LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மத்திய அரசு துறையில் ஜி-மெயில், யாஹூ பயன்படுத்த தடை !!

சமீபத்தில் அமெரிக்கா மற்ற நாடுகளின் இ-மெயில் மற்றும் தொலைபேசி உரையாடகளை உளவு பார்ப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பல நாடுகள், தங்களின் தகவல் பாரிமாற்றத்திற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளன. 

 

இந்நிலையில், இந்திய அரசு, பல துறைகளின் இ-மெயில் தகவல் பரிமாற்றத்துக்கு, ஜி-மெயில், யாகூ இணையதள சேவைகளை பயன்படுத்த விரைவில் தடைவிதிக்க உள்ளது. இது குறித்து, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலர், சத்யநாராயணா பேசியதாவது, மத்திய அரசின் பல்வேறு துறைகளில், இ- மெயில் மூலமான, தகவல் பரிமாற்றங்களுக்கு, ஜி-மெயில், யாகூ ஆகிய சேவைகள் பயன்படுத்தப் படுகின்றன. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல் பரிமாற்றங்களும், இதன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதில், பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல் பரிமாற்றங்களில், வெளி நபர்கள் ஊடுருவி, விஷமத்தனம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், மத்திய அரசின் துறைகளுக்கான, தகவல் பரிமாற்றத்துக்காக, என்.ஐ.சி., என்ற, பிரத்யேக, இ-மெயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் உள்ள இந்த சேவை குறித்து, மத்திய அமைச்சகங்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவற்றில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட உள்ளன. இதன் பின்னர் வரும் டிசம்பர் மாதம் இ-மெயில் சேவை பயன்பாடிற்கு வரும் என சத்யநாராயணா கூறியுள்ளார்.  

by Swathi   on 29 Oct 2013  0 Comments
Tags: ஜிமெயில்   யாஹூ   மத்திய அரசு அலுவலகங்கள்   அமெரிக்கா உளவு   Gmail   Yahoo   E-Mail  
 தொடர்புடையவை-Related Articles
மத்திய அரசு துறையில் ஜி-மெயில், யாஹூ பயன்படுத்த தடை !! மத்திய அரசு துறையில் ஜி-மெயில், யாஹூ பயன்படுத்த தடை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.