LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

3 மாவட்டங்களைச் சேர்ந்த 257 மெட்ரிக் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 257 மெட்ரிக் பள்ளிகளுக்கான  தற்காலிக அங்கீகாரத்தை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். 

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி பெறவேண்டும் என்று நிபந்தனை விதித்து 2018-2019 கல்வியாண்டுக்கு மட்டும் அரசு தற்காலிக அங்கீகாரம் வழங்கி வருகிறது.

அதன்படி இதுவரை 1,153 பள்ளிகளுக்கு அரசு அங்கீகார ஆணை வழங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 257 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆணைகளை 7 பேருக்கு மேடையில் வழங்கினார். பின்னர் மீதமுள்ள 250 பேருக்கும் அவர்களின் இருக்கைக்கு சென்று வழங்கினார்.

அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாணவர்களின் நலன்கருதி அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு இந்த வருடத்திற்கு மட்டும் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான இறுதி முடிவு இன்னும்  2 வாரத்தில் அறிவிக்கப்படும்.

அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகள் வரும்போதும், பள்ளியைவிட்டு செல்லும்போதும் அவர்களின் உருவம் ரேடியோ பிரீக்வன்சி தொழில்நுட்ப (ஆர்.எப்.ஐ.டி.) கருவியில் பதிவாகி அவர்களின் பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி கொண்ட நவீன கருவி ஒரு பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது.

 மாணவிகள் அதிகம் படிக்கும் குறைந்தது ஆயிரம் அரசுப் பள்ளிகளில் இந்த கருவியை பொருத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கான விடைத்தாள்களும் (ஓ.எம்.ஆர். ஷீட்) டெல்லியில் உள்ள எந்திரம் மூலம் தான் ஸ்கேன் செய்யப்பட்டது. பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் 192 பேரின் மதிப்பெண்கள் மாறியிருந்தது. 

எனவே இதுகுறித்து போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த எந்திரத்தை நாங்கள் வாங்க இருப்பதால் இனிமேல் தவறு நடக்காது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

by Mani Bharathi   on 10 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.