LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

காந்தியத்தோடு இணைந்த காந்தியம்

 இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் மிகவும உடல் நலம் இல்லாத நிலையில் கூட ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் .

இதைக் கண்ட அவர் மனைவி “ ஏன் இந்த நிலையில் கூட எழுதுகிறீர்கள் ? நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு உடல் நலத்தைக் கவனிக்கக் கூடாதா ” என்று கேட்டார் .

அதற்கு பிரேம்சந்த் “ ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான் . எண்ணெயும்திரியும் எவ்வளவு காலம் இருக்கிறதோ , அவ்வளவு காலம் அது ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும் . எண்ணெய்தீர்ந்தவுடன் தானே விளக்கு அணைந்து விடும் ” என்று பதில் கூறினார் . இப்படிப்பட்ட நேரம் பெருந்தலைவர் வாழ்விலும் வந்தது .

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம்தேதி காலை
6-30 மணிக்குத் தவைர் காமராசரிடம் காலைப் பத்திரிகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டது . படித்து விட்டுக் குளித்துச் சிற்றுண்டி சாப்பிட்டார் .

10 மணிக்கு டாக்டர் வந்து இன்சுலின் ஊசிபோட்டார் . 11 மணி அளவில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 50 பேர்தலவைரைப் பார்க்க வந்தனர் . 3 நிமிடம் அவர்களுடன் இருந்த தலைவர் அதற்கு மேல் நிற்க முடியாமல் விடை பெற்றார் .

12 மணியளவில் காங்கிரஸ் செயலாளர்களுக்குப் போன்செய்து தன்னை வந்து பார்க்கும்படிக் கூறினார் . பத்திரிக்கை நிருபரான தணிகைத் தம்பி என்பவர் தலைவரைச் சந்தித்தார் . 1-30 மணியளவில் மதிய உணவு உண்டார் . தலையில் அதிகம் வியர்ப்பதாகத் தலைவர் கூறினார் . அதற்கு உதவியாளர் , “ நீங்கள் எப்போது பார்த்தாலும் அதிகமாக யோசனை செய்வதால் வியர்ப்பது போலப் பிரமை ” என்றார் .

சாப்பிட்டபின் பாத்ரூம் சென்று வந்து தனது படுக்கையறையில் ஓய்வடுத்தார் . அவர் மணி அடித்தால்தான் உதவியாளர் உள்ளே செல்வாா . இரண்டு மணிக்கு மணி அடித்து உதவியாளரை அழைத்தார் . தலைவா உடம்பெல்லாம் வியர்த்திருக்கிறது . ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அறையில் வியர்ப்பதைப் பார்த்து உதவியாளர் “ டாக்டரைக் கூப்பிடட்டுமா ” என்று கேட்டார் . டாக்டர் சௌரிராஜனுக்கு போன் செய்து பார்த்தும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை . பின் டாகடர் ஜெயராமைத் தொடர்பு கொண்டு அவரை உடனே வருமாறு அழைத்தனர் .

“ டாக்டர் வந்தால் எழுப்பு விளக்கை அணைத்துவிட்டுப்போ ” என்று கூறி உதவியாளரை வெளியே அனுப்பினார் தலைவர் . மூன்று மணிக்கு டாக்டர் சௌரிராஜன் வந்தார் . தலைவர் கட்டிலில் இடதுபுறம் திரும்பி இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக்கொடுத்தபடி , கால்களை மடக்கியவாறு படுத்திருந்தார் . வழக்கமான அவரது குறட்டை ஒலி கேட்கவில்லை . அது கண்டு சௌரிராஜன் துணுக்குற்றார் . இரண்டு முறை தலைவர் தோளை அசைத்து எழுப்பினார் . பதில் இல்லை . நாடித்துடிப்பைப் பார்க்கலாம என்று ஒரு கையை எடுத்தார் . கை ஜில்லென்று இருந்தது . “ பெரியவர் போய் விட்டாரே ” என்று கதறி அழுதார் .

ஸ்டெதஸ்கோப்பையும் , ரத்த அழுத்தக் கருவியையும் தூக்கி வீசி விட்டு கீழே விழுந்து புரண்டார் . தொடர்ந்து டாக்டர் ஜெயராமன் , டாக்டர் அண்ணாமலை ஆகியோர் வந்து தலைவர் பிரிந்து விட்டார் என்பதை அறிவித்தனர் .

காந்தீயத்தோடு காந்தீயம் இணைந்தது .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.