|
|||||
இந்தியாவில் ஜிகா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் உள்ளது: மத்திய அமைச்சர் தகவல்! |
|||||
இந்தியாவில் ஜிகா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் இருப்பதால் மக்கள் அச்சம் அடைய வேண்டியதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கேட்டுக் கொண்டு உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் பீகார் மாணவனுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, அம்மாணவன் தனது சொந்த மாநிலம் சென்ற போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் நடத்திய தீவிர மருத்துவ சோதனையில் சுமார் 29 பேருக்கு இந்த வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் தாக்குதலால் 29 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 3 பேர் கர்ப்பிணிகள் என்றும் அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ராஜஸ்தானுக்குத் தேவையான உதவிகள் மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்கும் பணியில் மத்திய சுகாதார அமைச்சகம் ஈடுபட்டு உள்ளது. மேலும் ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது. நோய் கட்டுப்படுத்தலுக்கான தேசிய மையத்தில் இதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள ஜெய்ப்பூருக்கு 7 மருத்துவ குழுக்கள் சென்றுள்ளன. மேலும் ராஜஸ்தான் சென்றுள்ள தேசிய நோய் தடுப்பு மையம் ஜிகா வைரஸ் பற்றி கண்காணித்து வருகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க அம்மாநில அரசுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். |
|||||
by Mani Bharathi on 10 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|