LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.3.44 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது- எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில், 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க வகை செய்து, காட்சி அரங்குகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அதில், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி இருந்தன.

நிகழ்ச்சி முடிவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த மாநாட்டில், எவ்வளவு ஒப்பந்தங்கள் வந்தன எவ்வளவு முதலீடுகள் கையெழுத்தாகின என்பது குறித்த தகவல் வெளியிட்டுள்ளார். 

இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. இருநாட்களாக நடைபெற்ற 'தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு' -2019ன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 10 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் ரூ.6300 கோடி முதலீடு செய்ய சிஆர்இடிஏஐ கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் சிஆர்இடிஏஐ கட்டுமான கூட்டமைப்பு தலைவர் அபீப், தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். 

டயர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய எம்.ஆர்.எஃப் நிறுவனம் ரூ.3,100 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. 

தமிழகத்தில் மின்சாரக் கார்கள் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் ரூ.7,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 
மேலும் சிபிசிஎல் பெட்ரோல் நிறுவனம் ரூ.27,000 கோடிக்கும், என்எல்சி நிறுவனம் ரூ.23,800 கோடிக்கும் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.12,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளன. 

எம்.ஆர்.எஃப் நிறுவனம் ரூ.3,100 கோடிக்கும், பிஎஸ்ஏ நிறுவனம் ரூ.1,250 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளன. 

ஐசெர் நிறுவனம் ரூ.1,500 கோடி, சாய் பல்கலைக்கழகம் ரூ.580 கோடி மற்றும் அலைன்ஸ் நிறுவனம் ரூ.9,488 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளனர். 

விழாவில் பேசிய ஃபோர்டு மோட்டார் மேலாண்மை இயக்குநர் மைக்கேல் தமிழகத்தின் வலுவான எதிர்காலத்திற்கு பொறியாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்றும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். 

சென்னையில் தயாரிக்கும் ஃபோர்டு கார்கள் அமெரிக்கா ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி ஆகின்றன என்று அவர் தெரிவித்தார்.  தொழில்துறைக்கு இணக்கமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது ஹூண்டாய் சிஇஓ கிம் கூறினார்.

by Mani Bharathi   on 25 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.