LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் ஜிகா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் உள்ளது: மத்திய அமைச்சர் தகவல்!

இந்தியாவில் ஜிகா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் இருப்பதால் மக்கள் அச்சம் அடைய வேண்டியதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கேட்டுக்  கொண்டு உள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் பீகார் மாணவனுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, அம்மாணவன் தனது சொந்த மாநிலம் சென்ற போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் நடத்திய தீவிர மருத்துவ சோதனையில் சுமார் 29 பேருக்கு இந்த வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் தாக்குதலால் 29 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 3 பேர் கர்ப்பிணிகள் என்றும் அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ராஜஸ்தானுக்குத் தேவையான உதவிகள் மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்கும் பணியில் மத்திய சுகாதார அமைச்சகம் ஈடுபட்டு உள்ளது. மேலும் ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது. 

நோய் கட்டுப்படுத்தலுக்கான தேசிய மையத்தில் இதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள ஜெய்ப்பூருக்கு 7 மருத்துவ குழுக்கள் சென்றுள்ளன. 

மேலும் ராஜஸ்தான் சென்றுள்ள தேசிய நோய் தடுப்பு மையம் ஜிகா வைரஸ் பற்றி கண்காணித்து வருகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க அம்மாநில அரசுக்கு பிரதமர் மோடி  உத்தரவிட்டு உள்ளார்.

by Mani Bharathi   on 10 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.