LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

நட்பு

 

1. மனித வாழ்க்கையில் விலைமதிக்க ஒண்ணாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் உறுதுணையாகி, சுக துக்கங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பான்மைதான் நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.
2.பொருளாதாரத்தையும் ஒழுக்கத்தையும் குலைக்கும் நோக்கத்தோடு ஒருவர் மற்றொருவரோடு நட்புக் கொள்ள இடமிருக்கின்றது. சமுதாயத்தில் இத்தகைய நட்புதான் அதிகமாக வளர்ந்திருக்கின்றது. இத்தகைய நட்பு வளர வளர அதனூடே தொக்கி நிற்கும் ஆபத்தும் வளர்ந்துகொண்டே வரும். ஆகவே இத்தகைய நட்பை ஆரம்ப காலத்திலேயே உணர்த்து முறித்து விடுவது நலம். 
3. ஒரு நீதிபதி, குற்றம் சுமர்த்தப்பட்டுத் தன் எதரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாகவும் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தே நீதி விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளிதான் என்று கொடுக்கும் தீர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அவசியமானால்தான் அளிக்கிறார். அதுவரையில் அந்தத் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அதே போன்று ஒழுங்கீனம், பொருள் தேவை மிகுந்துள்ள இக்காலத்தில், ஒருவர் தன்னோடு நட்பு கொள்ள வந்தால் அவர் ஏன் சுயநலவாதியாக, சுரண்டி வாழ்பவராக இருக்கக்கூடாது என்ற கருத்தை முதலில் உருவாக்கி மனத்தில் வைத்துக்கொண்டே அவரோடு நட்புக் கொண்டு அவர் நடத்தையைப் பற்றி ஆராய வேண்டும். சந்தர்ப்பங்கள்தான் மனித உள்ளதை உரைபோடும் கல். ஆகவே உறவாடுபவர் உள்நோக்கம் சீக்கிரம் தெளிவுபடும். அதன் பிறகே அவர் குற்றமற்றவர், நட்புக்கு ஒத்தவர் என்ற தீர்மானத்திற்கு வரவேண்டும். நீதிபதி நிரபராதி என்ற முடிவை முன்வைத்து குற்றவாளி என்ற முடிவைப் பின்கொள்ளுகின்றார். ஆனால் நட்பை ஆராய்வோர் முதலில் கலங்கமுடையோன் என்ற கருத்தை வைத்துச் சோதனைக்குப் பின்னரே களங்கமற்றவன், நண்பன் என்ற கருத்தை முடிவாகக் கொள்ள வேண்டும்.
4. நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு - சீடன், கணவன் - மனைவி, ஆசிரியர் - மாணவன், எசமான் - பணியாள், பொருட்களை விற்பவர் - வாங்குவோர், துணைவர்கள் ஆகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம். தேவை, பழக்கம், அறிவின் வளர்ச்சி என்ற மூன்றாலும் ஒவ்வொருவரும் வேறுபட்டிருப்பதனால் நட்பு என்றும் நிரந்தரம் என்று கொள்ள முடியாது. அது நீடிக்க இருக்கும் வாய்ப்பை விட குலைந்துபோக இருக்கும் வாய்ப்புத்தான் அதிகம்.
5. சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு அத்தகைய நண்பர்கள் பால் கொண்ட நம்பிக்கை மயக்கத்தில் எத்துணையோ விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. பொருட்கள், பதவி, மனைவி, மக்கள், கெளரவம் இவற்றை துரோகிகள் நட்பினால் இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்க்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள் தான் கொஞ்சமா ?
6. எதிரிகளால் ஏற்படவிருக்கும் கெடுதல்களைப் புரிந்து கொள்ள முடியும்; முன் ஏற்பாடோடும் இருக்கலாம். நண்பர்கள் என்ற முத்திரையில் உலாவும் நயவஞ்சகர்கள் அடுத்த நிமிடத்தில் என்ன செய்வார்கள் என்று கூடப் புரிந்து கொள்ள முடியாது. இதற்கு உலக சரித்திரம் சான்று கூறுகின்றது.
7. எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையேதான் அது வலுவுள்ளதாக இருக்கும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் குறுக்கிட்டால் - இணைந்தால் - நட்புக்கு எவ்விதத்திலேனும் ஊறு உண்டாகிவிடும்.
8. நல்ல நட்பு கிடைக்காவிட்டாலும் சரி, ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.
9. நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள சமுதாயத்தில், அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம்பெற்றோர் எண்ணிகையை விட வாழ்வில் ஏமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.
10. அறிவோடும் விழிபோடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, ஆகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ ஆற்றலையோ உதவியும் பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத - ஏமாற்றமளிக்காத - உயர்முறையாகும்.
- வேதாத்திரி மகரிஷி

1. மனித வாழ்க்கையில் விலைமதிக்க ஒண்ணாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் உறுதுணையாகி, சுக துக்கங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பான்மைதான் நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.

2.பொருளாதாரத்தையும் ஒழுக்கத்தையும் குலைக்கும் நோக்கத்தோடு ஒருவர் மற்றொருவரோடு நட்புக் கொள்ள இடமிருக்கின்றது. சமுதாயத்தில் இத்தகைய நட்புதான் அதிகமாக வளர்ந்திருக்கின்றது. இத்தகைய நட்பு வளர வளர அதனூடே தொக்கி நிற்கும் ஆபத்தும் வளர்ந்துகொண்டே வரும். ஆகவே இத்தகைய நட்பை ஆரம்ப காலத்திலேயே உணர்த்து முறித்து விடுவது நலம். 

3. ஒரு நீதிபதி, குற்றம் சுமர்த்தப்பட்டுத் தன் எதரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாகவும் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தே நீதி விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளிதான் என்று கொடுக்கும் தீர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அவசியமானால்தான் அளிக்கிறார். அதுவரையில் அந்தத் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அதே போன்று ஒழுங்கீனம், பொருள் தேவை மிகுந்துள்ள இக்காலத்தில், ஒருவர் தன்னோடு நட்பு கொள்ள வந்தால் அவர் ஏன் சுயநலவாதியாக, சுரண்டி வாழ்பவராக இருக்கக்கூடாது என்ற கருத்தை முதலில் உருவாக்கி மனத்தில் வைத்துக்கொண்டே அவரோடு நட்புக் கொண்டு அவர் நடத்தையைப் பற்றி ஆராய வேண்டும். சந்தர்ப்பங்கள்தான் மனித உள்ளதை உரைபோடும் கல். ஆகவே உறவாடுபவர் உள்நோக்கம் சீக்கிரம் தெளிவுபடும். அதன் பிறகே அவர் குற்றமற்றவர், நட்புக்கு ஒத்தவர் என்ற தீர்மானத்திற்கு வரவேண்டும். நீதிபதி நிரபராதி என்ற முடிவை முன்வைத்து குற்றவாளி என்ற முடிவைப் பின்கொள்ளுகின்றார். ஆனால் நட்பை ஆராய்வோர் முதலில் கலங்கமுடையோன் என்ற கருத்தை வைத்துச் சோதனைக்குப் பின்னரே களங்கமற்றவன், நண்பன் என்ற கருத்தை முடிவாகக் கொள்ள வேண்டும்.

4. நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு - சீடன், கணவன் - மனைவி, ஆசிரியர் - மாணவன், எசமான் - பணியாள், பொருட்களை விற்பவர் - வாங்குவோர், துணைவர்கள் ஆகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம். தேவை, பழக்கம், அறிவின் வளர்ச்சி என்ற மூன்றாலும் ஒவ்வொருவரும் வேறுபட்டிருப்பதனால் நட்பு என்றும் நிரந்தரம் என்று கொள்ள முடியாது. அது நீடிக்க இருக்கும் வாய்ப்பை விட குலைந்துபோக இருக்கும் வாய்ப்புத்தான் அதிகம்.

5. சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு அத்தகைய நண்பர்கள் பால் கொண்ட நம்பிக்கை மயக்கத்தில் எத்துணையோ விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. பொருட்கள், பதவி, மனைவி, மக்கள், கெளரவம் இவற்றை துரோகிகள் நட்பினால் இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்க்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள் தான் கொஞ்சமா ?

6. எதிரிகளால் ஏற்படவிருக்கும் கெடுதல்களைப் புரிந்து கொள்ள முடியும்; முன் ஏற்பாடோடும் இருக்கலாம். நண்பர்கள் என்ற முத்திரையில் உலாவும் நயவஞ்சகர்கள் அடுத்த நிமிடத்தில் என்ன செய்வார்கள் என்று கூடப் புரிந்து கொள்ள முடியாது. இதற்கு உலக சரித்திரம் சான்று கூறுகின்றது.

7. எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையேதான் அது வலுவுள்ளதாக இருக்கும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் குறுக்கிட்டால் - இணைந்தால் - நட்புக்கு எவ்விதத்திலேனும் ஊறு உண்டாகிவிடும்.

8. நல்ல நட்பு கிடைக்காவிட்டாலும் சரி, ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.

9. நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள சமுதாயத்தில், அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம்பெற்றோர் எண்ணிகையை விட வாழ்வில் ஏமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.

10. அறிவோடும் விழிபோடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, ஆகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ ஆற்றலையோ உதவியும் பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத - ஏமாற்றமளிக்காத - உயர்முறையாகும்.

- வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 15 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.