|
|||||
கஜா புயல்: 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! |
|||||
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் 15- ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதாகவும், 15 -ந் தேதி மாலை பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் எனவும், இதனால் தமிழகம், புதுச்சேரியில் அதிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் நாகை, காரைக்கால் மாவட்டங்களில்15-ந் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து இருந்தனர். கஜா புயல் காரணமாக மாலை 5 மணியில் இருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி கிடையாது எனவும், காற்றின் வேகத்தைப் பொறுத்து பாம்பன் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர், திருச்சி பாரதிதாசன், புதுச்சேரி, திருவாரூர் மத்திய பல்கலையில் 15- ந் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் இடையே, கஜா புயல் மணிக்கு 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. |
|||||
by Mani Bharathi on 14 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|