடி யேனைஐ
        யாறன் அடிமைக்களே
        பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன்
        பொன்னடிக் கீழெனையே.     4.91.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.92 திருவையாறு - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    883    சிந்திப் பரியன சிந்திப்
        பவர்க்குச் சிறந்துசெந்தேன்
        முந்திப் பொழிவன முத்தி
        கொடுப்பன மொய்த்திருண்டு
        பந்தித்து நின்ற பழவினை
        தீர்ப்பன பாம்புசுற்றி
        அந்திப் பிறையணிந் தாடும்ஐ
        யாறன் அடித்தலமே.     4.92.1
    884    இழித்தன ஏழேழ் பிறப்பும்
        அறுத்தன என்மனத்தே
        பொழித்தன போரெழிற் கூற்றை
        யுதைத்தன போற்றவர்க்காய்க்
        கிழித்தன தக்கன் கிளரொளி
        வேள்வியைக் கீழமுன்சென்
        றழித்தன ஆறங்க மானஐ
        யாறன் அடித்தலமே.     4.92.2
    885    மணிநிற மொப்பன பொன்னிற
        மன்னின மின்னியல்வாய்
        கணிநிற மன்ன கயிலைப்
        பொருப்பன காதல்செய்யத்
        துணிவன சீலத்த ராகித்
        தொடர்ந்து விடாததொண்டர்க்
        கணியன சேயன தேவர்க்கை
        யாறன் அடித்தலமே.     4.92.3
    886    இருள்தரு துன்பப் படல
        மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
        பொருள்தரு கண்ணிழந் துண்பொருள்
        நாடிப் புகலிழந்த
        குருடருந் தம்மைப் பரவக்
        கொடுநர கக்குழிநின்
        றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ
        யாறன் அடித்தலமே.     4.92.4
    887    எழுவாய் இறுவாய் இலாதன
        வெங்கட் பிணிதவிர்த்து
        வழுவா மருத்துவ மாவன
        மாநர கக்குழிவாய்
        விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன
        மீட்பன மிக்கவன்போ
        டழுவார்க் கமுதங்கள் காண்கஐ
        யாறன் அடித்தலமே.     4.92.5
    888    துன்பக் கடலிடைத் தோணித்
        தொழில்பூண்ட தொண்டர்தம்மை
        இன்பக் கரைமுகந் தேற்றுந்
        திறத்தன மாற்றயலே
        பொன்பட் டொழுகப் பொருந்தொளி
        செய்யுமப் பொய்பொருந்தா
        அன்பர்க் கணியன காண்கஐ
        யாறன் அடித்தலமே.     4.92.6
    889    களித்துக் கலந்ததோர் காதற்
        கசிவொடு காவிரிவாய்க்
        குளித்துத் தொழுதுமுன் நின்றவிப்
        பத்தரைக் கோதில்செந்தேன்
        தெளித்துச் சுவையமு தூட்டி
        யமரர்கள் சூழிருப்ப
        அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ
        யாறன் அடித்தலமே.     4.92.7
    890    திருத்திக் கருத்தினைச் செவ்வே
        நிறுத்திச் செறுத்துடலை
        வருத்திக் கடிமலர் வாளெடுத்
        தோச்சி மருங்குசென்று
        விருத்திக் குழக்கவல் லோர்கட்கு
        விண்பட் டிகையிடுமால்
        அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ
        யாறன் அடித்தலமே.     4.92.8
    891    பாடும் பறண்டையு மாந்தையு
        மார்ப்பப் பரந்துபல்பேய்க்
        கூடி முழவக் குவிகவிழ்
        கொட்டக் குறுநரிகள்
        நீடுங் குழல்செய்ய வையம்
        நெளிய நிணப்பிணக்காட்
        டாடுந் திருவடி காண்கஐ
        யாறன் அடித்தலமே.     4.92.9
    892    நின்போல் அமரர்கள் நீண்முடி
        சாய்த்து நிமிர்த்துகுத்த
        பைம்போ துழக்கிப் பவளந்
        தழைப்பன பாங்கறியா
        என்போ லிகள்பறித் திட்ட
        இலையும் முகையுமெல்லாம்
        அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ
        யாறன் அடித்தலமே.     4.92.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.93 திருவையாறு - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    893    மலையார் மடந்தை மனத்தன
        வானோர் மகுடமன்னி
        நிலையா யிருப்பன நின்றோர்
        மதிப்பன நீணிலத்துப்
        புலையாடு புன்மை தவிர்ப்பன
        பொன்னுல கம்மளிக்கும்
        அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ
        யாறன் அடித்தலமே.     4.93.1
    894    பொலம்புண் டரீகப் புதுமலர்
        போல்வன போற்றியென்பார்
        புலம்பும் பொழுதும் புணர்துணை
        யாவன பொன்னனைய
        சிலம்புஞ் செறிபா டகமுஞ்
        செழுங்கிண் கிணித்திரளும்
        அலம்பும் திருவடி காண்கஐ
        யாறன் அடித்தலமே.     4.93.2
    895    உற்றா ரிலாதார்க் குறுதுணை
        யாவன ஓதிநன்னூல்
        கற்றார் பரவப் பெருமை
        யுடையன காதல்செய்ய
        கிற்பார் தமக்குக் கிளரொளி
        வானகந் தான்கொடுக்கும்
        அற்றார்க் கரும்பொருள் காண்கஐ
        யாறன் அடித்தலமே.     4.93.3
    896    வானைக் கடந்தண்டத் தப்பால்
        மதிப்பன மந்திரிப்பார்
        ஊனைக் கழித்துய்யக் கொண்டருள்
        செய்வன உத்தமர்க்கு
        ஞானச் சுடராய் நடுவே
        யுதிப்பன நங்கையஞ்ச
        ஆனை யுரித்தன காண்கஐ
        யாறன் அடித்தலமே.     4.93.4
    897    மாதர மானில மாவன
        வானவர் மாமுகட்டின்
        மீதன மென்கழல் வெங்கச்சு
        வீக்கின வெந்நமனார்
        தூதரை யோடத் துரப்பன
        துன்பறத் தொண்டுபட்டார்க்
        காதர மாவன காண்கஐ
        யாறன் அடித்தலமே.     4.93.5
    898    பேணித் தொழுமவர் பொன்னுல
        காளப் பிறங்கருளால்
        ஏணிப் படிநெறி யிட்டுக்
        கொடுத்திமை யோர்முடிமேல்
        மாணிக்க மொத்து மரகதம்
        போன்று வயிரமன்னி
        ஆணிக் கனகமு மொக்கும்ஐ
        யாறன் அடித்தலமே.     4.93.6
    899    ஓதிய ஞானமும் ஞானப்
        பொருளும் ஒலிசிறந்த
        வேதியர் வேதமும் வேள்வியு
        மாவன விண்ணுமண்ணுஞ்
        சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு
        மொப்பன தூமதியோ
        டாதியும் அந்தமு மானஐ
        யாறன் அடித்தலமே.     4.93.7
    900    சுணங்கு முகத்துத் துணைமுலைப்
        பாவை சுரும்பொடுவண்
        டணங்குங் குழலி யணியார்
        வளைக்கரங் கூப்பிநின்று
        வணங்கும் பொழுதும் வருடும்
        பொழுதும்வண் காந்தளொண்போ
        தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ
        யாறன் அடித்தலமே.     4.93.8
    901    சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்
        போதடித் தொண்டர்துன்னும்
        நிழலா வனவென்று நீங்காப்
        பிறவி நிலைகெடுத்துக்
        கழலா வினைகள் கழற்றுவ
        கால வனங்கடந்த
        அழலார் ஒளியன காண்கஐ
        யாறன் அடித்தலமே.     4.93.9
    902    வலியான் றலைபத்தும் வாய்விட்
        டலற வரையடர்த்து
        மெலியா வலியுடைக் கூற்றை
        யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
        பலிசேர் படுகடைப் பார்த்துப்பன்
        னாளும் பலர்இகழ
        அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ
        யாறன் அடித்தலமே.     4.93.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.94 திருக்கண்டியூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    903    வானவர் தானவர் வைகல்
        மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
        தானவர் மால்பிர மன்னறி
        யாத தகைமையினான்
        ஆனவ னாதிபு ராணனன்
        றோடிய பன்றியெய்த
        கானவ னைக்கண்டி யூரண்ட
        வாணர் தொழுகின்றதே.     4.94.1
    904    வான மதியமும் வாளர
        வும்புன லோடுசடைத்
        தான மதுவென வைத்துழல்
        வான்றழல் போலுருவன்
        கான மறியொன்று கையுடை
        யான்கண்டி யூரிருந்த
        ஊனமில் வேத முடையானை
        நாமடி யுள்குவதே.     4.94.2
    905    பண்டங் கறுத்ததோர் கையுடை
        யான்படைத் தான்றலையை
        உண்டங் கறுத்ததும் ஊரொடு
        நாடவை தானறியுங்
        கண்டங் கறுத்த மிடறுடை
        யான்கண்டி யூரிருந்த
        தொண்டர் பிரானைக்கண் டீரண்ட
        வாணர் தொழுகின்றதே.     4.94.3
    906    முடியின்முற் றாததொன் றில்லையெல்
        லாமுடன் தானுடையான்
        கொடியுமுற் றவ்விடை யேறியோர்
        கூற்றொரு பாலுடையான்
        கடியமுற் றவ்வினை நோய்களை
        வான்கண்டி யூரிருந்தான்
        அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண்
        டீரண்ட வானவரே.     4.94.4
    907    பற்றியோ ரானை யுரித்த
        பிரான்பவ ளத்திரள்போல்
        முற்றும் அணிந்ததோர் நீறுடை
        யான்முன்ன மேகொடுத்த
        கற்றங் குடையவன் றானறி
        யான்கண்டி யூரிருந்த
        குற்றமில் வேத முடையானை
        யாமண்டர் கூறுவதே.     4.94.5
    908    போர்ப்பனை யானை யுரித்த
        பிரான்பொறி வாயரவஞ்
        சேர்ப்பது வானத் திரைகடல்
        சூழுல கம்மிதனைக்
        காப்பது காரண மாகக்கொண்
        டான்கண்டி யூரிருந்த
        கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை
        யாமண்டர் கூறுவதே.     4.94.6
    909    அட்டது காலனை ஆய்ந்தது
        வேதமா றங்கமன்று
        சுட்டது காமனைக் கண்ணத
        னாலே தொடர்ந்தெரியக்
        கட்டவை மூன்று மெரித்த
        பிரான்கண்டி யூரிருந்த
        குட்டமுன் வேதப் படையனை
        யாமண்டர் கூறுவதே.     4.94.7
    910    அட்டும் ஒலிநீர் அணிமதி
        யும்மல ரானவெல்லாம்
        இட்டுப் பொதியுஞ் சடைமுடி
        யான்இண்டை மாலையங்கைக்
        கட்டும் அரவது தானுடை
        யான்கண்டி யூரிருந்த
        கொட்டும் பறையுடைக் கூத்தனை
        யாமண்டர் கூறுவதே.     4.94.8
    911    மாய்ந்தன தீவினை மங்கின
        நோய்கள் மறுகிவிழத்
        தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்
        லாநம்மைச் செற்றநங்கைக்
        காய்ந்த பிரான்கண்டி யூரெம்
        பிரான்அங்க மாறினையும்
        ஆய்ந்த பிரானல்ல னோவடி
        யேனையாட் கொண்டவனே.     4.94.9
    912    மண்டி மலையை யெடுத்துமத்
        தாக்கியவ் வாசுகியைத்
        தண்டி அமரர் கடைந்த
        கடல்விடங் கண்டருளி
        உண்ட பிரான்நஞ் சொளித்தபி
        ரான்அஞ்சி யோடிநண்ணக்
        கண்ட பிரானல்ல னோகண்டி
        யூரண்ட வானவனே.     4.94.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.95 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    913    ஈன்றாளு மாயெனக் கெந்தையு
        மாயுடன் தோன்றினராய்
        மூன்றா யுலகம் படைத்துகந்
        தான்மனத் துள்ளிருக்க
        ஏன்றான் இமையவர்க் கன்பன்
        திருப்பா திரிப்புலியூர்த்
        தோன்றாத் துணையா யிருந்தனன்
        றன்னடி யோங்களுக்கே.     4.95.1
    914    பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்
        சேயிந்தப் பாரைமுற்றுஞ்
        சுற்றாய் அலைகடல் மூடினுங்
        கண்டேன் புகல்நமக்கு
        உற்றான் உமையவட் கன்பன்
        திருப்பா திரிப்புலியூர்
        முற்றா முளைமதிக் கண்ணியி
        னான்றன மொய்கழலே.     4.95.2
    915    விடையான் விரும்பியென் னுள்ளத்
        திருந்தான் இனிநமக்கிங்
        கடையா அவலம் அருவினை
        சாரா நமனையஞ்சோம்
        புடையார் கமலத் தயன்போல்
        பவர்பா திரிப்புலியூர்
        உடையான் அடியார் அடியடி
        யோங்கட் கரியதுண்டே.     4.95.3
    916    மாயமெல் லாமுற்ற விட்டிருள்
        நீங்க மலைமகட்கே
        நேயம் நிலாவ இருந்தா
        னவன்றன் திருவடிக்கே
        தேயமெல் லாநின் றிறைஞ்சுந்
        திருப்பா திரிப்புலியூர்
        மேயநல் லான்மலர்ப் பாதமென்
        சிந்தையுள் நின்றனவே.     4.95.4
    917    வைத்த பொருள்நமக் காமென்று
        சொல்லி மனத்தடைத்துச்
        சித்த மொருக்கிச் சிவாய
        நமவென் றிருக்கினல்லால்
        மொய்த்த கதிர்மதி போல்வா
        ரவர்பா திரிப்புலியூர்
        அத்தன் அருள்பெற லாமோ
        அறிவிலாப் பேதைநெஞ்சே.     4.95.5
    918    கருவாய்க் கிடந்துன் கழலே
        நினையுங் கருத்துடையேன்
        உருவாய்த் தெரிந்துன்றன் நாமம்
        பயின்றேன் உனதருளாற்
        திருவாய் பொலியச் சிவாய
        நமவென்று நீறணிந்தேன்
        தருவாய் சிவகதி நீபா
        திரிப்புலி யூரரனே.     4.95.6
    919    எண்ணா தமரர் இரக்கப்
        பரவையுள் நஞ்சமுண்டாய்
        திண்ணார் அசுரர் திரிபுரந்
        தீயெழச் செற்றவனே
        பண்ணார்ந் தமைந்த பொருள்கள்
        பயில்பா திரிப்புலியூர்க்
        கண்ணார் நுதலாய் கழல்நங்
        கருத்தில் உடையனவே.     4.957
    920    புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
        வுன்னடி யென்மனத்தே
        வழுவா திருக்க வரந்தர
        வேண்டுமிவ் வையகத்தே
        தொழுவார்க் கிரங்கி யிருந்தருள்
        செய்பா திரிப்புலியூர்ச்
        செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
        மேல்வைத்த தீவண்ணனே.     4.95.8
    921    மண்பா தலம்புக்கு மால்கடல்
        மூடிமற் றேழுலகும்
        விண்பால் திசைகெட் டிருசுடர்
        வீழினும் அஞ்சல்நெஞ்சே
        திண்பால் நமக்கொன்று கண்டோ ந்
        திருப்பா திரிப்புலியூர்க்
        கண்பாவு நெற்றிக் கடவுட்
        சுடரான் கழலிணையே.     4.95.9
    922    திருந்தா அமணர்தந் தீநெறிப்
        பட்டுத் திகைத்துமுத்தி
        தருந்தா ளிணைக்கே சரணம்
        புகுந்தேன் வரையெடுத்த
        பொருந்தா அரக்கன் உடல்நெரித்
        தாய்பா திரிப்புலியூர்
        இருந்தாய் அடியேன் இனிப்பிற
        வாமல்வந் தேன்றுகொள்ளே.     4.95.10

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்,
    தேவியார் - தோகையம்பிகையம்மை.
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.96 திருவீழிமிழலை - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    923     வான்சொட்டச் சொட்டநின் றட்டும்
        வளர்மதி யோடயலே
        தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந்
        திருக்கொன்றை சென்னிவைத்தீர்
        மான்பெட்டை நோக்கி மணாளீர்
        மணிநீர் மிழலையுள்ளீர்
        நான்சட்ட வும்மை மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.1
    924    அந்தமும் ஆதியு மாகிநின்
        றீரண்டம் எண்டிசையும்
        பந்தமும் வீடும் பரப்புகின்
        றீர்பசு வேற்றுகந்தீர்
        வெந்தழல் ஓம்பு மிழலையுள்
        ளீரென்னைத் தென்றிசைக்கே
        உந்திடும் போது மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.2
    925    அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்
        அம்பர மாகிநின்றீர்
        கலைக்கன்று சேருங் கரத்தீர்
        கலைப்பொரு ளாகிநின்றீர்
        விலக்கின்றி நல்கும் மிழலையுள்
        ளீர்மெய்யிற் கையொடுகால்
        குலைக்கின்று நும்மை மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.3
    926    தீத்தொழி லான்றலை தீயிலிட்
        டுச்செய்த வேள்விசெற்றீர்
        பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை
        யீர்பிடித் துத்திரியும்
        வேய்த்தொழி லாளர் மிழலையுள்
        ளீர்விக்கி அஞ்செழுத்தும்
        ஓத்தொழிந் தும்மை மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.4
    927    தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்
        சுத்தியும் பத்திமையான்
        மேற்பட்ட அந்தணர் வீழியும்
        என்னையும் வேறுடையீர்
        நாட்பட்டு வந்து பிறந்தேன்
        இறக்க நமன்தமர்தம்
        கோட்பட்டு நும்மை மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.5
    928    கண்டியிற் பட்ட கழுத்துடை
        யீர்கரி காட்டிலிட்ட
        பண்டியிற் பட்ட பரிகலத்
        தீர்பதி வீழிகொண்டீர்
        உண்டியிற் பட்டினி நோயில்
        உறக்கத்தில் உம்மையைவர்
        கொண்டியிற் பட்டு மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.6
    929    தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்
        டீர்தூய வெள்ளெருதொன்
        றேற்றங்கொண் டீரெழில் வீழி
        மிழலை இருக்கைகொண்டீர்
        சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர்
        பாசத்தால் வீசியவெங்
        கூற்றங்கண் டும்மை மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.7
    930    சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ்
        சூடிச்சொக் கம்பயின்றீர்
        பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை
        யீர்படர் தீப்பருக
        விழிப்பட்ட காமனை வீட்டீர்
        மிழலையுள் ளீர்பிறவிச்
        சுழிப்பட்டு நும்மை மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.8
    931    பிள்ளையிற் பட்ட பிறைமுடி
        யீர்மறை யோதவல்லீர்
        வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்
        விரிநீர் மிழலையுள்ளீர்
        நள்ளையிற் பட்டைவர் நக்கரைப்
        பிக்க நமன்தமர்தங்
        கொள்ளையிற் பட்டு மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.9
    932    கறுக்கொண் டரக்கன் கயிலையைப்
        பற்றிய கையுமெய்யும்
        நெறுக்கென் றிறச்செற்ற சேவடி
        யாற்கூற்றை நீறுசெய்தீர்
        வெறிக்கொன்றை மாலை முடியீர்
        விரிநீர் மிழலையுள்ளீர்
        இறக்கின்று நும்மை மறக்கினும்
        என்னைக் குறிக்கொண்மினே.     4.96.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.97 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    933    கோவாய் முடுகி யடுதிறற்
        கூற்றங் குமைப்பதன்முன்
        பூவா ரடிச்சுவ டென்மேற்
        பொறித்துவை போகவிடின்
        மூவா முழுப்பழி மூடுங்கண்
        டாய்முழங் குந்தழற்கைத்
        தேவா திருச்சத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.     4.97.1
    934    காய்ந்தாய் அனங்கன் உடலம்
        பொடிபடக் காலனைமுன்
        பாய்ந்தாய் உயிர்செகப் பாதம்
        பணிவார்தம் பல்பிறவி
        ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற்
        கருளாயுன் அன்பர்சிந்தை
        சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.     4.97.2
    935    பொத்தார் குரம்பை புகுந்தைவர்
        நாளும் புகலழிப்ப
        மத்தார் தயிர்போல் மறுகுமென்
        சிந்தை மறுக்கொழிவி
        அத்தா அடியேன் அடைக்கலங்
        கண்டாய் அமரர்கள்தஞ்
        சித்தா திருச்சத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.     4.97.3
    936    நில்லாக் குரம்பை நிலையாக்
        கருதியிந் நீணிலத்தொன்
        றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு
        வேனைவந் தாண்டுகொண்டாய்
        வில்லேர் புருவத் துமையாள்
        கணவா விடிற்கெடுவேன்
        செல்வா திருச்சத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.     4.97.4
    937    கருவுற் றிருந்துன் கழலே
        நினைந்தேன் கருப்புவியிற்
        தெருவிற் புகுந்தேன் திகைத்தடி
        யேனைத் திகைப்பொழிவி
        உருவிற் றிகழும் உமையாள்
        கணவா விடிற்கெடுவேன்
        திருவிற் பொலிசத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.     4.97.5
    938    வெம்மை நமன்தமர் மிக்கு
        விரவி விழுப்பதன்முன்
        இம்மையுன் தாளென்றன் நெஞ்சத்
        தெழுதிவை ஈங்கிகழில்
        அம்மை அடியேற் கருளுதி
        யென்பதிங் காரறிவார்
        செம்மை தருசத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.     4.97.6
    939    விட்டார் புரங்கள் ஒருநொடி
        வேவவோர் வெங்கணையாற்
        சுட்டாயென் பாசத் தொடர்பறுத்
        தாண்டுகொள் தும்பிபம்பும்
        மட்டார் குழலி மலைமகள்
        பூசை மகிழ்ந்தருளுஞ்
        சிட்டா திருச்சத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.     4.97.7
    940    இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்
        டிமையோர் பொறையிரப்ப
        நிகழ்ந்திட அன்றே விசயமுங்
        கொண்டது நீலகண்டா
        புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்
        தீரப் புரிந்துநல்காய்
        திகழ்ந்த திருச்சத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.     4.97.8
    941    தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்
        துன்றன் சரண்புகுந்தேன்
        எக்காதல் எப்பயன் உன்றிற
        மல்லால் எனக்குளதே
        மிக்கார் திலையுள் விருப்பா
        மிகவட மேருவென்னுந்
        திக்கா திருச்சத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.    4.97.9
    942    பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்
        புற்றவன் பொன்முடிதோள்
        இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்
        டலற இரங்கிஒள்வாள்
        குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்
        குற்றக் கொடுவினைநோய்
        செறுத்தாய் திருச்சத்தி முற்றத்
        துறையுஞ் சிவக்கொழுந்தே.     4.97.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.98 திருநல்லூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    943    அட்டுமின் இல்பலி யென்றென்
        றகங்கடை தோறும்வந்து
        மட்டவி ழுங்குழ லார்வளை
        கொள்ளும் வகையென்கொலோ
        கொட்டிய பாணி யெடுத்திட்ட
        பாதமுங் கோளரவும்
        நட்டநின் றாடிய நாதர்நல்
        லூரிடங் கொண்டவரே.     4.98.1
    944    பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை
        பெய்பலிக் கென்றுழல்வார்
        நண்ணிட்டு வந்து மனைபுகுந்
        தாரும்நல் லூரகத்தே
        பண்ணிட்ட பாடலர் ஆடல
        ராய்ப்பற்றி நோக்கிநின்று
        கண்ணிட்டுப் போயிற்றுக் காரண
        முண்டு கறைக்கண்டரே.     4.98.2
    945    படவேர் அரவல்ன்ற் பாவைநல்
        லீர்பக லேயொருவர்
        இடுவார் இடைப்பலி கொள்பவர்
        போலவந் தில்புகுந்து
        நடவார் அடிகள் நடம்பயின்
        றாடிய கூத்தர்கொலோ
        வடபாற் கயிலையுந் தென்பால்நல்
        லூருந்தம் வாழ்பதியே.     4.98.3
    946    செஞ்சுடர்ச் சோதிப் பவளத்
        திரள்திகழ் முத்தனைய
        நஞ்சணி கண்டன்நல் லூருறை
        நம்பனை நானொருகாற்
        துஞ்சிடைக் கண்டு கனவின்
        றலைத்தொழு தேற்கவன்றான்
        நெஞ்சிடை நின்றக லான்பல
        காலமும் நின்றனனே.     4.98.4
    947    வெண்மதி சூடி விளங்கநின்
        றானைவிண் ணோர்கள்தொழ
        நண்ணில யத்தொடு பாட
        லறாதநல் லூரகத்தே
        திண்ணிலை யங்கொடு நின்றான்
        திரிபுர மூன்றெரித்தான்
        கண்ணுளும் நெஞ்சத் தகத்தும்
        உளகழற் சேவடியே.     4.98.5
    948    தேற்றப் படத்திரு நல்லூ
        ரகத்தே சிவனிருந்தாற்
        தோற்றப் படச்சென்று கண்டுகொள்
        ளார்தொண்டர் துன்மதியால்
        ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற்
        றேடிய ஆதரைப்போற்
        காற்றிற் கெடுத்துல கெல்லாந்
        திரிதர்வர் காண்பதற்கே.     4.98.6
    949    நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ்
        சூழ்ந்த நல்லூரகத்தே
        கீட்கொண்ட கோவணங் காவென்று
        சொல்லிக் கிறிபடத்தான்
        வாட்கொண்ட நோக்கி மனைவியொ
        டுமங்கோர் வாணிகனை
        ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன்
        றோவிவ் வகலிடமே.     4.98.7
    950    அறைமல்கு பைங்கழ லார்ப்பநின்
        றானணி யார்சடைமேல்
        நறைமல்கு கொன்றையந் தாருடை
        யானும்நல் லூரகத்தே
        பறைமல்கு பாடலன் ஆடல
        னாகிப் பரிசழித்தான்
        பிறைமல்கு செஞ்சடை தாழநின்
        றாடிய பிஞ்ஞகனே.    4.98.8
    951    மன்னிய மாமறை யோர்மகிழ்ந்
        தேத்த மருவியெங்குந்
        துன்னிய தொண்டர்கள் இன்னிசை
        பாடித் தொழுதுநல்லூர்க்
        கன்னியர் தாமுங் கனவிடை
        யுன்னிய காதலரை
        அன்னியர் அற்றவர் அங்கண
        னேயருள் நல்கென்பரே.     4.98.9
    952    திருவமர் தாமரை சீர்வளர்
        செங்கழு நீர்கொள்நெய்தல்
        குருவமர் கோங்கங் குராமகிழ்
        சண்பகங் கொன்றைவன்னி
        மருவமர் நீள்கொடி மாட
        மலிமறை யோர்கள்நல்லூர்
        உருவமர் பாகத் துமையவள்
        பாகனை உள்குதுமே.     4.98.10
    953    செல்லேர் கொடியன் சிவன்பெருங்
        கோயில் சிவபுரமும்
        வல்லேன் புகவும் மதில்சூழ்
        இலங்கையர் காவலனைக்
        கல்லார் முடியொடு தோளிறச்
        செற்ற கழலடியான்
        நல்லூ ரிருந்த பிரான்அல்ல
        னோநம்மை ஆள்பவனே.     4.98.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.99 திருவையாறு - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    954    அந்திவட் டத்திங்கட் கண்ணியன்
        ஐயா றமர்ந்துவந்தென்
        புந்திவட் டத்திடைப் புக்குநின்
        றானையும் பொய்யென்பனோ
        சிந்திவட் டச்சடைக் கற்றை
        யலம்பச் சிறிதலர்ந்த
        நந்திவட் டத்தொடு கொன்றை
        வளாவிய நம்பனையே.     4.99.1
    955    பாடகக் கால்கழற் கால்பரி
        திக்கதி ருக்கவந்தி
        நாடகக் கால்நங்கை முன்செங்கண்
        ஏனத்தின் பின்னடந்த
        காடகக் கால்கணங் கைதொழுங்
        காலெங்க ணாய்நின்றகால்
        ஆடகக் காலரி மான்றேர்
        வலவன்ஐ யாற்றனவே.     4.99.2

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.100 திருவேகம்பம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    956    ஓதுவித் தாய்முன் அறவுரை
        காட்டி அமணரொடே
        காதுவித் தாய்கட்ட நோய்பிணி
        தீர்த்தாய் கலந்தருளிப்
        போதுவித் தாய்நின் பணிபிழைக்
        கிற்புளி யம்வளாரால்
        மோதுவிப் பாய்உகப் பாய்முனி
        வாய்கச்சி யேகம்பனே.     4.100.1
    957    எத்தைக்கொண் டெத்தகை ஏழை
        அமணொ டிசைவித்தெனைக்
        கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
        வித்தென்னைக் கோகுசெய்தாய்
        முத்தின் திரளும் பளிங்கினிற்
        சோதியும் மொய்பவளத்
        தொத்தினை யேய்க்கும் படியாய்
        பொழிற்கச்சி யேகம்பனே.     4.100.2
    958    மெய்யம்பு கோத்த விசயனோ
        டன்றொரு வேடுவனாய்ப்
        பொய்யம்பெய் தாவ மருளிச்செய்
        தாய்புர மூன்றெரியக்
        கையம்பெய் தாய்நுன் கழலடி
        போற்றாக் கயவர்நெஞ்சிற்
        குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
        சூழ்கச்சி யேகம்பனே.     4.100.3
    959    குறிக்கொண் டிருந்துசெந் தாமரை
        ஆயிரம் வைகல்வைகல்
        நெறிப்பட இண்டை புனைகின்ற
        மாலை நிறையழிப்பான்
        கறைக்கண்ட நீயொரு பூக்குறை
        வித்துக்கண் சூல்விப்பதே
        பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
        காஞ்சியெம் பிஞ்ஞகனே.     4.100.4
    960    உரைக்குங் கழிந்திங் குணர்வரி
        யான்உள்கு வார்வினையைக்
        கரைக்கு மெனக்கை தொழுவதல்
        லாற்கதி ரோர்களெல்லாம்
        விரைக்கொண் மலரவன் மால்எண்
        வசுக்கள்ஏ காதசர்கள்
        இரைக்கும் அமிர்தர்க் கறியவொண்
        ணானெங்கள் ஏகம்பனே.     4.100.5
    961    கருவுற்ற நாள்முத லாகவுன்
        பாதமே காண்பதற்கு
        உருகிற்றென் னுள்ளமும் நானுங்
        கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
        திருவொற்றி யூரா திருவால
        வாயா திருவாரூரா
        ஒருபற் றிலாமையுங் கண்டிரங்
        காய்கச்சி யேகம்பனே.     4.100.6
    962    அரிஅயன் இந்திரன் சந்திரா
        தித்தர் அமரரெல்லாம்
        உரியநின் கொற்றக் கடைத்தலை
        யார்உணங் காக்கிடந்தார்
        புரிதரு புன்சடைப் போக
        முனிவர் புலம்புகின்றார்
        எரிதரு செஞ்சடை ஏகம்ப
        என்னோ திருக்குறிப்பே.     4.100.7
    963    பாம்பரைச் சேர்த்திப் படருஞ்
        சடைமுடிப் பால்வண்ணனே
        கூம்பலைச் செய்த கரதலத்
        தன்பர்கள் கூடிப்பன்னாள்
        சாம்பலைப் பூசித் தரையிற்
        புரண்டுநின் றாள்சரணென்
        றேம்பலிப் பார்கட் கிரங்குகண்
        டாய்கச்சி யேகம்பனே.     4.100.8
    964    ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு
        மானினி யல்லமென்னிற்
        சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
        லாந்தனி யேனென்றென்னை
        ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத்
        தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
        சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
        மேய சுடர்வண்ணனே.     4.100.9
    965    உந்திநின் றாருன்றன் ஓலக்கச்
        சூளைகள் வாய்தல்பற்றித்
        துன்றிநின் றார்தொல்லை வானவ
        ரீட்டம் பணியறிவான்
        வந்துநின் றாரய னுந்திரு
        மாலும் மதிற்கச்சியாய்
        இந்தநின் றோமினி எங்ஙன
        மோவந் திறைஞ்சுவதே.     4.100.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.101 திருவின்னம்பர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    966    மன்னு மலைமகள் கையால்
        வருடின மாமறைகள்
        சொன்ன துறைதொறுந் தூப்பொரு
        ளாயின தூக்கமலத்
        தன்ன வடிவின அன்புடைத்
        தொண்டர்க் கமுதருத்தி
        இன்னல் களைவன இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.1
    967    பைதற் பிணக்குழைக் காளிவெங்
        கோபம்பங் கப்படுப்பான்
        செய்தற் கரிய திருநடஞ்
        செய்தன சீர்மறையோன்
        உய்தற் பொருட்டுவெங் கூற்றை
        யுதைத்தன உம்பர்க்கெல்லாம்
        எய்தற் கரியன இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.2
    968    சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை
        சூடின தூமலரால்
        வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின
        மன்னு மறைகள்தம்மிற்
        பிணங்கிநின் றின்னன வென்றறி
        யாதன பேய்க்கணத்தோ
        டிணங்கிநின் றாடின இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.3
    969    ஆறொன் றியசம யங்களின்
        அவ்வவர்க் கப்பொருள்கள்
        வேறொன் றிலாதன விண்ணோர்
        மதிப்பன மிக்குவமன்
        மாறொன் றிலாதன மண்ணொடு
        விண்ணகம் மாய்ந்திடினும்
        ஈறொன் றிலாதன இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.4
    970    அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி
        னாலட லங்கியின்வாய்க்
        கரக்கமுன் வைதிகத் தேர்மிசை
        நின்றன கட்டுருவம்
        பரக்கவெங் கானிடை வேடுரு
        வாயின பல்பதிதோ
        றிரக்க நடந்தன இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.5
    971    கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன்
        தேடின கேடுபடா
        ஆண்டும் பலபல வூழியு
        மாயின ஆரணத்தின்
        வேண்டும் பொருள்கள் விளங்கநின்
        றாடின மேவுசிலம்
        பீண்டும் கழலின இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.6
    972    போற்றுந் தகையன பொல்லா
        முயலகன் கோபப்புன்மை
        ஆற்றுந் தகையன ஆறு
        சமயத் தவரவரைத்
        தேற்றுந் தகையன தேறிய
        தொண்டரைச் செந்நெறிக்கே
        ஏற்றுந் தகையன இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.7
    973    பயம்புன்மை சேர்தரு பாவந்
        தவிர்ப்பன பார்ப்பதிதன்
        குயம்பொன்மை மாமல ராகக்
        குலாவின கூடவொண்ணாச்
        சயம்புவென் றேதகு தாணுவென்
        றேசதுர் வேதங்கள்நின்
        றியம்புங் கழலின இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.8
    974    அயன்நெடு மால்இந் திரன்சந்தி
        ராதித்தர் அமரரெல்லாஞ்
        சயசய என்றுமுப் போதும்
        பணிவன தண்கடல்சூழ்
        வியனில முற்றுக்கும் விண்ணுக்கும்
        நாகர் வியன்நகர்க்கும்
        இயபர மாவன இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.9
    975    தருக்கிய தக்கன்றன் வேள்வி
        தகர்த்தன தாமரைப்போ
        துருக்கிய செம்பொன் உவமன்
        இலாதன வொண்கயிலை
        நெருக்கிய வாளரக் கன்றலை
        பத்தும் நெரித்தவன்றன்
        இருக்கியல் பாயின இன்னம்ப
        ரான்றன் இணையடியே.     4.101.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.102 திருவாரூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    976    குலம்பலம் பாவரு குண்டர்முன்
        னேநமக் குண்டுகொலோ
        அலம்பலம் பாவரு தண்புனல்
        ஆரூர் அவிர்சடையான்
        சிலம்பலம் பாவரு சேவடி
        யான்றிரு மூலத்தானம்
        புலம்பலம் பாவரு தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.1
    977    மற்றிட மின்றி மனைதுறந்
        தல்லுணா வல்லமணர்
        சொற்றிட மென்று துரிசுபட்
        டேனுக்கு முண்டுகொலோ
        விற்றிடம் வாங்கி விசயனோ
        டன்றொரு வேடுவனாய்ப்
        புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.2
    978    ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்
        முன்னமக் குண்டுகொலோ
        செருவடி வெஞ்சிலை யாற்புரம்
        அட்டவன் சென்றடையாத்
        திருவுடை யான்றிரு வாரூர்த்
        திருமூலத் தானன்செங்கட்
        பொருவிடை யானடித் தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.3
    979    மாசினை யேறிய மேனியர்
        வன்கண்ணர் மொண்ணரைவிட்
        டீசனை யேநினைந் தேசறு
        வேனுக்கும் உண்டுகொலோ
        தேசனை ஆரூர்த் திருமூலத்
        தானனைச் சிந்தைசெய்து
        பூசனைப் பூசரர் தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.4
    980    அருந்தும் பொழுதுரை யாடா
        அமணர் திறமகன்று
        வருந்தி நினைந்தர னேயென்று
        வாழ்த்துவேற் குண்டுகொலோ
        திருந்திய மாமதில் ஆரூர்த்
        திருமூலத் தானனுக்குப்
        பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.5
    981    வீங்கிய தோள்களுந் தாள்களு
        மாய்நின்று வெற்றரையே
        மூங்கைகள் போலுண்ணு மூடர்முன்
        னேநமக் குண்டுகொலோ
        தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த்
        திருமூலத் தானன்செய்ய
        பூங்கழ லானடித் தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.6
    982    பண்ணிய சாத்திரப் பேய்கள்
        பறிதலைக் குண்டரைவிட்
        டெண்ணிற் புகழீசன் றன்னருள்
        பெற்றேற்கு முண்டுகொலோ
        திண்ணிய மாமதில் ஆரூர்த்
        திருமூலத் தானனெங்கள்
        புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.7
    983    கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக்
        கச்சுகம் என்னுங்குண்டர்
        உரைப்பன கேளாதிங் குய்யப்போந்
        தேனுக்கும் உண்டுகொலோ
        திருப்பொலி ஆரூர்த் திருமூலத்
        தானன் திருக்கயிலைப்
        பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.8
    984    கையி லிடுசோறு நின்றுண்ணுங்
        காதல் அமணரைவிட்
        டுய்யும் நெறிகண் டிங்குய்யப்
        போந்தேனுக்கு முண்டுகொலோ
        ஐயன் அணிவயல் ஆரூர்த்
        திருமூலத் தானனுக்குப்
        பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.9
    985    குற்ற முடைய அமணர்
        திறமது கையகன்றிட்
        டுற்ற கருமஞ்செய் துய்யப்போந்
        தேனுக்கும் உண்டுகொலோ
        மற்பொலி தோளான் இராவணன்
        றன்வலி வாட்டுவித்த
        பொற்கழ லானடித் தொண்டர்க்குத்
        தொண்டராம் புண்ணியமே.     4.102.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.103 திருவாரூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    986    வேம்பினைப் பேசி விடக்கினை
        யோம்பி வினைபெருக்கித்
        தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந்
        துணையென் றிருத்திர்தொண்டீர்
        ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்
        அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
        சாம்பலைப் பூசிச் சலமின்றித்
        தொண்டுபட் டுய்ம்மின்களே.     4.103.1
    987    ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன்
        ஆரூர் அகத்தடக்கிப்
        பாரூர் பரிப்பத்தம் பங்குனி
        உத்திரம் பாற்படுத்தா
        னாரூர் நறுமலர் நாதன்
        அடித்தொண்டன் நம்பிநந்தி
        நீரால் திருவிளக் கிட்டமை
        நீணா டறியுமன்றே.     4.103.2
    988    பூம்படி மக்கலம் பொற்படி
        மக்கலம் என்றிவற்றால்
        ஆம்படி மக்கல மாகிலும்
        ஆரூர் இனிதமர்ந்தார்
        தாம்படி மக்கலம் வேண்டுவ
        ரேல்தமிழ் மாலைகளால்
        நாம்படி மக்கலஞ் செய்து
        தொழுதுய் மடநெஞ்சமே.     4.103.3
    989    துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத்
        துளங்கா மதியணிந்து
        முடித்தொண்ட ராகி முனிவர்
        பணிசெய்வ தேயுமன்றிப்
        பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர்
        பாதம் பொறுத்தபொற்பால்
        அடித்தொண்டன் நந்தியென் பானுளன்
        ஆரூர் அமுதினுக்கே.     4.103.4
    990    கரும்பு பிடித்தவர் காயப்பட்
        டாரங்கோர் கோடலியால்
        இரும்பு பிடித்தவர் இன்புறப்
        பட்டார் இவர்கள்நிற்க
        அரும்பவிழ் தண்பொழில் சூழணி
        ஆரூர் அமர்ந்தபெம்மான்
        விரும்பு மனத்தினை யாதொன்று
        நானுன்னை வேண்டுவனே.     4.103.5
    991    கொடிகொள் விதானங் கவரி
        பறைசங்கங் கைவிளக்கோ
        டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்
        எய்தியும் ஊனமில்லா
        அடிகளும் ஆரூர் அகத்தின
        ராயினும் அந்தவளப்
        பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு
        நந்தி புறப்படிலே.     4.103.6
        இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.     4.103.7-8
    992    சங்கொலிப் பித்திடு மின்சிறு
        காலைத் தடவழலில்
        குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங்
        காட்டி இருபதுதோள்
        அங்குலம் வைத்தவன் செங்குரு
        திப்புன லோடஅஞ்ஞான்
        றங்குலி வைத்தான் அடித்தா
        மரையென்னை ஆண்டனவே.     4.103.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.104 திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    993    வடிவுடை மாமலை மங்கைபங்
        காகங்கை வார்சடையாய்
        கடிகமழ் சோலை சுலவு
        கடல்நாகைக் காரோணனே
        பிடிமத வாரணம் பேணுந்
        துரகநிற் கப்பெரிய
        இடிகுரல் வெள்ளெரு தேறுமி
        தென்னைகொல் எம்மிறையே.     4.104.1
    994    கற்றார் பயில்கடல் நாகைக்கா
        ரோணத்தெங் கண்ணுதலே
        விற்றாங் கியகரம் வேல்நெடுங்
        கண்ணி வியன்கரமே
        நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித்
        தகர நின்கரமே
        செற்றார் புரஞ்செற்ற சேவக
        மென்னைகொல் செப்புமினே.     4.104.2
    995    தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
        வேள்வி தொழிற்படுத்த
        காமன் பொடிபடக் காய்ந்த
        கடல்நாகைக் காரோணநின்
        நாமம் பரவி நமச்சிவா
        யவென்னும் அஞ்செழுத்துஞ்
        சாமன் றுரைக்கத் தருதிகண்
        டாயெங்கள் சங்கரனே.     4.104.3
    996    பழிவழி யோடிய பாவிப்
        பறிதலைக் குண்டர்தங்கள்
        மொழிவழி யோடி முடிவேன்
        முடியாமைக் காத்துக்கொண்டாய்
        கழிவழி யோதம் உலவு
        கடல்நாகைக் காரோணவென்
        வழிவழி யாளாகும் வண்ணம்
        அருளெங்கள் வானவனே.     4.104.4
    997    செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை
        வெண்ணகைத் தேமொழியார்
        வந்து வலஞ்செய்து மாநட
        மாட மலிந்தசெல்வக்
        கந்த மலிபொழில் சூழ்கடல்
        நாகைக்கா ரோணமென்றுஞ்
        சிந்தைசெய் வாரைப் பிரியா
        திருக்குந் திருமங்கையே.     4.104.5
    998    பனைபுரை கைம்மத யானை
        யுரித்த பரஞ்சுடரே
        கனைகடல் சூழ்தரு நாகைக்கா
        ரோணத்தெங் கண்ணுதலே
        மனைதுறந் தல்லுணா வல்லமண்
        குண்டர் மயக்கைநீக்கி
        எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி
        யான்செயும் இச்சைகளே.     4.104.6
    999    சீர்மலி செல்வம் பெரிதுடை
        யசெம்பொன் மாமலையே
        கார்மலி சோலை சுலவு
        கடல்நாகைக் காரோணனே
        வார்மலி மென்முலை யார்பலி
        வந்திடச் சென்றிரந்து
        ஊர்மலி பிச்சைகொண் டுண்பது
        மாதிமை யோவுரையே.     4.104.7
    1000    வங்கம் மலிகடல் நாகைக்கா
        ரோணத்தெம் வானவனே
        எங்கள் பெருமானோர் விண்ணப்பம்
        உண்டது கேட்டருளீர்
        கங்கை சடையுட் கரந்தாயக்
        கள்ளத்தை மெள்ளவுமை
        நங்கை அறியிற்பொல் லாதுகண்டா
        யெங்கள் நாயகனே.     4.104.8
        இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.     4.104.9
    1001    கருந்தடங் கண்ணியுந் தானுங்
        கடல்நாகைக் காரோணத்தான்
        இருந்த திருமலை யென்றிறைஞ்
        சாதன் றெடுக்கலுற்றான்
        பெருந்தலை பத்தும் இருபது
        தோளும் பிதிர்ந்தலற
        இருந்தரு ளிச்செய்த தேமற்றுச்
        செய்திலன் எம்மிறையே.     4.104.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.105 திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1002    மாசிலொள் வாள்போல் மறியும்
        மணிநீர்த் திரைத்தொகுதி
        ஊசலை யாடியங் கொண்சிறை
        அன்னம் உறங்கலுற்றால்
        பாசறை நீலம் பருகிய
        வண்டுபண் பாடல்கண்டு
        வீசுங் கெடில வடகரைத்
        தேயெந்தை வீரட்டமே.     4.105.1
    1003    பைங்காற் றவளை பறைகொட்டப்
        பாசிலை நீர்ப்படுகர்
        அங்காற் குவளைமேல் ஆவி
        உயிர்ப்ப அருகுலவுஞ்
        செங்காற் குருகிவை சேருஞ்
        செறிகெடி லக்கரைத்தே
        வெங்காற் குருசிலை வீரன்
        அருள்வைத்த வீரட்டமே.     4.105.2
    1004    அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ்
        செந்துவர் வாயிளையார்
        வெம்முலைச் சாந்தம் விலைபெறு
        மாலை யெடுத்தவர்கள்
        தம்மருங் கிற்கிரங் கார்தடந்
        தோள்மெலி யக்குடைவார்
        விம்மு புனற்கெடி லக்கரைத்
        தேயெந்தை வீரட்டமே.     4.105.3
    1005    மீனுடைத் தண்புனல் வீரட்ட
        ரேநும்மை வேண்டுகின்ற
        தியானுடைச் சில்குறை ஒன்றுள
        தால்நறுந் தண்ணெருக்கின்
        தேனுடைக் கொன்றைச் சடையுடைக்
        கங்கைத் திரைதவழுங்
        கூனுடைத் திங்கட் குழவியெப்
        போதுங் குறிக்கொண்மினே.     4.105.4
    1006    ஆரட்ட தேனும் இரந்துண்
        டகமக வன்றிரிந்து
        வேரட்ட நிற்பித் திடுகின்ற
        தால்விரி நீர்ப்பரவைச்
        சூரட்ட வேலவன் தாதையைச்
        சூழ்வய லாரதிகை
        வீரட்டத் தானை விரும்பா
        வரும்பாவ வேதனையே.     4.105.5
    1007    படர்பொற் சடையும் பகுவாய்
        அரவும் பனிமதியுஞ்
        சுடலைப் பொடியு மெல்லா
        முளவேயவர் தூயதெண்ணீர்க்
        கெடிலக் கரைத்திரு வீரட்ட
        ராவர்கெட் டேனடைந்தார்
        நடலைக்கு நற்றுணை யாகுங்கண்
        டீரவர் நாமங்களே.     4.105.6
    1008    காளங் கடந்ததோர் கண்டத்த
        ராகிக் கண்ணார்கெடில
        நாளங் கடிக்கோர் நகரமு
        மாதிற்கு நன்கிசைந்த
        தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு
        மியாழ்கொண்டுந் தாமங்ஙனே
        வேடங்கள் கொண்டும் விசும்புசெல்
        வாரவர் வீரட்டரே.     4.105.7
        இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின.     4.105.8-10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.106 திருப்புகலூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1009    தன்னைச் சரணென்று தாளடைந்
        தேன்றன் அடியடையப்
        புன்னைப் பொழிற்புக லூரண்ணல்
        செய்வன கேண்மின்களோ
        என்னைப் பிறப்பறுத் தென்வினை
        கட்டறுத் தேழ்நரகத்
        தென்னைக் கிடக்கலொட் டான்சிவ
        லோகத் திருத்திடுமே.     4.106.1
    1010    பொன்னை வகுத்தன்ன மேனிய
        னேபுணர் மென்முலையாள்
        தன்னை வகுத்தன்ன பாகத்தனே
        தமியேற் கிரங்காய்
        புன்னை மலர்த்தலை வண்டுறங்
        கும்புக லூரரசே
        என்னை வகுத்திலை யேலிடும்
        பைக்கிடம் யாதுசொல்லே.     4.106.2
        இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     4.106.3
    1011    பொன்னள வார்சடைக் கொன்றையி
        னாய்புக லூர்க்கரசே
        மன்னுள தேவர்கள் தேடு
        மருந்தே வலஞ்சுழியாய்
        என்னள வேயுனக் காட்பட்
        டிடைக்கலத் தேகிடப்பார்
        உன்னள வேயெனக் கொன்றுமி
        ரங்காத உத்தமனே.     4.106.4
        இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     4.106.5-9
    1012    ஓணப் பிரானும் ஒளிர்மா
        மலர்மிசை உத்தமனுங்
        காணப் பராவியுங் காண்கின்
        றிலர்கர நாலைந்துடைத்
        தோணற் பிரானை வலிதொலைத்
        தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்
        கோணப் பிரானைக் குறுகக்
        குறுகா கொடுவினையே.     4.106.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.107 திருக்கழிப்பாலை - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1013    நெய்தற் குருகுதன் பிள்ளையென்
        றெண்ணி நெருங்கிச்சென்று
        கைதை மடற்புல்கு தென்கழிப்
        பாலை யதனுறைவாய்
        பைதற் பிறையொடு பாம்புடன்
        வைத்த பரிசறியோம்
        எய்தப் பெறின்இரங் காதுகண்
        டாய்நம் மிறையவனே.     4.107.1
    1014    பருமா மணியும் பவளமுத்
        தும்பரந் துந்திவரை
        பொருமால் கரைமேற் றிரைகொணர்ந்
        தெற்றப் பொலிந்திலங்குங்
        கருமா மிடறுடைக் கண்டனெம்
        மான்கழிப் பாலையெந்தை
        பெருமா னவனென்னை யாளுடை
        யானிப் பெருநிலத்தே.     4.107.2
    1015    நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற்
        றிங்கு நமன்தமராற்
        கோட்பட் டொழிவதன் முந்துற
        வேகுளி ரார்தடத்துத்
        தாட்பட்ட தாமரைப் பொய்கையந்
        தண்கழிப் பாலையண்ணற்
        காட்பட் டொழிந்தவன் றேவல்ல
        மாயிவ் வகலிடத்தே.     4.107.3
        இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.     4.107.4-10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.108 திருக்கடவூர் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1016    மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த
        மாணிமார்க் கண்டேயற்காய்
        இருட்டிய மேனி வளைவாள்
        எயிற்றெரி போலுங்குஞ்சிச்
        சுருட்டிய நாவில்வெங் கூற்றம்
        பதைப்ப வுதைத்துங்ஙனே
        உருட்டிய சேவடி யான்கட
        வூருறை உத்தமனே.     4.108.1
    1017    பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்
        தோதிப் பரிவினொடும்
        இதத்தெழு மாணிதன் இன்னுயிர்
        உண்ண வெகுண்டடர்த்த
        கதத்தெழு காலனைக் கண்குரு
        திப்புன லாறொழுக
        உதைத்தெழு சேவடி யான்கட
        வூருறை உத்தமனே.     4.108.2
    1018    கரப்புறு சிந்தையர் காண்டற்
        கரியவன் காமனையும்
        நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்
        கங்கையும் பொங்கரவும்
        பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்
        காலனைப் பண்டொருகால்
        உரப்பிய சேவடி யான்கட
        வூருறை உத்தமனே.     4.108.3
    1019    மறித்திகழ் கையினன் வானவர்
        கோனை மனமகிழ்ந்து
        குறித்தெழு மாணிதன் ஆருயிர்
        கொள்வான் கொதித்தசிந்தைக்
        கறுத்தெழு மூவிலை வேலுடைக்
        காலனைத் தானலற
        உறுக்கிய சேவடி யான்கட
        வூருறை உத்தமனே.     4.108.4
    1020    குழைத்திகழ் காதினன் வானவர்
        கோனைக் குளிர்ந்தெழுந்து
        பழக்கமோ டர்ச்சித்த மாணிதன்
        ஆருயிர் கொள்ளவந்த
        தழற்பொதி மூவிலை வேலுடைக்
        காலனைத் தானலற
        உழக்கிய சேவடி யான்கட
        வூருறை உத்தமனே.     4.108.5
    1021    பாலனுக் காயன்று பாற்கடல்
        ஈந்து பணைத்தெழுந்த
        ஆலினிற் கீழிருந் தாரண
        மோதி அருமுனிக்காய்ச்
        சூலமும் பாசமுங் கொண்டு
        தொடர்ந்தடர்ந் தோடிவந்த
        காலனைக் காய்ந்த பிரான்கட
        வூருறை உத்தமனே.     4.108.6
    1022    படர்சடைக் கொன்றையும் பன்னக
        மாலை பணிகயிறா
        உடைதலைக் கோத்துழல் மேனியன்
        உண்பலிக் கென்றுழல்வோன்
        சுடர்பொதி மூவிலை வேலுடைக்
        காலனைத் துண்டமதா
        உடறிய சேவடி யான்கட
        வூருறை உத்தமனே.     4.108.7
    1023    வெண்டலை மாலையுங் கங்கைக்
        கரோடி விரிசடைமேற்
        பெண்டனி நாயகன் பேயுகந்
        தாடும் பெருந்தகையான்
        கண்டனி நெற்றியன் காலனைக்
        காய்ந்து கடலின்விடம்
        உண்டருள் செய்தபி ரான்கட
        வூருறை உத்தமனே.     4.108.8
    1024    கேழல தாகிக் கிளறிய
        கேசவன் காண்பரிதாய்
        வாழிநன் மாமலர்க் கண்ணிடந்
        திட்டவம் மாலவற்கன்
        றாழியும் ஈந்து அடுதிறற்
        காலனை அன்றடர்த்து
        ஊழியு மாய பிரான்கட
        வூருறை உத்தமனே.     4.108.9
    1025    தேன்றிகழ் கொன்றையுங் கூவிள
        மாலை திருமுடிமேல்
        ஆன்றிகழ் ஐந்துகந் தாடும்
        பிரான்மலை ஆர்த்தெடுத்த
        கூன்றிகழ் வாளரக் கன்முடி
        பத்துங் குலைந்துவிழ
        ஊன்றிய சேவடி யான்கட
        வூருறை உத்தமனே.     4.108.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.109 திருமாற்பேறு - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

        முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின     4.109.1-2
    1026    மாணிக் குயிர்பெறக் கூற்றை
        யுதைத்தன மாவலிபால்
        காணிக் கிரந்தவன் காண்டற்
        கரியன கண்டதொண்டர்
        பேணிக் கிடந்து பரவப்
        படுவன பேர்த்துமஃதே
        மாணிக்க மாவன மாற்பே
        றுடையான் மலரடியே.     4.109.3
    1027    கருடத் தனிப்பாகன் காண்டற்
        கரியன காதல்செய்யிற்
        குருடர்க்கு முன்னே குடிகொண்
        டிருப்பன கோலமல்கு
        செருடக் கடிமலர்ச் செல்விதன்
        செங்கம லக்கரத்தால்
        வருடச் சிவப்பன மாற்பே
        றுடையான் மலரடியே.     4.109.4
        இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.     4.109.5-10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.110 திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1028    பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
        விண்ணப்பம் போற்றிசெய்யும்
        என்னாவி காப்பதற் கிச்சையுண்
        டேலிருங் கூற்றகல
        மின்னாரு மூவிலைச் சூலமென்
        மேற்பொறி மேவுகொண்டல்
        துன்னார் கடந்தையுள் தூங்கானை
        மாடச் சுடர்க்கொழுந்தே.     4.110.1
    1029    ஆவா சிறுதொண்ட னென்நினைந்
        தானென் றரும்பிணிநோய்
        காவா தொழியிற் கலக்குமுன்
        மேற்பழி காதல்செய்வார்
        தேவா திருவடி நீறென்னைப்
        பூசுசெந் தாமரையின்
        பூவார் கடந்தையுள் தூங்கானை
        மாடத்தெம் புண்ணியனே.     4.110.2
        இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் செய்யுட்கள்
    சிதைந்து போயின.     4.110.3-9
    1030    கடவுந் திகிரி கடவா
        தொழியக் கயிலையுற்றான்
        படவுந் திருவிர லொன்றுவைத்
        தாய்பனி மால்வரைபோல்
        இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள்
        ளாயிருஞ் சோலைதிங்கள்
        தடவுங் கடந்தையுள் தூங்கானை
        மாடத்தெந் தத்துவனே.     4.110.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.111 பசுபதி - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1031    சாம்பலைப் பூசித் தரையிற்
        புரண்டுநின் றாள்பரவி
        ஏம்பலிப் பார்கட் கிரங்குகண்
        டாயிருங் கங்கையென்னுங்
        காம்பலைக் கும்பணைத் தோளி
        கதிர்ப்பூண் வனமுலைமேற்
        பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை
        யாளும் பசுபதியே.     4.111.1
    1032    உடம்பைத் தொலைவித்துன் பாதந்
        தலைவைத்த உத்தமர்கள்
        இடும்பைப் படாமல் இரங்குகண்
        டாயிரு ளோடச்செந்தீ
        அடும்பொத் தனைய அழன்மழு
        வாவழ லேயுமிழும்
        படம்பொத் தரவரை யாயெம்மை
        யாளும் பசுபதியே.     4.111.2
    1033    தாரித் திரந்தவி ராவடி
        யார்தடு மாற்றமென்னும்
        மூரித் திரைப்பௌவ நீக்குகண்
        டாய்முன்னை நாளொருகால்
        வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை
        வேள்வெந்து வீழச்செந்தீப்
        பாரித்த கண்ணுடை யாயெம்மை
        யாளும் பசுபதியே.     4.111.3
    1034    ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன்
        பாத மிறைஞ்சுகின்றார்
        அருவினைச் சுற்றம் அகல்விகண்
        டாயண்ட மேயணவும்
        பெருவரைக் குன்றம் பிளிறப்
        பிளந்துவேய்த் தோளியஞ்சப்
        பருவரைத் தோலுரித் தாயெம்மை
        யாளும் பசுபதியே.     4.111.4
    1035    இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன்
        பாத மிறைஞ்சுகின்றார்க்
        கடர்க்கின்ற நோயை விலக்குகண்
        டாயண்டம் எண்டிசையுஞ்
        சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை
        யோடுஞ் சுரும்புதுன்றிப்
        படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை
        யாளும் பசுபதியே.     4.1115
    1036    அடலைக் கடல்கழி வான்நின்
        னடியிணை யேயடைந்தார்
        நடலைப் படாமை விலக்குகண்
        டாய்நறுங் கொன்றை திங்கள்
        சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ்
        சூளா மணிகிடந்து
        படரச் சுடர்மகு டாயெம்மை
        யாளும் பசுபதியே.     4.111.6
    1037    துறவித் தொழிலே புரிந்துன்
        சுரும்படி யேதொழுவார்
        மறவித் தொழிலது மாற்றுகண்
        டாய்மதின் மூன்றுடைய
        அறவைத் தொழில்புரிந் தந்தரத்
        தேசெல்லு மந்திரத்தேர்ப்
        பறவைப் புரமெரித் தாயெம்மை
        யாளும் பசுபதியே.     4.111.7
        இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.     4.111.8-9
    1038    சித்தத் துருகிச் சிவனெம்
        பிரானென்று சிந்தையுள்ளே
        பித்துப் பெருகப் பிதற்றுகின்
        றார்பிணி தீர்த்தருளாய்
        மத்தத் தரக்கன் இருபது
        தோளு முடியுமெல்லாம்
        பத்துற் றுறநெரித் தாயெம்மை
        யாளும் பசுபதியே.     4.111.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.112 சரக்கறை - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1039    விடையும் விடைப்பெரும் பாகாவென்
        விண்ணப்பம் வெம்மழுவாட்
        படையும் படையாய் நிரைத்தபல்
        பூதமும் பாய்புலித்தோல்
        உடையு முடைதலை மாலையும்
        மாலைப் பிறையொதுங்குஞ்
        சடையு மிருக்குஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.1
    1040    விஞ்சத் தடவரை வெற்பாவென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        சங்கக் கலனுஞ் சரிகோ
        வணமுந் தமருகமும்
        அந்திப் பிறையும் அனல்வா
        யரவும் விரவியெல்லாஞ்
        சந்தித் திருக்குஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.2
    1041    வீந்தார் தலைகல னேந்தீயென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        சாந்தாய வெந்த தவளவெண்
        ணீறுந் தகுணிச்சமும்
        பூந்தா மரைமேனிப் புள்ளி
        யுழைமா னதள்புலித்தோல்
        தாந்தா மிருக்குஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.3
    1042    வெஞ்சமர் வேழத் துரியாயென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        வஞ்சமா வந்த வருபுனற்
        கங்கையும் வான்மதியும்
        நஞ்சமா நாகம் நகுசிர
        மாலை நகுவெண்டலை
        தஞ்சமா வாழுஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.4
    1043    வேலைக் கடல்நஞ்ச முண்டாயென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        காலற் கடந்தா னிடங்கயி
        லாயமுங் காமர்கொன்றை
        மாலைப் பிறையும் மணிவா
        யரவும் விரவியெல்லாஞ்
        சாலக் கிடக்குஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.5
    1044    வீழிட்ட கொன்றையந் தாராயென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        சூழிட் டிருக்குநற் சூளா
        மணியுஞ் சுடலைநீறும்
        ஏழிட் டிருக்குநல் லக்கு
        மரவுமென் பாமையோடுந்
        தாழிட் டிருக்குஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.6
    1045    விண்டார் புரமூன்று மெய்தாயென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        தொண்டா டியதொண் டடிப்பொடி
        நீறுந் தொழுதுபாதங்
        கண்டார்கள் கண்டிருக் குங்கயி
        லாயமுங் காமர்கொன்றைத்
        தண்டார் இருக்குஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.7
    1046    விடுபட்டி ஏறுகந் தேறீயென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        கொடுகொட்டி கொக்கரை தக்கை
        குழல்தாளம் வீணைமொந்தை
        வடுவிட்ட கொன்றையும் வன்னியும்
        மத்தமும் வாளரவுந்
        தடுகுட்ட மாடுஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.8
    1047    வெண்டிரைக் கங்கை விகிர்தாவென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        கண்டிகை பூண்டு கடிசூத்
        திரமேற் கபாலவடங்
        குண்டிகை கொக்கரை கோணற்
        பிறைகுறட் பூதப்படை
        தண்டிவைத் திட்ட சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.9
    1048    வேதித்த வெம்மழு வாளீயென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        சோதித் திருக்குநற் சூளா
        மணியுஞ் சுடலைநீறும்
        பாதிப் பிறையும் படுதலைத்
        துண்டமும் பாய்புலித்தோல்
        சாதித் திருக்குஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.10
    1049    விவந்தா டியகழல் எந்தாயென்
        விண்ணப்பம் மேலிலங்கு
        தவந்தா னெடுக்கத் தலைபத்
        திறுத்தனை தாழ்புலித்தோல்
        சிவந்தா டியபொடி நீறுஞ்
        சிரமாலை சூடிநின்று
        தவந்தா னிருக்குஞ் சரக்கறை
        யோவென் றனிநெஞ்சமே.     4.112.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.113 தனி - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1050    வெள்ளிக் குழைத்துணி போலுங்
        கபாலத்தன் வீழ்ந்திலங்கு
        வெள்ளிப் புரியன்ன வெண்புரி
        நூலன் விரிசடைமேல்
        வெள்ளித் தகடன்ன வெண்பிறை
        சூடிவெள் ளென்பணிந்து
        வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்
        பூசிய வேதியனே.     4.113.1
    1051    உடலைத் துறந்துல கேழுங்
        கடந்துல வாததுன்பக்
        கடலைக் கடந்துய்யப் போயிட
        லாகுங் கனகவண்ணப்
        படலைச் சடைப்பர வைத்திரைக்
        கங்கை பனிப்பிறைவெண்
        சுடலைப் பொடிக்கட வுட்கடி
        மைக்கண் துணிநெஞ்சமே.     4.113.2
    1052    முன்னே யுரைத்தால் முகமனே
        யொக்குமிம் மூவுலகுக்
        கன்னையும் அத்தனு மாவா
        யழல்வணா நீயலையோ
        உன்னை நினைந்தே கழியுமென்
        னாவி கழிந்ததற்பின்
        என்னை மறக்கப் பெறாயெம்
        பிரானுன்னை வேண்டியதே.     4.113.3
    1053    நின்னையெப் போது நினையலொட்
        டாய்நீ நினையப்புகிற்
        பின்னையப் போதே மறப்பித்துப்
        பேர்த்தொன்று நாடுவித்தி
        உன்னையெப் போதும் மறந்திட்
        டுனக்கினி தாயிருக்கும்
        என்னையொப் பாருள ரோசொல்லு
        வாழி இறையவனே.     4.113.4
    1054    முழுத்தழல் மேனித் தவளப்
        பொடியன் கனகக்குன்றத்
        தெழிற்பெருஞ் சோதியை எங்கள்
        பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
        தொழப்படுந் தேவர் தொழப்படு
        வானைத் தொழுதபின்னை
        தொழப்படுந் தேவர்தம் மால்தொழு
        விக்குந்தன் தொண்டரையே.     4.113.5
    1055    விண்ணகத் தான்மிக்க வேதத்
        துளான்விரி நீருடுத்த
        மண்ணகத் தான்திரு மாலகத்
        தான்மரு வற்கினிய
        பண்ணகத் தான்பத்தர் சித்தத்
        துளான்பழ நாயடியேன்
        கண்ணகத் தான்மனத் தான்சென்னி
        யானெங் கறைக்கண்டனே.     4.113.6
    1056    பெருங்கடல் மூடிப் பிரளயங்
        கொண்டு பிரமனும்போய்
        இருங்கடல் மூடி இறக்கும்
        இறந்தான் களேபரமுங்
        கருங்கடல் வண்ணன் களேபர
        முங்கொண்டு கங்காளராய்
        வருங்கடல் மீளநின் றெம்மிறை
        நல்வீணை வாசிக்குமே.     4.113.7
    1057    வானந் துளங்கிலென் மண்கம்ப
        மாகிலென் மால்வரையுந்
        தானந் துளங்கித் தலைதடு
        மாறிலென் தண்கடலும்
        மீனம் படிலென் விரிசுடர்
        வீழிலென் வேலைநஞ்சுண்
        டூனமொன் றில்லா ஒருவனுக்
        காட்பட்ட உத்தமர்க்கே.     4.113.8
    1058    சிவனெனும் நாமந் தனக்கே
        யுடையசெம் மேனியெம்மான்
        அவனெனை ஆட்கொண் டளித்திடு
        மாகில் அவன்றனையான்
        பவனெனு நாமம் பிடித்துத்
        திரிந்துபன் னாளழைத்தால்
        இவனெனைப் பன்னாள் அழைப்பொழி
        யானென் றெதிர்ப்படுமே.     4.113.9
    1059    என்னையொப் பாருன்னை எங்ஙனம்
        காண்பர் இகலியுன்னை
        நின்னையொப் பார்நின்னைக் காணும்
        படித்தன்று நின்பெருமை
        பொன்னையொப் பாரித் தழலை
        வளாவிச்செம் மானஞ்செற்று
        மின்னையொப் பார மிளிருஞ்
        சடைக்கற்றை வேதியனே.     4.113.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.114 தனி - திருவிருத்தம்

    திருச்சிற்றம்பலம்

    1060    பவளத் தடவரை போலுந்திண்
        டோ ள்களத் தோள்மிசையே
        பவளக் குழைதழைத் தாலொக்கும்
        பல்சடை அச்சடைமேற்
        பவளக் கொழுந்தன்ன பைம்முக
        நாகமந் நாகத்தொடும்
        பவளக்கண் வால மதியெந்தை
        சூடும் பனிமலரே.     4.114.1
    1061    முருகார் நறுமலர் இண்டை
        தழுவிவண் டேமுரலும்
        பெருகா றடைசடைக் கற்றையி
        னாய்பிணி மேய்ந்திருந்த
        இருகாற் குரம்பை யிதுநா
        னுடைய திதுபிரிந்தாற்
        தருவாய் எனக்குன் திருவடிக்
        கீழோர் தலைமறைவே.     4.114.2
    1062    மூவா உருவத்து முக்கண்
        முதல்வமீக் கூரிடும்பை
        காவா யெனக்கடை தூங்கு
        மணியைக்கை யாலமரர்
        நாவா யசைத்த வொலியொலி
        மாறிய தில்லையப்பாற்
        தீயாய் எரிந்து பொடியாய்க்
        கழிந்த திரிபுரமே.     4.114.3
    1063    பந்தித்த பாவங்கள் அம்மையிற்
        செய்தன இம்மைவந்து
        சந்தித்த பின்னைச் சமழ்ப்பதென்
        னேவந் தமரர்முன்னாள்
        முந்திச் செழுமல ரிட்டு
        முடிதாழ்த் தடிவணங்கும்
        நந்திக்கு முந்துற ஆட்செய்கி
        லாவிட்ட நன்னெஞ்சமே.     4.114.4
    1064    அந்திவட் டத்திளங் கண்ணிய
        னாறமர் செஞ்சடையான்
        புந்திவட் டத்திடைப் புக்குநின்
        றானையும் பொய்யென்பனோ
        சந்திவட் டச்சடைக் கற்றை
        யலம்பச் சிறிதலர்ந்த
        நந்திவட் டத்தொடு கொன்றை
        வளாவிய நம்பனையே.     4.114.5
    1065    உன்மத் தகமலர் சூடி
        உலகந் தொழச்சுடலைப்
        பன்மத் தகங்கொண்டு பல்கடை
        தோறும் பலிதிரிவான்
        என்மத் தகத்தே இரவும்
        பகலும் பிரிவரியான்
        தன்மத் தகத்தோர் இளம்பிறை
        சூடிய சங்கரனே.     4.114.6
    1066    அரைப்பா லுடுப்பன கோவணச்
        சின்னங்கள் ஐயமுணல்
        வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி
        வாழ்க்கைக்கு வானிரைக்கும்
        இரைப்பா படுதலை யேந்துகை
        யாமறை தேடுமெந்தாய்
        உரைப்பார் உரைப்பன வேசெய்தி
        யாலெங்கள் உத்தமனே.     4.114.7
    1067    துறக்கப் படாத உடலைத்
        துறந்துவெந் தூதுவரோ
        டிறப்பன் இறந்தால் இருவிசும்
        பேறுவன் ஏறிவந்து
        பிறப்பன் பிறந்தாற் பிறையணி
        வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
        மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங்
        கிடந்து மறுகிடுமே.     4.114.8
    1068    வேரி வளாய விரைமலர்க்
        கொன்றை புனைந்தனகன்
        சேரி வளாயவென் சிந்தை
        புகுந்தான் திருமுடிமேல்
        வாரி வளாய வருபுனற்
        கங்கை சடைமறிவாய்
        ஏரி வளாவிக் கிடந்தது
        போலும் இளம்பிறையே.     4.114.9
    1069    கன்னெடுங் காலம் வெதும்பிக்
        கருங்கடல் நீர்சுருங்கிப்
        பன்னெடுங் காலம் மழைதான்
        மறுக்கினும் பஞ்சமுண்டென்
        றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ்
        சேயிமை யாதமுக்கண்
        பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண்
        டீரிப் புகலிடத்தே.     4.114.10
    1070    மேலு மறிந்திலன் நான்முகன்
        மேற்சென்று கீழிடந்து
        மாலு மறிந்திலன் மாலுற்ற
        தேவழி பாடுசெய்யும்
        பாலன் மிசைச்சென்று பாசம்
        விசிறி மறிந்தசிந்தைக்
        கால னறிந்தான் அறிதற்
        கரியான் கழலடியே.     4.114.11

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.