கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம் சரண் விரைவில், நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.
ராம் சரண் யார் இயக்கத்தில் தமிழில் நடிக்கப்போகிறார் என கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தற்போது, ஒரு தகவல் வெளியாகியுள்ளது, அந்த தகவலின் படி ராம் சரண் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கப்போகிறாராம்.
தற்போது அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கி வரும் கௌதம் மேனன் அடுத்ததாக, ராம் சரனை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் புதிய படத்தை உருவாக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வரவில்லை.
|