தமிழக அரசு வழங்கி வரும் இலவசத் திட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதிமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போல், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமணிய பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் மக்களுக்கு வழங்கும் இலவசத் திட்டங்களை சட்டப்படி லஞ்சமாக கருத முடியாத எனவும் அதே வேளையில் இலவசத் திட்டங்கள் மக்களை திசை திருப்புகின்றன என்பதை மறுக்க முடியாது என்றும் தீர்ப்பு வழங்கினர்.
|