LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

பிரெட்ரிக் ஏங்கெல்ஸ்

முதலாளித்துவ சமூகத்தில் சிந்தனைகளும் , செயல்பாடுகளும் ,

பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன .


பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் (Friedrich Engels) என்பவர் கார்ல் மார்க்ஸின் அருமையான நண்பர் . இவர் இல்லை என்றால் மார்க்ஸின் உழைப்பு உலகுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்திருக்காது . ஏங்கெல்ஸ் மிகப்பெரிய அறிஞர் , தத்துவஞானி , எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் . தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகக்கட்டுப்பாடான ஒழுங்கு நிறைந்தவர் . ஏங்கெல்ஸ் 1820 ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று புரூசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் பிறந்தார் . சிறுவனாக இருக்கும்பொழுதே மதங்களின்மீதும் , முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார் . கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதினார் .

தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்ஸை முன்னிலைப்படுத்தினார் . கார்ல் மார்க்ஸ் மூலதனம் என்னும் நூலை வெளியிட உதவினார் . மார்க்ஸ் இறந்த பிறகு மூலதனத்தின் 2 ஆம் ,3 ஆம் பாகங்கள் வெளிவர முழுபங்கு வகித்தவர் ஏங்கெல்ஸ் . பாட்டாளிகள் இழப்பதற்கு அவர்களின் அடிமைத்தனங்களைத் தவிர ஏதுமில்லை . ஆனால் பாட்டாளிகள் பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் இருக்கிறது . ஆகவே உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என மார்க்ஸ் உடன் இணைந்து குரல் கொடுத்தார் . தன் சொத்தை மார்க்ஸின் குழந்தைக்கு எழுதி வைத்தார் . இவர் 1895 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 இல் இயற்கை எய்தினார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.