|
||||||||
கருணைக்கிழங்கு மசியல்(yam masiyal) |
||||||||
தேவையானவை: கருணைக்கிழங்கு - 4 மஞ்சள் தூள் - ஒரு டீஸ்ஸ்பூன் இஞ்சி துருவல் - ஒரு டீஸ்ஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு எலுமிச்சம்பழம் - 1 உப்பு,எண்ணெய் - தேவைகேற்ப கறிவேப்பிலை சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்ஸ்பூன் செய்முறை: 1.நன்கு அலசிய கருணைக்கிழங்கை நான்கு துண்டங்களாக வெட்டி குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.குக்கரில் இருந்து எடுத்து கிழங்கின் தோலை உரித்துவிட்டு ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். 2.ஒரு வாணலியில் எண்ணெய் உற்றி அதனுடன் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து மசித்த கருணைக்கிழங்குடன் தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.இஞ்சித் துருவலையும் சேர்க்கவேண்டும். 3.இறக்குவதற்கு முன்பு எலுமிச்சம்பழத்தை பிழிந்து நன்கு கலந்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும். |
||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|