தென்னிந்திய நட்சத்திர நடிகர்களை இணைத்து கெளதம் மேனன் ஒரு பிரமாண்டமான படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சிம்பு, நாகசைதன்யா நடிப்பில் "அச்சம் என்பது மடமையடா” படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இதைத் தொடர்ந்து கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் மற்றும் பகத் ஃபாசில் இருவரும் இணையும் புதியப் படத்தை இயக்கவுள்ளார் கெளதம் மேனன். இப்படத்தில் கூடுதலாக சிம்பு மற்றும் அல்லுஅர்ஜூன் இருவரும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான்கு மெகா ஸ்டார்கள் ஒரே படத்தில் நடிக்கவிருப்பதால் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் கெளதம், விரைவில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|