LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை உலகெங்கும் கொண்டாட ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் 2018 அக்டோபர் 2ம் நாள் வருகிறது. அன்று தொடங்கி ஓராண்டு முழுவதும் அவரின் 150வது ஜெயந்தி ஆண்டாக அகிலமெங்கும் கொண்டாடப்பட வேண்டும். குறிப்பாக இந்தியாவிலும்,  தமிழகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும்.  இதனை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு முதல் கட்டமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆலோசனைக் குழுக்கள், செயற்குழுக்கள்  அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட வேண்டும். காந்தியின் பெயரால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். மதுக்கடைகளை மூடுவது, அதில் முன்னுரிமை  பெற வேண்டும். விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.  காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையும், அந்த ஆண்டையும் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும். இதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.150 கோடி போதுமானதல்ல.

மாநில அரசுக்கும் சிறப்பு ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.  இதற்கான திட்டங்களைத் தீட்டி அறிவித்து, அக்டோபர் 2ம் நாள் முதல் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.  மத்திய மாநில அரசுகள் காந்தியடிகளின் பிறந்த நாளை மிகச்சிறப்பாக ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

by Mani Bharathi   on 23 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.