LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கஜா புயலால் சாய்ந்த மரங்களுக்கு புத்துயிர் தரமுடியும்: வேளாண்மை அதிகாரி தகவல்!

கஜா புயலால் சாய்ந்த மரங்களுக்கு புத்துயிர் தரமுடியும் என வேளாண்மை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் மா மரங்கள், பலா மரங்கள், தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இந்த மரங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும் என சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து வேளாண் அறிவியல் மைய இயக்குனர் செந்தூர்குமரன் கூறியதாவது: 

கஜா புயலால் சாய்ந்த மரங்களை ஒரு வாரத்திற்குள், அதே இடத்திலோ, வேறு இடத்திலோ நட்டு வைத்தால் ஒரு மாதத்திற்குள் மீண்டும் துளிர்விடும். எவ்வகை மரங்களாக இருந்தாலும் வேர்ப்பகுதி சேதமடையாமல் இருந்தால் காப்பாற்றலாம். 

நிலத்தில் 6 அடி நீளம், 6 அடி அகலம், 6 முதல் 8 அடி ஆழத்தில் பள்ளம் தோண்ட வேண்டும். சாய்ந்த மரங்களின் கிளைகளை 1 அடி விட்டு நேராக ‘உட்கட்டர்’ அல்லது ரம்பம் கொண்டு அறுக்க வேண்டும். பின்பு காப்பர் ஆக்ஸி குளோரைடு (COC) எனப்படும் பேஸ்ட்டை தடவி கிளைகள் கருகிவிடாமல் பாலித்தீன் கவர் கொண்டு சுற்ற வேண்டும்.

குழியின் கீழே ஒரு அடிக்கு ஆற்று மணலையும், இரண்டு அடிக்கு மேலே செம்மண்ணையும், மேலே குப்பை மணலையும் சேர்க்க வேண்டும். நடுவில் வேர் பதியும்படி கிரேன் மூலம் நட்டு வைக்க வேண்டும். பின்னர் வேர்கள் அழுகாமல் இருக்க சில வகையான உரங்கள் இடவேண்டும்.

இதைத்தொடர்ந்து தினந்தோறும் தண்ணீர் ஊற்றினால், 15 நாட்களுக்குள் துளிர்விட ஆரம்பிக்கும். அடுத்த ஆண்டிலேயே மரங்கள் காய்க்க ஆரம்பித்துவிடும். 

தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தால், அவற்றின் மட்டைகளை சீவி விட்டு, இதேபோன்று நட்டு வைத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பலன் தந்துவிடும்.

எந்த வகை மரங்களையும் விறகுக்காக வெட்டாமல் மீண்டும் அதை பக்கத்து இடத்தில் வைத்தால் கண்டிப்பாக வளர்ந்து நல்ல முறையில் பலன் தரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 21 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.