இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில், ஆமதாபாத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் நடந்த 2வது டெஸ்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது.இதனால் இந்த இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.இதற்கிடையே 3வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்கியது இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.உணவு இடைவேளையின் போது இந்திய அணி 29 ஓவர்களில் இரண்டு விக்கெட்டை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் காம்பீர் 50 ரன்களுடனும், சச்சின் 1 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர் சேவாக் 23 ரன்களில் ரன் அவுட் ஆனார்.புஜார 16 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
|