LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

காந்தியப் பெருந்தலைவர்

ஒரு காலத்தில் சென்னையில் குடியிருக்க வாடகை வீடு கிடைப்பதே பெரும்பாடாக இருந்ததாம் . அதையொட்டி ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுவதுண்டு . மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் தவறி விழுந்துவிட்ட ஒருவன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான் . கரையில் போன ஒருவன் “ யாரப்பா நீ ? உன் பெயர் என்ன ? எந்தத் தெரு ? வீட்டு நம்பர் என்ன ? என்று விசாரித்தார் . அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன் . முதலில் என்னைக் காப்பாற்றுங்களேன் ” என்றான் . முதலில் உன் விலாசத்தைச் சொல் என்றான் கரையிலிருந்தவன் . தண்ணீரில் கிடந்தவன் திக்கித் திணறி விலாசத்தைச் சொன்னான் . அவ்வளவுதான் அவனை அம்போ என்று விட்டு விட்டு அநத் விலாசததை நோக்கி ஓடினான் விசாரித்தவன் . வீட்டுக்காரரிடம் “ உங்கள் வீட்டில் கு டியிருந்தவர் மயிலாப்பூர் குளத்தில் விழுந்து விட்டார் . அந்த வீட்டை எனக்கு வாடகைக்கு கொடுங்கள் ” என்றான் . அது முடியாதே அரை மணி நேரத்துக்கு முந்தி ஏற்கனவே ஒருவர் அதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார் . அவர்தான் இதற்கு முந்தி குடியிருந்தவரை தெப்பக்குளத்தில் தள்ளி விட்டாராம் . அவர் உறுதி சொன்ன பிறகுதான் அட்வான்ஸ் வாங்கினேன் . சுயநலத்துக்காக மற்றவர்களை நோக வைப்பது தான்மனித இயல்பு . மற்றவர்கள் நலனுக்காகத தன்னை நோகவைத்துக்கொள்வது தான் காந்தியம் .

கர்ம வீரர் காமராசர் அவர்களுக்குக் கறுப்புக் காந்தி என்ற பெயர் உண்டு . உள்ளத் தூய்மையில் , அகிம்சை உணர்வில் மனிதாபிமானத்தில் , ஏழைகளை நேசித்ததில் காமராசர் காந்தியடிகள் போன்றவரே . மேல் சட்டையைக் கழற்றிவிட்டு கையில் ஓர் ஊன்று கோலைக் கொடுத்து விட்டாால் காமராசர் காந்தியாகவே மாறிவிடுவார் என்று எழுத்தாளர் சாவி சொன்னது மிகப்பொருத்தம்தான் . தமிழகத்தில் பெருந்தலைவர் செய்த ஆட்சி மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது . முழு உரிமை , வறுமை ஒழிப்பு , சமவாய்ப்பு , அறியாமை போக்கல் என்ற ஜனநாயகப் பண்புகளை அடிப்படையாகக்கொண்டது அவரது ஆட்சி . வன்முறையை , அடக்குமுறையைக் கையாளாமல் சமதர்ம ஆட்சியை அமைக்க இயலும் என்று உறுதியாக நம்பினார் . ஜனநாயக சோஷலிசம் என்ற கொள்கை வகுக்கப்பட்டிருந்தாலும் பெயர் விளக்கத்தை விட செயலாக்கத்திற்கே சிறப்பிடம் கொடுத்தார் பெருந்தலைவர் காமராசர் . நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் சம உரிமையும் , சமவாய்ப்புக்களும் பெற்று வாழ வேண்டும் . அதற்குப் பயன்படும் திட்டத்தின் பெயர் எதுவாக இருந்தாலென்ன ? என்றார் . அவர் சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காக ஏற்பட்டவை . சட்டத்திற்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை என்பது அவரது கொள்கை .

மற்றவர்களை அடிக்கடி மன்னித்து விடு , உன்னை மட்டும் ஒரு நாளும் மன்னிக்காதே . இதுவே மாமனிதர்களின் தாரக மந்திரம் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.